Friday, February 27, 2009

செந்தழல் ரவி பிலாக் கொம்பேனி சிறுகதைகள்

ரீசண்டாக எழுதிய சில கதைகளை தொகுத்து பதிவு போடச்சொல்லி கேட்ட ஆயிரக்கணக்கான < உண்மையா ஒக்கே ஒக்க > ரசிகர்களின் அன்புக்கு தலைவணங்கி...

போர்க்களம் (BattleField) - சிறுகதை

இங்கே க்ளிக்கி படிக்கவும் http://tvpravi.blogspot.com/2009/01/battlefield.html

ஜெர்மோ அக்கார்டி உருக் !!!!!!!!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

ஒரு கொலை ராகம்...!!!

இங்கே க்ளிக்கி படிக்கவும்

திருடன் திருடன் திருடன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

களப்பிரன்

இங்கே க்ளிக்கி படிக்கவும்

இதில் ஒரு கொலை ராகம் கதையை ஆழி பதிப்பகத்துக்கு அனுப்பி இருந்ததால் அதனை ட்ராப்டுல போட்டிருந்தேன்...பரிசு கிடைக்கல. ஐரோப்பிய சிறப்பு பரிசு யாருக்கும் கொடுக்கலையே ? பாவிங்களா...

களப்பிரன் கதை தமிழ்மணம் விருதை குறிவெச்சு அடிச்சது. மாங்காய் என்ன பலாக்காயே விழுந்தமாதிரி இருக்கு...

ஜெர்மோ அக்கார்டியும் நிறைய பேர் பாராட்டினாங்க. ஒரு வேளை இதை போட்டிக்கு அனுப்பியிருந்தா பரிசு கிடைச்சிருக்குமோ ??

நிறைய பின்னூட்டங்கள் தந்திருக்கீங்க, தனித்தனியா பதில் போடலை என்பதால் நான் பெரிய /// மூத்த /// பதிவர் என்று எல்லாம் நினைச்சுராதீங்க...நேரமின்மை தான் காரணம்...

ஒரு கதைக்கு அரை பிளேடு பரிசு தரேன்னு சொல்லியிருக்கார்...இந்த அன்பே போதும் < பரிசை கொரியர்ல அனுப்புடே >

ஹைய்யா !!! ஜாலி !!!! நான் பர்ஸ்ட்டு !!! நன்றிகள் !!!!

தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு வந்துருக்கு, அதில் கதை பிரிவில் நீ பர்ஸ்ட்டு என்று காலையின் மூன்று மின்னஞ்சல்கள்...

1. கவிதா
2. டிவிஆர் அய்யா
3. நவநீதன்


கதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...

தமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...

சுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...

ஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.

கதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >

வரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...

அப்புறம் இரா.வசந்தகுமார், சிரில் அலெக்ஸ் இவங்க எல்லாரும் இன்ஸ்ப்ரேஷன்...

சண்டை போடுறதை விட்டுவிட்டு உருப்புடியா எதையாவது எழுதுமாறு திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார் சுப்பைய்யா அய்யா மற்றும் உண்மைத்தமிழனுக்கு நன்றி..

மூன்று விருதை அள்ளிய டாக்டர் புருணோ, இரண்டு விருதை அள்ளிய உண்மைத்தமிழன், மற்றும் விருதுகள் பெற்ற தூயா, ராம், நிலா, டுபுக்கு, கோவி கண்ணன், தாமிரா, வினவு, சுகுணா திவாகர், குசும்பன், ரிஷான், தாமிரா ஆகியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

அய்ரோப்பிய நேரத்திலும் விடாமல் என்னுடைய பதிவுகளை படிக்கும், கும்மி அடிக்கும், அரைபிளேடு, குடுகுடுப்பை, பழமைபேசி, நசரேயன், கும்க்கி ஆகியவர்களுக்கு நன்றிகள்..

டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல ? * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது.

நீ எதாவது எழுது ரவி, பொறுமையா எழுதுனா நல்லா வரும் என்று சொல்லும் லக்கி மற்றும் இளா நன்றி...

வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி...<<பிரபல பதிவர்களின் பெயர்களை இடுகையில் சேர்த்து தொலைவது அவர்களின் பின்னூட்டம் கிடைக்க வழி செய்யும்>>

விடுபட்டவர்களை அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஸ்டைலில் நன்றி நன்றி நன்றி.

இவனுக்கு போயி விருதா என்று டென்ஷன் ஆகும் நன்பர்கள் சுப்ரமணிய சாமி புகழ் வஸ்துவை தயாராக வைத்துக்கொள்ளவும். உண்மைத்தமிழன் அண்ணனையும் நாமக்கல் சிபியையும் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன்...

Saturday, February 14, 2009

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன்



ஏக்கபடி கபடி கபடி கபடி அஸ்ஸா உஸ்ஸா கும்தலக்கடி புஸ்ஸா கபடி கபடி கபடி....



ஆத்துல குறவை என்று ஒரு மீன் இருக்கும். நாட்டு மீன் வகையறா. ரொம்ப வழுக்கும். அதை பிடிக்க இப்படித்தான் ரெண்டு கையையும் சேர்த்து எடுத்துக்கிட்டு போயி ஒரே அமுக்...



பாவம் சாவியை கீழ போட்டுட்டார் போல...எப்படியும் கெடச்சிருக்கும்...கும்...கும்..பின்னால் ஒருவர் சாமி சன்னிதியில் நிற்பது போல நிற்பதை கவனிக்க...

எந்த எடத்துல போயி பத்திரிக்கை வைக்கிறார் பாருங்க...ஒருவேளை நல்லா படிங்க அப்படீன்னு சொன்னதுக்கு அங்கனயே புத்தகத்தை விரிச்சு படிச்சு காமிக்கறார் போல...பாதுகாப்பு அதிகாரியை பாருங்க....ஜிம்மி மாதிரி இல்ல ?

தலைமை கழகத்தில் மம்மி. படங்கள் உதவி நக்கீரன். நக்கீரன் டாட் காம்...நானும் இந்த அலுவலகத்துக்கு ஒரு முறை விசிட் அடிச்சிருக்கேன்...பின்னால கேண்டீன் இருக்கு, வடை சூப்பரா இருக்கும்..

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி !!!

நான் மிகவும் விரும்பும் குரல். தீர்க்கமான பேச்சு. தீர்க்க தரிசன பார்வை. அற்புதமான மொழியறிவு. இழந்துவிட்டேனே ? உண்மையில் அழுகிறேன்...

http://blog.sajeek.com/?p=493

http://blog.sajeek.com/?p=513

Friday, February 13, 2009

கூகிள் விளம்பரங்களை க்ளிக் பண்ணவேண்டியது ஏன் ?


ஆட்ஸ் பை கூகிள் என்று விளம்பரங்களை திரட்டிகளில், நிறைய தளங்களில் பார்க்கிறீர்கள்..குறிப்பா தமிழ்ஷ், விகடன் போன்ற இடங்களில் கூட இந்த கூகிள் வழி விளம்பரங்களை பார்க்கலாம்..

நிறைய வலைப்பதிவர்களும் விளம்பரங்களை போட்டுவைத்துள்ளார்கள்...(பொது சேவை விளம்பரங்களை க்ளிக் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை)..

உருப்புடியாக காசு தருவது கூகிள் நிறுவனம், ஆட் ப்ரைட் போன்றவை என்று நினைக்கிறேன்..

குறைந்த வேகம் உள்ள இணைய இணைப்பில் இருக்கிறீர்கள் அல்லது பிரவுசிங் சென்டர் போன்றவிடத்தில் இருந்து கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் இணையத்தை பார்வையிடுகிறீர்கள் என்றால் பரவாயில்லை..

ஆனால் அலுவலக கணினி, சொந்த கணினி, அதி வேக கணினி போன்றவற்றில் அமர்ந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், கூகிள் வழி விளம்பரங்களை திரட்டிகளில், உங்களுக்கு பிடித்த தளங்களில் க்ளிக் பண்ணுங்க..

நீங்க பார்வை இடனும் என்று கூட இல்லை, க்ளிக் பண்ணி ஓப்பன் நியூ விண்டோ என்று கொடுத்துவிட்டு, பழைய படி மொக்கையை போடுங்க அல்லது படிச்சிக்கிட்டிருக்க தளத்தை படிங்க..

இது மூலமா என்னா ஆவப்போவுது என்று கேட்டீங்கன்னா, திரட்டியை, தளத்தை காசு போட்டு நடத்தி நமக்கு சேவை செய்யும் நம்ம மக்களுக்கு ஒரு உதவி கிடைக்கும்...

எங்கயோ இருக்க கூகிள் காரன் தரும் காசு நம்ம மக்களுக்கு போய் சேரட்டுமே ?

என்ன சொல்றீங்க ?

அடுத்த முறை கூகிள் வழி விளம்பரங்களை பார்த்தால் ரெண்டு க்ளிக்கை போடுங்க...

இப்ப இந்த பதிவுக்கு ஓட்டை போடுங்க...

Saturday, February 07, 2009

தமிழீழத்தவர்களுக்கு முக்கிய யோசனை



ஸ்ரெயிட் பார்வேர்டாக மேட்டருக்கு வந்துவிடுகிறேன்..

ஏன் தமிழ் ஈழத்தை இந்தியாவுடன் இணைத்துவிடக்கூடாது ? ஒரு இந்திய மாநிலமாக மாறிவிடுங்களேன் ? ஏற்கனவே இருக்கிற மொழிவாரி மாநிலத்தில் ஒன்றாக இணைந்துவிடுங்களேன் ?

இந்தியாவின் அருமை பெருமைகளை பட்டியல் போட்டால் ஒருவேளை நீங்கள் இந்த திசையிலும் யோசிக்கலாம்...

1. அணுகுண்டு வெடித்திருக்கிறோம்..பிரமோஸ், அக்னி என்று பல அணு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கடன் வாங்கிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரித்திருக்கிறோம்..

2. நிலாவுக்கு ராக்கெட் விட்டுள்ளோம்...மறுபடி ரஷ்யாவின் உதவியுடன் கிரயோஜெனிக் எஞ்சின் பொருத்தி நிலா நிலா ஓடிவா பாடலை நிஜமாக்கியுள்ளோம்...

3. விமானந்தாங்கி கப்பல் வைத்துள்ளோம்...ஐ.என்.எஸ் விக்ராந். சோமாலியா கடற்கொள்ளையர் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அளவில் கடற்படையும் உள்ளது...

4. பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியுள்ளோம்...பாக்கிஸ்தானை ஓட ஓட விரட்டி...

5. மல்லாக்க படுத்து மாளவிகாவை பற்றி கனவு கண்டால் 2020ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற மாபெரும் கருத்தை சொன்ன அப்துல்கலாம் என்ற இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கி பார்த்துள்ளோம்..

6. தமிழகத்து நெய்வேலி நிலக்கரியை சுரண்டி ஆந்திரம், கருநாடகம், கேரளம் என்று எல்லா மாநிலங்களுக்கும் கரண்டு அனுப்புகிறோம்...என்ன அவனுங்க தான் காவேரி, கிருஷ்ணா, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தண்ணி தரமாட்டேங்குறானுங்க...எங்களுக்கு என்ன கவலை, கடல்நீரையே குடிநீராக்குவோம் தெரியுமா ?

7. வெளிநாட்டு படையினர் எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்கும் அளவுக்கு எஜுகேஷனில் உயர்ந்துள்ளோம்...என்ன ஒன்று, எங்கள் ராணுவ வீரர்கள் தான் கொஞ்சம் காய்ந்துபோய், இலங்கையில், ஆப்ரிக்க நாடுகளில் கற்பழிப்பில் ஈடுபட்டார்கள்...லீவ் தட் யா..

8. குட்டி மாநிலமான காட்ஸ் ஓன் கண்ட்ரி கேரளாவில் இருந்து இந்தியாவையே ஆட்டிப்படைக்கும் பொறுப்புகளில் உள்ள நாராயணன், மேனன், அந்தோனிகளை நியமித்துள்ளோம்..உங்களுக்கும் அப்படி ஒன்னு கிடைக்காமலா போயிரும் ?

9. அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்துக்கு தனி துறை, தனி அமைச்சு. அங்கிருந்து வரும் தேயிலையை நாங்க டீ போட்டு குடிக்கிறோம். என்ன ஒன்று, அருணாச்சல பிரதேசம் என்ற எங்கள் நாட்டு மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடுது...பரவால்ல...

10. காஷ்மீர் என்ற மாநிலத்துக்கு தனி உரிமை கொடுத்துள்ளோம்...இங்க தக்காளி நாப்பது ரூவா கிலோ என்றால் அங்க ஐந்து ரூபா. எந்த டேக்ஸும் கிடையாது. ஆனா அங்கே வாக்கெடுப்பு நடத்தாமல் இதுவரை லூலூவாயி காட்டிட்டோம்...சூப்பரு இல்ல ?

11. மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவும் நாடு இது. என்ன ஒன்று பெல்காம் தனக்கு தான் சொந்தம்னு கர்நாடகமும், மகாராட்டிரமும் அடிச்சுக்கிது...

12. மக்கள் ஆதரவு இருந்தா புது மாநிலமே உருவாக்குவோம் தெரியுமா ? உத்ராஞ்சல், சட்டீஸ்கர் எல்லாம் உதாரணங்கள்...என்ன தெலுங்கானாவுல மட்டும் கொஞ்சம் ஏமாத்துறோம்..

13. எங்க நாட்டுல இருக்கிற அம்பானிகளோட சொத்தை கணக்கு போட்டா உலக பணக்காரரை விட அதிகம் தெரியுமா ? என்ன, அது கொஞ்சம் சாதாரண மக்கள் வயித்துல அடிச்ச காசு. டோண்ட் கேர் ப்ளீஸ்..

14. 400க்கும் மேல எங்க நாட்டு மீனவர்களை அடுத்த நாட்டு கடற்படை சுட்டு கொன்றபோதும், எதுவும் பேசாம அமைதியா இருக்க காந்தி பொறந்த நாடு..இந்த உதாரணம் போதாதா ? இந்த நாடு எவ்ளோ அமைதி நாடுன்னு ?

15. கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்துக்கு பலியா இரண்டாயிரம் இஸ்லாமியர்களை போட்டு தள்ளினோம். இதில் இருந்தே தெரியலயா ? இது எவ்ளோ வீரம் சொ(செ)றிந்த நாடு...

16. பொதுமக்களுக்கு இஸ்லாமியர்கள் ஓதுன பாங்கு சத்தம் பிடிக்கலைன்னு தெரிஞ்சவுடனே, ஒரு மசூதியையே இடிச்சோம் தெரியுமா ? பாபர் கட்டுனா என்ன அக்பர் கட்டுனா என்ன ? மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்...

போதும் போதும்னு ஏன் அலறல் ?

இந்த நாட்ல ஜாயின் ஆகிக்கோங்க...உங்களுக்கு தகவல் தொடர்பு மந்திரி பதவி தறோம். நல்லா சம்பாதிச்சுக்கோங்க ? ஓக்கே ?

சிங்களப் பேராசிரியர் Professor Sisira Jayasuriya ன் பேட்டி


http://www.abc.net.au/reslib/200901/r334759_1514920.asx

இங்கே க்ளிக் செய்தால் தரவிறக்கம் செய்து பார்க்கலாம்..

Click Here

in My Views:

a person kills other = Murder
a country fights and kills other country solders = war
a country kills its own people = genoside.

example for genoside => Srilanka


ஒருவர் இன்னோருவரை கொன்றால் = கொலை
ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர் தொடுத்து அந்த நாட்டின் படைவீரரை கொன்றால் = போர்
ஒரு நாடு அதன் சொந்த மக்களை கொன்றால் = இன அழிப்பு.

இன அழிப்புக்கு ஒரு உதாரணம் = சிரீலங்கா

Friday, February 06, 2009

மனித கேடயங்களா மக்கள் ?

நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்..

வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்..

ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்..

மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும், தமிழ்நெட் இணையதளத்தையும் பார்த்து கவலையோடு அவதானிக்கும் நம்மைப்போல அவர் புதினம் இதழையோ, தமிழ்நெட் இணையத்தளத்தையோ பார்வையிடுபவர் அல்ல...

இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்து, டைம்ஸ் நவ், சி.என்.என் ஐபிஎன் போன்ற ஊடகங்களை பார்வையிடுபவர்..

அவரின் இந்த கருத்தானது, ஸ்ரீலங்கா அரசு தன்னுடைய ப்ரொப்பகண்டா வார் (பரப்புரை யுத்தம்) மூலம் எவ்வளவு வெற்றிகளை பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது...



பரப்புரை யுத்தம் என்பது, கத்தியின்றி ரத்தமின்றி முன்னெடுக்கப்படுவதாகும்...அந்த பரப்புரை யுத்தம் பற்றி சமகால உதாரணத்தை சொல்லவேண்டும் என்றால் அது ஈராக் மீது அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போரை சொல்லலாம்...

இந்த பரப்புரை யுத்தத்தில் அமெரிக்க அரசு அடைந்த லாபங்கள் என்ன ? பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக சர்வதேச சமூகத்தை அமெரிக்க அரசு எவ்வாறு நம்பவைத்தது என்று எவ்வளவோ எழுதலாம்...

ஒரு சிறிய ஓட்டளிப்பு முடிவுகளை உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலமும், ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு சுட்டியை உங்களுக்கு தருவதன் மூலமும் கொஞ்சம் விளங்கவைக்கமுடியும்..

48% incorrectly believed that evidence of links between Iraq and al Qaeda have been found,

22% that weapons of mass destruction have been found in Iraq,
25% that world public opinion favored the US going to war with Iraq,
overall 60% had at least one of these three misperceptions,
the frequency of Americans’ misperceptions varies significantly depending on their source of news,
those who primarily watch Fox News are significantly more likely to have misperceptions, while those who primarily listen to NPR or watch PBS are significantly less likely,
among those with none of the misperceptions listed above, only 23% support the war,
among those with one of these misperceptions, 53% support the war, rising to 78% for those who have two of the misperceptions, and to 86% for those with all 3 misperceptions.

ஏற்கனவே பல இன அழிப்பு போர்களில் ஈடுபட்ட போலி கம்யூனிஸ்டு ருஷ்ய அரசாங்கத்திடம் இருந்து சர்வதேச அதிகார மையங்கள் பெற்றுக்கொண்ட தீமைகளில் இது முதன்மையானது என்பேன்...

ஹிட்லரிடமிருந்தும், போலி கம்யூனிஸ்டுகளிடமிருந்தும், பல்வேறு இன ஒழிப்பு பாசிச அரசாங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் இலங்கை அரசாங்கம் முதன்மையாக பயன்படுத்தி வெற்றி காண்பது இந்த பரப்புரை யுத்தம்தான்...

பாரீசில், ஜெர்மனியில், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரங்கள் வைத்த 'தீவிரவாதிகளை' பற்றிய கண்காட்சியில் இடம்பெற்ற போலியான படங்களும், அவர்கள் வினியோகித்த கட்டுரைகளும் இந்த பரப்புரை யுத்தத்தின் ஒரு பகுதியாம்...



ஜெர்மனியில் வெளிப்படையாக இதனை எதிர்த்து கேள்விகேட்ட தமிழரை, தூதரக அதிகாரிகள் அடித்து உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் இடம்பெற்றுள்ளது...

இன்னும் ஒரு விடயத்தை பார்க்கலாம்...



இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில இதழ்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள், காலே-கண்டி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, நன்கு மகிழ்விக்கப்பட்டு, நல்ல பரிசுப்பொருட்களுடன் இந்தியா திரும்பியுள்ளார்கள்...

அவர்களுக்கு புலிகள் தீவிரவாதிகளாக தெரிவதிலும் வியப்பில்லை, புலிகள் மனித கேடயங்களாக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று எழுத அவர்களின் பேனா கூச்சப்படவும் போவதில்லை...

இலங்கை அரசாங்கத்திடம் வாங்கிய ரொட்டித்துண்டுக்கும், இலங்கை அரசின் பிஸ்கெட்டுக்கும் வாலை வளையவளைய ஆட்டுகிறார்கள்...

தமிழரல்லாத இந்திய பொதுமக்களையும், ஹிந்துவும் ப்ரண்ட்லைனும் படிக்கும் அய்.ஏ.எஸ் அதிகாரிகளையும், காவல் அதிகாரிகளையும், உயர் பதவியில் இருப்பவர்களையும், தொழிலதிபர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் பொய்யான தகவல்களை நம்பவைக்கிறார்கள்...இலங்கை அரசின் கருத்துக்களை திணிக்கிறார்கள்...

வேறு ஒரு தகவல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும்..

லங்கா ரத்னா ஹிந்து ராம் நடத்தும் ஊடகத்தின் வாராந்திர கூட்டத்தில் இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் அம்சமாக கலந்துகொள்கிறார் என்பதே அந்த தகவல்...

இந்த பரப்புரை யுத்தத்தின் பிஸ்கெட் துண்டுகளுக்காக ஹிந்து இதழ் தொடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலை எடுத்துவருவதும், தமிழர் அல்லாத ஒருவரால நிறுவப்பட்ட தினமலர் என்ற தமிழ் நாளிதழ் தொடர்ந்து நச்சு கருத்துக்களை தமிழர் மத்தியிலே பரப்பி வருவதும் எவ்வளவு கீழ்த்தரமானது ?

ஹிந்து ராம் பெற்ற லங்கா ரத்னா பட்டம் போல அந்துமணி ரமேஷ் லென்சு மாமாவுடன் காலே-கண்டிப் பயண கட்டுரை எழுதினால் ஆச்சர்யம் ஒன்றுமில்லல...

இப்போது திடீரென பாரதீய ஜனதா கட்சி ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கூட எவனாவது சோ'மாறி யின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை...பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவான் இந்த துக்ளக்.

வேறு ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்...

அமெரிக்க அரசின் அடிப்பொடியான சி.என்.என் தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில், விவாதத்தை நடத்துபவர் ஒரு தமிழ் பேராசிரியரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்...

" வெறும் நான்கு சதவீதம் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் தாய்நாட்டில் முப்பது சதவீதம் நிலங்களை கோரினால் எப்படி ? "

நடுநிலையாக அமர்ந்திருந்த அந்த அறிவிஜீவி தொகுப்பாளரின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பேராசிரியரோ, தமிழர்கள் ரொம்பகாலமாக அங்கே வாழ்கிறார்கள் என்பதுபோல ஏதோ சொல்லிவைத்தார்...

ஸ்ரீலங்கா அரசினதும், மற்றும் சர்வதேசங்களால் முன்னெடுக்கப்படுவதுமான பரப்புரை யுத்தத்தின் வீச்சு, ஒரு தொலைக்காட்சி தொகுப்பை வழங்கும் ஒரு செய்தியாளரிடம் ஒரு பொய்யை, புரட்டை, கொண்டு சென்றுள்ளது...

இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும்...

ஸ்ரீலங்காவின் சர்வாதிகாரி ங்கோத்தபய, ஊடகங்களை மிரட்டும் விதத்தில் அறிக்கை வெளியிட்டதோடு, தூதரக அதிகாரிகளையும் எச்சரிக்கிறார்.

தோதாக இரு, இல்லை என்றால் ஒழிந்துபோ என்பது தான் அவரது அறிக்கையின் சாரம்.

ஸ்ரீலங்கா அரசினது சர்வாதிகாரம், அதனால் முன்னெடுக்கப்படும் பரப்புரை யுத்தத்துக்கு துணை போகவில்லை என்றால் கொல்கிறது, உதாரணம் லசந்த விக்ரமதுங்க.



தன் சாவுக்கு மகிந்த ராஜபக்ஷே காரணமாயிருப்பான் என்று அறிந்துவிட்டான் அந்த லசந்த என்னும் பத்திரிக்கையாளன்...

வேறு ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்துகொள்ளவேண்டும்...இன்றைக்கு பத்திரிக்கை செய்திகளின் சாரம், இலங்கை அரசின் விமான படையை சேர்ந்த, செஞ்சோலைகளை ரத்த சோலைகளாக்கிய வல்லூறுகளை இயக்கிய விமானிகள், சென்னை தாம்பரத்துக்கு மேலதிக பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளார்கள்..

யாருக்கும் தெரியாமல் போயிருந்தால் பரவாயில்லை...மக்கள் தொலைக்காட்சியினரும் மக்களும் அதை பார்த்து, படம் பிடித்து, அதை அம்பலப்படுத்தியதால், தமிழக முதல்வர் இந்திய பாதுகாப்பு அமைச்சில் பேசி, அவர்களை வெளியேற்றுமாறு தலைமைச்செயலாளரிடம் கூறுகிறார்.

தமிழக தலைமைச்செயலாளரும், இலங்கை விமானப்படை விமானிகள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திக்குறிப்பை வெளியிடுகிறார்.

ஆனால் இந்திய பாதுகாப்பு அமைச்சு, தமிழக முதல்வரிடம் கண்ணாமூச்சி விளையாடி, அவர்களை பெங்களூர் எலகங்கா விமானப்படைத்தளத்துக்கு அனுப்பி பயிற்சி பெறவைக்கிறார்கள்...



ஏ.கே.அந்தோனி, சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்ற மலையாளிகளிடம் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வை என்றைக்குமே எதிர்பார்க்க முடியாது...



இவர்கள் இந்த பரப்புரை யுத்தத்துக்கு பலியாகி இருக்கிறார்கள், அதனுடன், அந்த பரப்புரையோடு சேர்ந்து இழைந்த துரோகத்தையும் செய்ய மிகுந்த விரும்பமுடன் இருக்கிறார்கள்...ஒரு மாநில முதல் அமைச்சரை ஏமாற்றுவதற்கு கூட தயங்கவில்லை இவர்கள்...

வீரமுரசு முத்துக்குமாரின் மரணத்தின் பின்னால் ஒவ்வொரு நாளும் கொதித்துக்கொண்டிருக்கும் தமிழகத்தின் உணர்ச்சியை, உணர்வெழுற்சியை, தன்னெழுந்த இன உணர்வை, இந்தியா முழுமைக்கும் உள்ள ஊடகங்களிடம் கொண்டு சேர்த்திருந்தால் வந்திருக்குமா இந்த மலையாளிகளுக்கு தைரியம் ?

சரி என்னதான் தீர்வு ? யாரிடம் உள்ளது தீர்வு ?

தமிழகமே உறைந்துபோகும் அளவில் மக்கள் ஆதரவுடன் போராட்டங்களை நடாத்திவரும் எழுற்ச்சி கொண்ட தமிழினத்தின் ஊடகவியளாளர்கள், இந்திய அளவிலான ஊடகங்களை தொடர்புகொள்ளவேண்டும்...

இந்த பொய்களை, புரட்டை அம்பலப்படுத்தவேண்டும்..

இந்திய பத்திரிக்கையாளர்கள் சம்மேளனத்திடம் இருந்து ஈழப்போராட்டத்தின் உண்மை நிலையை விளக்கும் அறிவிக்கை வெளிவரவேண்டும்...

இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றும் அன்பான தோழர்கள், அவர்களின் தலைமைகளை நேரடியாக எதிர்க்கவேண்டும்...

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு மறுப்பு அறிக்கைகளை அந்த பத்திரிக்கையிலோ, அல்லது மற்ற பத்திரிக்கைகளிலோ வெளியிடும் வண்ணம் செயலாற்றவேண்டும்...

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, போஜ்புரி என்று அத்துனை மொழிகளிலும் ஈழத்தின் உண்மை நிலை வெளியாக பத்திரிக்கை நன்பர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்...

இந்திய அளவில் ஸ்ரீரீலங்கா அரசினதின் பரப்புரை யுத்தத்தை முறியடிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்...

சர்வதேசமெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், சர்வதேச ஊடகங்களுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் மூலம், தொலைபேசி மூலம் தொந்தரவு செய்து, கையூட்டு கொடுத்து, ஸ்ரீலங்காவினது பரப்புரை யுத்ததினை முறியடிக்கும் வகை செய்யவேண்டும்...

இந்த பரப்புரை போரின் மூலமே நாம் மக்கள் மனதை வென்றெடுக்க முடியும். சர்வதேசமெங்கும் மக்கள் மனதை வென்றெடுப்பதன் மூலமே தீர்வு சாத்தியப்படும்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....