Thursday, November 26, 2009

ராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை



சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை.

நாங்களா ? ப்ரெண்ட்ஸ்...நான், ராம்மோஹன், சுதாகர் மூவரும். சுதாகரின் மொழியில் ஈயும் பீயூமாக. ஒற்றை வார்த்தையில் நட்புக்கு அர்த்தம் சொல்ல என்னால் முடியாது. நாங்கள் சந்தித்தது பணிக்காக சென்னை வந்து வாழ குறைந்த விலை கூரை தேடியபோது கிடைத்த ஒரு இட நெருக்கடி மேன்ஷனில் தான் என்றாலும், நாங்கள் ரொம்பவே ப்ரெண்ட்ஸ். இப்போது நாங்கள் மூவரும் சிட்டிக்கு வெளியே தனியாக வீடு பிடித்து தங்கிவிட்டாலும், எங்கள் ராசி மேன்ஷன் அறையை காலி செய்யாமல் வைத்திருக்கிறோம்..

ராம்மோஹன் மருத்துவப்படிப்பு முடித்து ஹவுஸ் சர்ஜன். அவனது ஹாபி, காட்டு விலங்குகள், காட்டுவாசிகள், அவர்களின் உணவுப்பழக்கங்கள். அடிக்கடி பழனி ஹில்ஸ், கொடைக்கானல், முதுமலைக்காடுகள், நீலகிரி, சங்கராபுரம் மலைப்பகுதிகளில் ட்ரெக் அடிப்பான். பயல் கொஞ்சநாட்களாக மூட் அவுட். விசாரிக்கவேண்டும்.

மற்றபடி இன்னொரு ப்ரெண்ட் சுதாகர்.இப்போதைக்கு வெட்டி. ஒரு அனாதை இல்லத்தில் வளந்தவன். அப்புறம் வளர்ந்த இடம் பிடிக்காமல் வெளியேறியவன் நாங்கள் தங்குமிடம் கொடுத்து அரவணைக்க எங்கள் நட்பானான்..விளம்பர படங்கள் எடுக்கிறேன் என்று கேமராவை தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறான். ராம்மோஹனுக்கு கம்பெனி அவன்தான்..

கம்மிங் பேக் டு த பாய்ண்ட். சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை. எங்கே போனாலும் கேமரா இல்லாமல் போகமாட்டான். அவனுடைய ஷெல்பில் கேமரா அப்படியே இருந்தது. சொல்லாமல் போக அவனுக்கு போக்கிடமில்லை.

எங்கே போயிருப்பான் ? அதுவும் எந்த உடையும் எடுத்துக்கொள்ளாமல்..எனக்கு வேலையே ஓடவில்லை...எல்லோரிடம் இருப்பதுபோல அவனிடமும் வீட்டின் ஒரு சாவி இருக்கிறது. இன்றைக்கு அலுவலகம் முடிந்துவரும்போது வீட்டை திறந்து அவன் அமர்ந்திருக்கமாட்டானா என்று ஏங்கியதென்னவோ உண்மை.

போன் ரிங்கியது...

ராம்மோஹன்..

என்னடா..சுதாகர் ஏதும் போன் பண்ணானா ?

என்னது வீடியோ அனுப்பியிருக்கியா ? எப்போ ? அதுல க்ளூ இருக்கா ? என்னடா கொழப்பற ? சரி நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்துசேரு..

ராம்மோஹனிடம் இருந்து மின்னஞ்சல் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.

வந்திருக்கிறது...

ஒரு வீடியோ பைல்...

ராம்மோஹன் காமிராவை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கிறான்.

அது ஒரு கிச்சன்..

அவன் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ஹாஸ்பிட்டலாக இருக்குமோ ??

படம் கட்டாகி இடையில் இருந்து ஓடுவது போல இருக்கிறது..

இப்போது நாம் ஏற்கனவே மிளகாய் தூளில் பிரட்டி வைத்திருக்கும் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவேண்டும்..நியாபகம் இருக்கட்டும், தீயை அதிகம் வைக்கவேண்டாம். அப்போதுதான் மென்மையாக வரும்.

சிக்கனோ மட்டனோ, ஏதோ ஒரு செய்முறையை புன்முறுவலுடன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அந்த ப்ளேட்டை மேசை மேல் வைக்கிறான் ராம்மோஹன். அப்போது தான் கவனித்தேன். அங்கே பக்கத்தில் ஒரு கை, வெட்டப்பட்ட கை, அதன் விரல்கள் அய்யோ. அதில் சுதாகர் அணிந்திருந்த ஒற்றைக்கல் மோதிரம்....

என் காது மடல்கள் சில்லிட்டது போன்றிருந்தது. உண்மையில் சில்லிடுகிறது.

ஏதோ கூர்மையான ஒன்று காதை வருடுகிறது. பின்னால் நின்றுகொண்டு கூரிய கத்தியொன்றை பிடித்துக்கொண்டு சிரித்தபடி..

ராம்மோஹன்.

..

..

Tuesday, November 24, 2009

லிப்ட் மாமா - ஒரு பக்க கதை



நான் ஸ்வேதா. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி. குடும்பம் சென்னையில். பெங்களூரில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..

அலுவலகம் முடிந்து என்னுடயை அப்பார்ட்மெண்ட் லிப்டில் நுழைய எத்தனித்தேன். எதிர்த்த அப்பார்ட்மெண்ட் ஜொள்ளு மாமா ஏற்கனவே லிப்டில் நிற்கிறார்.

எப்போதும் ஒரு ஜொள்ஸ் லுக் விட்டுத்தொலையும் கிழம்.

என்னம்மா,  ஆபீஸ் முடிஞ்சதா ?

(வேற என்ன நிலாவுக்கா போயிட்டு வறேன், கிழவா.....)

முடிஞ்சது..

சுருக்கமாக பதில் சொன்னேன்...

எந்த ப்ளோர் போறேம்மா..நீ ?

நான் என்னோட பிப்த் ப்ளோர் அப்பார்ட்மெண்ட்டுக்கு.

லிப்ட் பட்டனில் கை வைப்பதுபோல மேலே உரசுகிறது கிழம்.

ஹி ஹி. வீட்டுக்கு வரவாம்மா ? ஏதாவது ஹெல்ப் வேனும்னா சொல்லு..நான் தான் நெக்ஸ்ட் மந்த்லேர்ந்து ப்ளாட் செக்கரட்டரி தெரியுமோல்லியோ ?

எதுவும் தேவையில்லை..

கையை பிடித்துவிட்டான். ..

சார். என்ன பண்றீங்க ?

நீ ரொம்ப அழகாயிருக்கே...!!

இடியட். கையை எடுய்யா ?. வயசானவராச்சேன்னு பார்த்தா ?

உனக்கு ஓக்கேன்னா சொல்லு..வயசாச்சேன்னு பார்க்காதே. நான் ரெண்டை கட்டி மேய்ச்சவனாக்கும்...

நங்கென முட்டிக்கு கீழே ஒரு உதைவிட்டேன். நிலை குலைந்து விழுந்தான் கிழம். ஐந்தாவது ப்ளோர் கதவு திறந்தது. விரைவாக வெளியே வந்து, எமெர்ஜென்ஸி லிப்ட் பவர் ஆப் என்ற லிவரை மேலே தூக்கினேன். லிப்ட் பாதியில் நின்றது.  என்னுடைய மடிக்கணினியை திறந்து லிப்ட் 10000 முறை மேலும் கீழுமாக போய் வருவது போல் எழுதியிருந்த கல்லூரி ப்ராஜக்ட் மென்பொருளை தேட ஆரம்பித்தேன்..அதில் கதவை திறக்கமுடியாதபடி ஒரு வரியை சேர்த்து இயக்கிப்பார்க்கவேண்டும்...

Monday, November 23, 2009

வைரஸ் / குட்டிக்கதை



மாம்ஸ். என்னோட பர்சனல் இமெயில்ல வைரஸ் தாக்கிருச்சு தெரியுமா ...காலையில் அலுவலகம் வந்தவுடன் மென்மையாக அரற்றினான் க்ருஷ்.

ஏன் என்ன ஆச்சு ? எப்படி ஆச்சு ? என்ன செய்யுது ? கேள்விமேல் கேள்விகளை அடுக்கினான் சுதாகர்..

என்னோட கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)தெரிஞ்சு வச்சுக்கிட்டு எனக்கு வரும் இமெயில் எல்லாத்தையும் படிச்சுடுது டா...

அப்புறம் ?

மொக்கையான இமெயிலை மட்டும் விட்டு வெச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுது.

அட ?

என்னோட தங்கச்சி, அண்ணன் யார்க்கிட்ட இருந்தாவது இமெயில் வந்தா அதையும் டெலீட் பண்ணிடுது..

இங்கபார்ரா ??

யாராவது பணம் கடன் கேட்டு மெயிலோ சேட்டோ செய்தா அதை அப்படியே த்ராஸுக்கு அனுப்பிடுது...

அட...ஏன் இந்த கொலைவெறி ?

இதுக்கே அசந்துட்டா எப்படி...இதைக்கேளு...பழைய க்ளாஸ்மெட் ஒருத்தி அனுப்பின மின்னஞ்சலுக்கு ஏதோ திட்டி கூட பதில் அனுப்பியிருக்கு..

நிஜம்மாவா ? என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?

வேற யார் ? என்னோட மாமனார்தான்...

..

..

Friday, November 20, 2009

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


Thursday, November 19, 2009

சிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.



என்னுடைய காதலியின் முறைப்பின் சூடு தாங்காமல் இரண்டடி பின்னேறினேன்.

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

ஹோல்ட் ஆன். கூல். சொல்றேன்மா. சொல்றேன்...

நான் செய்தது என்ன என்று உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன். ஒரு ரெண்டு நிமிடம் முன்னால்.

அவள் அற்புதமான அழகி. எங்களைப்போலவே பார்க் பெஞ்சில். தனியாக. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தாள்.

நான் தடாலென எழுந்தேன். பத்தே வினாடிகளில் அவளை சமீபித்தேன். அவளிடம்..

மேம். ஒரு சிகரெட் கிடைக்குமா ? என்றேன்.

அவள் பெரிதாக யோசித்ததாக தெரியவில்லை. பாக்கெட்டை நீட்டினாள். ஒன்றை உருவிக்கொண்டு, ஒரு தாங்யூ உதிர்த்துவிட்டு, அவளது ஸ்மைலியை பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு திரும்பினேன்..

இப்போ மறுபடி நிகழ்காலத்தில். முறைப்பு கொஞ்சமும் குறையாமல் மீண்டும் என்னவள் கடித்தாள்..

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

நான் கொஞ்ச நாளா இதைத்தான்மா பண்றேன். யாராவது ஸ்மோக் பண்ணா அவங்கக்கிட்ட அப்ரோச் பண்ணி, ஒரு சிகரெட் கேட்பேன். அதை கொடுத்தால் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். நான் அதை ஸ்மோக் பண்ணமாட்டேன். உன்னோட பெயரை ஒருமுறை மனசுல நெனைச்சுக்கிட்டே தூக்கி எறிஞ்சுடுவேன்.

அதான் ஏன் ??? இப்போது ஆச்சர்யக்குறியான கண்களுடன் என்னவள்.

ஸ்மோக் பண்றதால வர்ர கெடுதல் எல்லாம் நீ எனக்கு புரியவெச்ச. ஆனா உன்னை மாதிரி தங்க கட்டி எல்லோருக்கும் கிடைக்குமா ? ஆனா அவங்க ஸ்மோக் பண்றதை பார்த்தால் அவங்க இதயமும் நுரையீரலும் காயப்படுறதை நினைச்சு வருத்தப்படுவேன். அப்புறம் இந்த ஐடியா தோனுச்சு. அவங்கக்கிட்ட ஒரு சிகரெட் வாங்கி, அதை தூக்கி எறிஞ்சுடுவேன். அட்லீஸ்ட் அவங்களோட சாவை ஒரு நாளைக்காவது தடுக்கலாம் இல்லையா ?

அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. நச் நச். இச்.இச்..

ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்

'ழ'

***************************************************


துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.

மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.

'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...

தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.

அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.

அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?

அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.

அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..

அங்கே மேடையில்,

'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.

குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.

அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ட்டே உயகு

பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.

***************************************************

சாட் லவ்.
***************************************************

அவன் - ஹாய்

அவள் - ஹாய். எஸ்ஸ்.

அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?

அவள் - ஸ்வேதா

அவன் - ஸ்வீட் நேம்.

அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?

அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.

அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.

அவன் - ஆர் யூ ஹிண்டு

அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?

அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.

அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?

அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?

அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.

அவன் - ஐ லவ் யு.

அவள் - மீ டூ.



***************************************************

Wednesday, November 18, 2009

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ரி திடீர் அங்கீகாரம்


டெல்லி பிப் 8 2025: இலங்கை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ரஷ்ய அதிபர் டிமித்ரி விளாடிமிர் திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

இந்தியாவில் விஜயம் செய்து வரும் புடின் டெல்லியில் இந்திய அதிபர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இலங்கை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் ரஷ்யா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து ரஷ்யா மீளுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ராகுல்ஜி பேசுகையில், இந்தியாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் ரஷ்யா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் டிமித்ரியை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே இந்தியா என்ற தத்துவத்தை ரஷ்ய அதிபர் வலியுறுத்துவதையே இலங்கை குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் சரத் பொன்சேகா மாஸ்கோ வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் திமித்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

நன்றி / தட்ஸ்தமிழ்

Monday, November 09, 2009

Kreative Krayonz / வேளச்சேரியில் குழந்தைகளுக்கான டே கேர்



வலைப்பதிவர் கவிதாவின் பார்வையில் நடைபெறப்போகும் இந்த வெஞ்ச்சர் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்போறாங்களாம்.

உங்கள் தோழர்கள் மற்றும் தோழிகளில் வேளச்சேரியில் வசிப்பவர்களுக்கு இந்த பதிவை அல்லது பதிவில் உள்ள இமேஜை (இமேஜ் பெரிதாக தெரிய அதன் மேல் க்ளிக் செய்யுங்கள்) பார்வேர்ட் செய்யுங்கள். முடிந்தால் நீங்களும் ஒரு பதிவு போட்டு ஆதரவு தெரிவியுங்களேன்.

லேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்



லேடி காகாவின் போக்கர் பேஸ் ஆல்பத்தில் வரும் இந்த அவுட்டர் ஸ்பேஸ் பாட்டு குழந்தைகளை கொஞ்ச நேரம் ப்ரீஸ் ஆகவைக்கும். காரணம் அதில் உள்ள க்ரேஸி சவுண்ட் எபக்ட்ஸ்.

மற்றபடி கொஞ்சம் அடல்ட்ரியான போக்கர் பேஸ் பாட்டு கொஞ்சம் 24+. அதனால் சுட்டி மட்டும்.



இட்டாலிடன் பேரண்ட்ஸுக்கு பிறந்த அமெரிக்கன் பொண்ணு இந்த லேடி காகா. இப்போ சூப்பர் ஹிட் ஆல்பம்ஸ் இவங்களோடது தான்.

இந்த ரெண்டு பாடலிலும் வரும் சில டேன்ஸ் ஸ்டெப்ஸ் அல்ட்டிமேட். ரொம்ப பிடிக்கும். என்னோட பேவரிட் லிஸ்ட்ல இவங்க வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களும் பாருங்க. ரொம்ப ரசிப்பீங்க.

Saturday, November 07, 2009

புதிய தலைமுறை இணையதளம்


இப்போது கலக்கிவரும் புதிய தலைமுறை இதழின் இண்டர்நெட்டு அட்ரஸை பார்த்தேன். அதான் ஒரு பதிவை போட்டுவிடுவோமே என்று.

http://puthiyathalaimurai.com/index.html

மாணவ பத்திரிக்கையாளர் திட்டம் இருக்கிறது. பகுதி நேர வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. இளம் பத்திரிக்கை. வலைப்பதிவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க அவர்களின் படைப்புகளில் தரமானதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் டெக்னிக்கல் ரகமான படைப்புகளை நிறைய போடுங்கப்பா..

Friday, November 06, 2009

நீ யாருடா என்னை "ரேப்" செய்வது? நான் செய்கிறேன் உன்னை ரேப்...!


ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு!
(அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!
என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...



..
..

சிங்கிள் பார்ட்டி




சிங்கிள் பார்ட்டி என்று ஒன்று உண்டு இங்கே. Single என்று கருதுபவர்கள் எல்லாம் Single ஆக வரவேண்டிய ஒன்று. குறைந்த அனுமதி கட்டணம் வசூலிக்கிறாங்க.

பேஷன் ஷோ, லோக்கல் ராக் பேண்ட் இசை. ஒரு டேன்ஸ் ப்ளோரும் உண்டு. இந்தியாவில் இந்தமாதிரி பார்ட்டி எதுவும் வைத்தால் தானே ? ம்ஹும். செய்யமாட்டாய்ங்களே !!!

வைரமோதிரம், மொபைல் போன், லேப்டாப் / UAE தமிழ்சங்கம்



கலை அரங்கம் 2009 அப்படீங்கறது யூ.ஏ.இ தமிழ் சங்கம், யுனிடெக் லிமிடெட், வெஸ்டர்ன் யூனியன் மனி ட்ரான்ஸ்பர் ஆகியவை இணைந்து நடத்தும் குடும்ப விழா.

சுட்டி > http://www.uaetamilsangam.com/upcomingevent.asp

எங்கே :

13th November 2009, Friday, at Sheikh Rashid Auditorium. Indian High School,
Dubai (Opp. St. Mary’s Church-Karama) Gates open at 4.30pm & programme commences at 6.00pm


மெம்பர்களுக்கு மட்டும் (Charity Raffle Gift)

Mini Laptop Notebook, Diamond Ring, Mobile Phone…

Charity Raffle / எல்லோருக்கும் :

32" LCD TV, SD Card Video Camera, Digital Camera, Mobile Phone, Portable DVD Player and many more.

யார் யாரெல்லாம் வர்ராங்க:

Mr. D Napoleon Hon’able Minister of State for Social Justice and Empowerment, Govt. of India

His Excellency Mr. Venu Rajamony, Consul General of India

Mr. Syed M.Salahuddin, Managing Director ETA Ascon Star Group

Mr. Ashok Kumar, CEO, Indian High School, Dubai

Mr. K Kumar, Convenor - ICWC, Dubai-UAE.

என்ன ப்ரொக்ராம்:

Semi-Classical & Cinematic Dance performance by children

SSC & HSC Felicitation Ceremony - Felicitating Top Rankers of UAE for the Academic Year 2008-09

Children’s Day Celebrations

PATTIMANDRAM by Mr. Raja, Mrs. Bharathi Bhasker, Pulavar Ramalingam & Local Team

COMEDY & VARIETY SHOW by Mr. Erode Mahesh & Mr. Gokulnath

ஸ்பான்ஸர்ஸ்

Skyline University College | BSCPL | Maruvur Arasi Gen. Transport | EMAX | Royal Palace | LIC International| Auto Trak | Chennai Jewellers | Noor Al Deen | Brain-O-Brain | Times & Chimes | Jenny Flowers | UAE Exchange

Media Support : Dinamalar / Thangam Online / Kumudham Snehidhi / Gulf Today
http://www.dinamalar.com/nri , http://www.thangamonline.com/, EBook - http://ebook.thangamonline.com

FREE TICKET / ENTRY | For further details and To get entry passes please contact

தொடர்புக்கு

Ramesh Viswanathan - 050-5865375
S.Prasanna - 050- 6900230
Saleem Khan - 050-3184073
Sirajudeen - 050- 5153762

ஒரு சின்ன வேண்டுகோள்

We have seen many times if we say the program starts @ 6pm, 75% of the people will come 7 to 7:30... Because of those
75% of people the 25% of crowd will have to wait.

We can start our program sharp, we always start with Kids dance, just imagine when the screen open if the kids see less crowd.
How the kids can perform well. Who else can encourage apart from us. We will make sure all our program starts on time.
But to achieve this we need your support and commitment. See you @ 5:30 pm on 13th November 2009.

Thursday, November 05, 2009

பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009


பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009 நவம்பர் மாசம் நடைபெறுகிறதுங்க. கிழக்கு பதிப்பகத்தின் நியூஸ்லெட்டர் மூலம் தெரியவந்தது. இது வரை போகாதவங்க கண்டிப்பா போங்க. 2007 ல வடை பஜ்ஜி சூப்பர். 2008 ல சாண்டில்யன் புக்ஸ் ஒரு பண்டல் அள்ளினேன். அங்கே திருமாலை, ஜிராவை மீட் பண்ணியிருக்கேன். பத்ரி கூட வந்தார் என்று நினைக்கிறேன். விகடன் பதிப்பகம் வரும். உயிர்மை வரும். சுஜாதாவின் புக்ஸ் கிடைக்கும். கேள்பிரண்ட் இல்லாமல் காலையில் போனீங்க என்றால் மாலை வரை சுற்றலாம்.

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

நவம்பர் 6 முதல் 15 வரை.
அரங்கு எண்: 165, 166

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் அந்த அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம்.

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% கழிவுடன் நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

095000-45641 (மணிகண்டன்) மற்றும் 095000-45608 (காளி பாண்டியன்)

இபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்

இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 8 லட்சம் சீன அலைபேசிகள் நுழைகின்றன. ஐஎம்இஐ எண்கள் இல்லாத, எந்த சர்வதேச காப்பிரைட் சட்டங்களுக்கும் மென்பொருள் சட்டங்களுக்கும் பேடட்ண் விதிகளுக்கும் கட்டுப்படாத போன்கள் இவை. நோக்கியா போலவே இருக்கும். ஐபோன் போலவே இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தில் வியாபாரம் பாதிகப்படும்.

சீன மொபைல் போன்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அந்த அரசு விதியை வழக்கம்போல ஓட்டை போட்டு இந்திய பொருளாதாரத்தை ரத்தம் போல உறிஞ்ச இந்திய எதிரிகள் தயாராகவே இருக்கிறார்கள்.(ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அமெரிக்காவுக்குத்தானே போகிறது என்பார்கள் சிலர், அது வேறு கதை)

இந்த இபே (ebay.in) தளத்தின் மூலம் வழக்கம்போல போலி பொருட்கள் உள்ளே நுழைகின்றன. இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இந்த பதிவை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கை மூலம் இதனை அம்பலப்படுத்தவேண்டும்.

இந்த சுட்டியில் பார்த்தீர்கள் என்றால் முப்பதாயிரம் மதிப்புள்ள ஐபோனை மூவாயிரத்து சொச்சத்துக்கு தருகிறார்கள். அதுவும் தில்லாக சீனா ஐபோன் என்று எழுதி விற்கிறார்கள்.



கொரியன் போன் என்று கடைகளில் விற்கப்படும் இந்த போன்கள் உண்மையில் தாய்வானிலும் சீனாவிலும் தயாராகின்றன.

IMEI என்னும் International Mobile Equipment Identity இல்லாத போன்கள், நெட்வொர்க் மூலம் (ஏர்டெல், வொடாபோன் மற்றும் இந்தியாவில் இயங்கும் அனைத்து நெட்வோர்க்கும் இதில் வரும்) மட்டுறுத்தப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ESN எண் என்பதும் ஐஎம்இஐ போன்றதொரு குறியீடே. இந்த இரு வகையான எண்கள் இல்லாத அலைபேசிகளை தடை செய்யும்படி சொல்லுகின்றது தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய்.





அலைபேசி நெட்வொர்க்கில் உள்ள இஐஆர் ஐஎம்இஐ எண்களைப்பற்றிய தகவல்களை வைத்துள்ளது. ஐஎம்இஐ எண் இல்லாத அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை தடை செய்யும் வகையில் அதனை செயல்படுத்த முடியும்.

அதனையும் இப்போது சீன மொபைல்கள் கடந்துவிடுகின்றன. போலியான IMEI எண்ணை அந்த மொபைலில் போட்டே அனுப்புகிறார்கள். இங்கேயும் 50 ரூபாய் செலவில் போடுகிறார்கள் என்று கேள்வி.

அலைபேசிக்கான எந்த ஸ்பெசிப்பிக்கேஷனையும் பாலோ செய்யாத இந்த மொபைல்களால் உடல் நலனுக்கும் கேடு. உதாரணமாக மொபைலில் உள்ள ரேடியோ இவ்வளவு அளவுக்கு மேல் SAR (Specific absorption rate) வெளியிடக்கூடாது என்கிறோம். அல்லது 900 ப்ரீக்வன்ஸிக்கு (450 μW/cm2 at 900 MHz, and 950 μW/cm2 at 1900 MHz.) இவ்வளவுதான் வெளியிடவேண்டும் என்கிறோம். கன்னாபின்னாவென வெளியேறும் ரேடியோ கதிர்வீச்சினால் கேன்ஸர் கூட வரலாம் என்று சொல்கிறார்கள். ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் கடுமையான விதிகளை அலைபேசி நிறுவனங்களுக்கு விதித்துள்ளது. ஆனால் இந்த வகை திருட்டு அலைபேசிகள் இவ்வாறு எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை.

இந்த மொபைல்களை வைத்துத்தான் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பேசுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. பாக்கிஸ்தான் தீவிரவாதிக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் கள்ளத்தனமாக உள்ளே வரும் பொருட்கள் இந்திய சந்தைப்பொருளாதாரத்தை அழிக்கும் விஷம். அதனை மட்டும் நாம் கவனிக்கவேண்டும்.

Tuesday, November 03, 2009

கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள், தம்பி ! !

சுய முன்னேற்றம் - எம்.எஸ்.உதயமூர்த்தி


மலரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம். சில தீர்மானங்கள் செய்து கொள்கிறோம்.

“இந்த ஆண்டு சொந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறேன்.”
“இந்த ஆண்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லப் போகிறேன்.”
“இந்த ஆண்டு எனது கனவு வீட்டைக் கட்டப்போகிறேன்.”
“இந்த ஆண்டு உலகம் புகழும் மகத்தான கதை ஒன்றை எழுதப் போகிறேன்.”
“இந்த ஆண்டு அளவோடு சாப்பிட்டு கொடி போல உடலை வைத்துக் கொள்ளப் போகிறேன்.”

இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒரு தீர்மானம் செய்கிறோம். நல்ல தீர்மானங்கள்! நல்ல நோக்கம்.

அடுத்த ஆண்டு தொடங்கும்போது பார்த்தோமானால் இதே தீர்மானங்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! அதாவது இந்த ஆண்டு முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் நாம் முன்னேறவில்லை. அதை அடைய நாம் எதையும் சாதிக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்வார்கள். “மீண்டும் முதல் படியில்!” என்று. முதல் படிக்கே திரும்பத் திரும்ப வந்தோமானால் நாம் எப்படி முன்னேறுவது?

ஒரு அமைச்சர் மரம் நட வந்தார். மரம் நட்டார். தண்ணீர் ஊற்றினார். ஒரு சந்தேகம் வந்தது. "நான் நடும் மரத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார்.

"அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் எந்த அமைச்சர் வந்தாலும் இங்கேதான் நடுகிறார். நாங்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்!" என்று சொன்னார்கள்.

எப்படிக் கதை!

செடி நடும்போது மாத்திரம் தண்ணீர் ஊற்றினால் எப்படி வளரும், செடி? எப்படி வளர்ந்து மரமாகும்?
இதுதான் பலருடைய கதை!

வேகம் இல்லை!

வெகு தீவிரமாக ஆர்வத்துடன் தீர்மானம் செய்கிறோம். வைராக்கியத்துடன் சொல்லிக் கொள்கிறோம். "நாளையிலிருந்து நான் புது மனிதன்!" என்று. ஓரிரு நாள் அந்த நினைப்பு நம்முடன் இருக்கிறது. ஆனால், நாம் தொடர்ந்து புது மனிதனாக ஆக, கவனத்துடன் இருப்பதில்லை. முதலில் இருந்த வேகம் இப்போது நம்மிடம் இருப்பதில்லை. ஆரம்ப சூரத்தனத்துடன் சரி. பிறகு முயற்சிகளை விட்டு விடுகிறோம்.

"இந்த ஆண்டு எம்.பி.ஏ. நிர்வாகப் படிப்பு படிக்கப் போகிறேன். அதுவும் தபால் மூலம் சொல்லித் தருகிறார்கள். நிர்வாகம் பற்றி படித்தால் தான் நாளை சொந்தத் தொழிலில் இறங்கலாம்" என்று நல்ல தீர்மானம் எடுப்போம். அல்லது -

"தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். பதினாறு பெரிய மாநிலங்களில் ஒரு மாநிலம். பணம் புரள்வதெல்லாம் பம்பாயில், பஞ்சாபில், குஜராத்தில். எனவே நான் அங்கே போய் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன். அவர்களுக்கு வேண்டியதை தயார் செய்யப் போகிறேன்."

இப்படி ஒரு வியாபாரி தீர்மானம் செய்கிறார். ஆனால் அதில் அவர் முனைகிறாரா தொடர்ந்து அதை முடிக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. திறந்த சோடா பாட்டில் போல பல ஆசைகளையும் தீர்மானங்களையும் புஸ்வாணமாக்கி விடுகிறோம்!

நாம் எங்கே தோற்றுப் போகிறோம்? எதனால் தோற்றுப் போகிறோம்?

நம்மிடம் சுய கட்டுப்பாடு இல்லை. தொடர்ந்த ஈடுபாடு இல்லை. குறிக்கோள் கடைசிவரை நிற்பதில்லை. கண்காணிப்பு இல்லை. கவனம் வேறு எதில் எல்லாமோ சென்று நமது குறிக்கோளை திசை திருப்பி விடுகின்றன. நம் கவனமெல்லாம் முயற்சி இன்றி, ஆர்வமின்றி, ஆற்றலின்றி, உழைப்பின்றி, மங்கி மடிந்துவிடுகிறது. இதுதான் குறிக்கோளை எட்டமுடியாததற்கு காரணம்.

சுயக்கட்டுப்பாடு

ஒரு பெரிய விருந்து, ஒரு நல்ல அறிஞரை அழைத்திருந்தார்கள். சாப்பிடும்முன் அவரைப் பேசச் சொன்னார்கள். அவர் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார். "நீங்கள் எல்லாரும் மனிதர்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா?"

"மனிதர்கள்! மனிதர்கள்!" என்றார்கள், அமர்ந்திருந்தவர்கள்.

அவர் சொன்னார்: "மிருகங்கள் தங்களுக்குப் போதுமென்று எண்ணியதும் சாப்பிடுவதில்லை! நிறுத்திக் கொள்கின்றன."

அறிஞர் என்ன சொல்கிறார்?

மனிதன் தேவையினால் உந்தப்படுவதில்லை. ஆசையினால் உந்தப்படுகிறான்! தேவையினால் உந்தப்படுபவன் கட்டுப்பாடுடையவன். ஆசை என்பது மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது. ஆசைக்கு எங்கே முடிவு?

எனவேதான் சொல்லுகிறேன் - வாழ்வின் மிக முக்கியமான பாடம் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொண்டோமா என்பதுதான்.

உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா? "காலையில் 5 மணிக்கு எழுவேன்" என்று சொல்வதிலிருந்து "வயிற்றை லேசாக வைத்துக் கொள்வேன், போட்டு அடைக்க மாட்டேன்" என்று சொல்வது வரை உங்களிடம் சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா? இதெல்லாம் நம் சொந்த விஷயங்கள். நாம் விரும்பினால் நடத்திக்காட்ட முடியும். நாம் மனது வைத்தால் செய்து காட்ட முடியும். நாம் பாடுபட்டால் இதையெல்லாம் நமது நல்ல பழக்கங்களாக ஆக்கிக் கொள்ள முடியும்.

சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதன் தறிகெட்டு ஓடும் குதிரைக்குச் சமானம். அதேபோல சுயக்கட்டுப்பாடற்ற - சட்டங்களை மதிக்காத சமுதாயம், வாழத் தகுதியற்றது. முன்னால் முதல்வர்களான பங்காரப்பா, கல்யாண்சிங் போன்றவர்கள் - சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள் - உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்தார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

மவுன விரதம்

மனதை மட்டுமல்ல, பேசுகின்ற வார்த்தையையும் வாயையும் கட்டுப்படுத்த வேண்டுமென்று நமது ஞானிகள் எண்ணினார்கள். மகாத்மா காந்தி வாரத்தில் ஒருநாள் திங்கட்கிழமை மவுன விரதம் இருந்தார். அன்று யாருடனும் பேசமாட்டார். யோகி வேதாத்ரி அடிகள் ஆளியாறுக்கு அருகிலுள்ள அவரது ஆசிரமத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மாத காலம் மவுன விரதம் இருப்பார். எதற்கு?

தன்னைத்தானே அடக்க, நாவை அடக்க, பேச்சை அடக்க, சுயமாகத் தன்னைப் பற்றி தானே சிந்தித்துப் பார்க்க.

நம் வீடுகளில் பெண்கள் பலர் திங்கட்கிழமை, சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருப்பார்கள். அன்று முழு நாளும் சாப்பிட மாட்டார்கள். அல்லது ஒரு வேளை உணவு உண்பார்கள். கேட்டால் சோம வார விரதம், கந்த சஷ்டி விரதம் என்பார்கள். அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி என்று விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். என் தாய் திருவாதிரையன்று முதல் நாள் எதுவும் சாப்பிட மாட்டார்கள். மறுநாள் நடராசர் வீதியில் உலா வரும்போது (ஆருத்திரா தரிசனம்) தரிசித்துவிட்டு திருவாதிரைக் களி என்ற உணவை சாப்பிடுவார்கள்.

மகாத்மா காந்தியின் தாய் தினமும் சூரியனைப் பார்த்து தரிசித்து விட்டுதான் உணவு உட்கொள்வார் என்றும் "அன்று சூரியன் தெரியாவிட்டால் அவர் பட்டினிதான்" என்றும் தன் தாயின் விரதத்தையும் மன உறுதியையும் பற்றி காந்தி தன் சுயசரிதையில் எழுதுகிறார்.

விரதம் ஏன்?

ஏன் இந்த விரதங்கள்?

நம் உடலுக்கு ஓய்வு கொடுக்க, மேலே மேலே போட்டு வயிற்றை அடைத்து நாம் நம் உடலைத் துன்புறுத்துகிறோம். தேவையில்லாமல் உடலில் சதை போடுகிறது. கீழே குனிய முடியாமல் தொப்பை பெருக்கிறது. சரியான அளவு சாப்பிடும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதிக உணவு கொண்டால் அதிகம் சிந்திக்க முடிவதில்லை. தூக்கம்தான் நம்மை ஆட்கொள்கிறது.

விரதம் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? முகத்திலே ஒரு ஒளி இருக்கும். ஒரு அமைதி இருக்கும். ஒரு இனிமை இருக்கும். நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள உண்ணா நோன்பு போன்ற நல்ல பயிற்சி வேறில்லை.

இங்கேதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; முதலில் புரிந்து கொள்ள வேணடும். என்ன அந்த முக்கியமான விஷயம்?

சுயக்கட்டுப்பாட்டை சாப்பிடுவதில் கற்றுக் கொண்டோமானால், நாவை அடக்கக் கற்றுக் கொண்டோமானால், நம் வாழ்வின் முக்கியமான எல்லா விஷயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும். நம் வாழ்வை மிகப் பிரமாதமாக வாழ முடியும்.

விரதங்கள் வழியே முதலில் நம் மனதைக் கட்டுப்படுத்துகிறோம்; பிறகு வாழ்வை ஒரு ஒழுங்கில் கொண்டு வருகிறோம். விரதம் இருப்பது "எல்லாவற்றிலும் என்னால் கட்டுப்பாடுடன் இருக்க முடியும்" என்கிற நம்பிக்கையை நம்முள் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக நம் வாழ்வு நம் கைக்குள் - நாம் விரும்புகிறபடி அமைகிறது.

சுயக்கட்டுப்பாடு என்பது வாழ்வின் தேவையான அடிப்படைப் பழக்கம். முதலாவதாக கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கம். தியானம் நம் சிந்தனைகளை ஒரு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறது. விரதம் நமது செயல்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

சுயக்கட்டுப்பாடு இருந்தால், ஒரு ஒழுங்கின் மூலம், வைராக்கியத்தின் மூலம் இந்தப் புத்தாண்டில் ஆசைப்படும் இலட்சியங்களை நிச்சயம் சாதனைகளாக மாற்றுவீர்கள்.

Monday, November 02, 2009

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்



வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.

சரி அந்த கதை எதுக்கு இப்போ ? ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ? வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே ? அது போரடித்துவிட்டதா ? அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே ? அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.

ஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே ? இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே ? யார் கண்டா ? நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.

தயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது ?

நீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா ? நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் ? உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே ? உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் ?

உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'

இப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.

நன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....