Wednesday, June 18, 2008

செவ்வாயில் ஐஸ் !!!

செவ்வாயில் ஐஸ் இருப்பதற்கான பல்வேறு சான்றுகளை இந்த படங்கள் காட்டுகிறது...



இது...



இதுவும்...



அட இதுவுந்தாங்க...



மெய்யாலுமே செவ்வாயில ஐஸ் இருக்காமே...அதை கேள்விப்பட்டு இப்படி ஒரு மொக்கையை போட்டுக்கிடேன்..

இப்ப எல்லாரும் மொக்கை மொக்கைன்னு வந்துட்டீங்களே, பழைய மொக்கை பதிவரான என்னுடைய மொக்கைய நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் கொஞ்சம் கம்ம்ம்னும் கீறேன்...!!

9 comments:

VSK said...

நெனைச்சேன்! இப்படி எதுனாச்சும் தான் வரும்னு நெனைச்ச்சேன்!

நிம்மதியா இருங்க சாமி!
:)))))))0

Anonymous said...

அச்சு அசல் மொக்கைப்பதிவர் அண்ணன் செந்தழல் வாழ்க.

Sen22 said...

I like this mokkai...
Good...

சிந்திக்க உண்மைகள். said...

இன்னும் செவ்வாய்த் தோஷமா?
அமெரிக்காவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க்கிரகத் தில் வட துருவத்தில் இறங்கியது.

அதில் அனுப்பி வைக்கப் பட்டுள்ள இயந்திர மனிதன் (ரோபாட்) அரிசோனா பல் கலைக் கழக ஆய்வாளர் களால் வடிவமைக்கப்பட் டது. அது செவ்வாய்க்கிரகத்தின் கால நிலை, பனிக்கட்டி பாறை, கரிம வேதிப் பொருள்கள் உள்பட அனைத்தையும்பற்றி ஆய்வு செய்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு (நாசா) சேதி அனுப்பும் விண்கலத்தில் முது பெரும் அமெரிக்க அறிவியலாளர் ஸ்மித் வடிவமைத்த ஓர் ஒளிப்படக் கருவி (கேமிரா) பொருத்தப்பட்டுள்ளது.

அது செவ்வாய்க்கிரகத்தின் வட துருவத்தை துல்லியமாகப் படம் பிடித்து பூமியில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு அனுப்பும்.

அமெரிக்க விண்வெளி மய்யத்திலிருந்து 9 மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்ட விண்கலம் சுமார் 71 கோடி கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு 26.5.2008 திங்கள்கிழமை அன்று பகலில் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கியது.

இது ஆளில்லாத விண்கலமாகும்.
கிரேக்க புராணத்தில் வரும் `பீனிக்ஸ் என்ற பறவையின் பெயர் இந்த விண்கலத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

விண்கலத்துக்குப் பறவை யின் பெயர் வைக்கப்பட் டுள்ள போதிலும் இதன் வடிவத்துக்கும் பறவையின் உருவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விண்கலம் வட்டமான மேசை போல உள்ளது.

இதன் உயரம் ஒன்றரை மீட்டர். எடை 350 கிலோ.
இந்த விண்கலத்தில் ஆய்வு களுக்கான பல கருவிகள் உள்ளன. மண்ணைத் தோண்டுவதற்கென சுமார் இரண் டரை மீட்டர் நீளம் கொண்ட வலுவான கரம் உள்ளது.

இந்தக் கரத்தைப் பயன்படுத்தி சுமார் 2 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அங்கு மண்ணுக்கு அடியில் பனிக் கட்டி இருக்கிறதா என்று ஆய்வு செய்யும்.

இந்த ஆய்வு எதற்கு என்று அறிவியலாளர்களைக் கேட்டதற்கு செவ்வாய் கிரகத்தில் பரவலாக மண்ணுக்கு அடி யில் நிறைய பனிக்கட்டி இருக்குமானால் அதை உருக்கி நீரைப் பெற முடியும். அந்த நீரை ஆக்சிஜன் வாயு வாகவும், நைட்ரஜன் வாயு வாகவும் தனித்தனியே பிரித்துக் கொள்ள இயலும். இந்த வாயுக்களைப் பின்னர் ஏவுகணை இயக்கத்துக்கான எரிபொருளாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்றனர்.

இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. ஆகவே, செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகத் தெரிய வருமானால் அது செவ்வாயில் மனிதன் தங்கி - இருப்பதற்குப் பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிரகத்தில் பல வாய்கால்கள் இருப்பதாக பெர்சிவல் லோவல் என்ற அமெரிக்க அறிவியலாளர் 1895-இல் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பல விண்கலங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இறங்காமல் தரையில் மோதி நொறுங்கியதுண்டு. ஆனால், பீனிக்ஸுக்கு அந்த நிலை ஏற்படவில்லை.

விஞ்ஞான உலகம் செவ் வாய்க்கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி மண்ணைத் தோண்டி வந்துள்ள நிலையில்,

இங்கு என்னடா என்றால் செவ்வாய்த்தோஷம் கழித்துக் கொண்டு இருக்கின்றனர்
http://viduthalai.com/20080614/sunday_news10.html

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

Boston Bala said...

:))

சென்ஷி said...

//இப்ப எல்லாரும் மொக்கை மொக்கைன்னு வந்துட்டீங்களே, பழைய மொக்கை பதிவரான என்னுடைய மொக்கைய நீங்க தாங்க மாட்டீங்கன்னு தான் கொஞ்சம் கம்ம்ம்னும் கீறேன்...!!//

எங்களுக்கு தெரியாதா தலைவா உன் அருமையெல்லாம் :))

PRABHU RAJADURAI said...

மொக்கையென்றாலும், புத்திசாலித்தனமான மொக்கை!

கோவை விஜய் said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....