Sunday, March 30, 2008

INTEGRITY ?




Your Integrity ? Everyone Knows about it :)))

முடியல முடியல் - கேள்வி பதில் பதிவு

வசந்தம் ரவி கேள்வி பதில் பதிவு வெளியிட்டுள்ளாரே ?

மூர்த்தியாகிய விடாது கருப்பு "சதீச்" என்று ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டாரே !!!! அதை நம்பிட்டீங்களா சாமி நீங்க :) போலிப்பயலுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரம் தான் வீண்...

அப்படி ரொம்ப நல்லவராக இருந்தால் தனது இந்திய தொலைபேசி எண்ணை வெளியிடட்டுமே !!!


டிபிசிடி அய்யாவின் சமீபத்திய "லொள்" பதிவு பற்றி ?

பின்னே ? அவரது ஆஸ்தான போலியாரை தாக்கி பதிவிட்டால் ஏன் அவருக்கு கோபம் வராது..அவருடைய சுபாவத்தை வெளிக்காட்டுகிறார் போலிருக்கிறது...

கோவி.கண்ணன் அய்யாவை கடுமையாக தாக்கி பின்னூட்டியது ஏன் ?

இதுவரைக்கும் மூர்த்திதான் போலி என்று ஒத்துக்கொள்ளாமல், எதுவுமே தெரியாமல் இருப்பது போல் நடிப்பது தான் எரிச்சலை கூட்டுகிறது...

மூர்த்தி என்னை ஆபாசமாக திட்டிய ( நானும் திட்டினேன்) சாட்டை அவருக்கு அனுப்பிய பிறகும் மூர்த்தி நல்லவன் என்று வலையில் எழுதி வருவது அவரது நம்பகத்தன்மையை கடுகளவு சுருக்கியது..

பிறகு விடாது கருப்புக்கு பின்னூட்டம், கடிதம் ( அந்த பதிவில் தானே என்னுடைய குடும்பத்தை அசிங்கமாக எழுதி பதிவு வந்தது ) என்று அவர் சென்றவுடன் - அதன் பிறகு அவரிடம் எப்படி எனக்கு மரியாதை ஏற்படும் ?

போலிப்பிரச்சினை எப்போது தான் முடியும் ?

100 பதிவர்களின் மன உளைச்சளுக்கு விடிவுகாலம்...பிரச்சினை முடிவை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது...விரைவில் நல்ல விவரங்கள் தெரியவரும்...சட்டரீதியான நடவடிக்கை பலன் தரப்போகும் நேரம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்...

இப்படிக்கு ரோஸ் : விஜய் டிவியில் லிவிங் ஸ்மைல் வித்யா

வரும் வியாழன் இரவு பத்துமணிக்கு "இப்படிக்கு ரோஸ்" என்ற வித்யாசமான - ரோஸ் என்னும் திருநங்கையால் நடத்தப்படும் நிகழ்ச்சியில் நமது தோழி லிவிங் ஸ்மைல் வித்யா கலந்துகொள்கிறார்....

"அலி" என்ற வார்த்தையை கேட்டவுடனே தீயை மிதித்தமாதிரி ஓடிக்கொண்டிருந்த என்னுடைய நன்பர்களுக்கு - லிவிங் ஸ்மைல் வித்யாவின் பதிவை கொடுத்து படிக்கச்சொன்னவுடன், "திருநங்கை" என்ற பதத்தை உபயோகப்படுத்துகிறார்கள்...

திருநங்கைகளை நோக்கி கனிவான பார்வையையும் செலுத்த தொடங்குகிறார்கள்...

வலைப்பதிவினர் மத்தியிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய லிவிங் ஸ்மைல் வித்யா, இப்போது சின்னத்திரையிலும் தோன்றப்போகிறார்...

அவர்களுக்கு உண்மையான விடியல் என்பது - சமுதாயத்தின் பார்வை அவர்கள் மீது கனிவுடன் விழும்போது தான்...

அந்த பணியில் விஜய் டிவி முன்னோடியாக, "ரோஸ்" என்ற திருநங்கையை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஒரு மைல் கல் என்றுதான் சொல்லவேண்டும்...

திருநங்கைகளுக்கு, ஓட்டுரிமை, ரேசன் கார்டு எல்லாம் "அப்பாலிக்கா" பார்த்துக்கலாம்...

உஸ்ஸு என்று கூப்பிடாமல் சகோதரி என்று அழைக்கவைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி...

நம் சகோதரி, சக வலைப்பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவின் நிகழ்ச்சியை வியாழன் இரவு பத்துமணிக்கு பாருங்கள் - விஜய் டிவியில்...!!!

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களே....

Saturday, March 29, 2008

சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி

சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது போலி டோண்டு மலேசியா மூர்த்தி என்று ஒரு திடீர் தகவல் வந்தது...

வந்தது என்னமோ அனானிமஸ் ஒருவரின் செய்திதான் என்றாலும், செய்தியின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு சந்தேகம் ஏதுமில்லை...

இணையத்தில் ஹேக்கிங், பிஷ்ஷிங் செய்பவர்கள் தனியான போரம், நியூஸ் க்ரூப்ஸ் என்று இயங்குகிறார்கள்...

இப்போது இணையத்தின் வலைத்தளத்தின் மூலம் இன்ஸ்ட்டால் செய்து தகவல்களை திருடும் வகையில் புதிய டெக்னாலஜியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன...

அதன் மூலம் ஜிமெயில் பாஸ்வேர்டுகளை களவாடுவது இருபத்து நாலு மணிநேரமும் கணினி திரையை பைத்தியம் போல் பார்த்துக்கொண்டிருக்கும் விடாது கருப்பு மலேசியா மூர்த்தி மருதமுத்துவுக்கு பெரிய விசயம் அல்ல...

இன்றைக்கு தமிழச்சி தளத்தில் இருந்து வந்த பின்னூட்டம், இட்லிவடையின் ஜிமெயில் ஸ்க்ரீன்ஷாட் என, மூர்த்தியின் கையில் கிடைத்த ஸ்க்ரிப்ட் சிறப்பாகவே வேலைசெய்கிறது...

சாருவின் கணக்கிலிருந்தும் பணத்தை ஆட்டையை போட்டது அவனாகவே இருக்கலாம்..

அப்படி இருந்தால், இதுவரை பதிவர்களை மனதளவில் மட்டுமே தொல்லை செய்துகொண்டிருக்கும் மூர்த்தி மருதமுத்து, பைனான்ஸியல் க்ரைம் என்ற அளவில் இறங்கிவிட்டான் என்பதே சரியான கணிப்பாகும்...

வெர்பல் அப்யூஸ் போன்றவைகளை இந்திய சைபர் க்ரைம் பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பைனான்ஸியல் க்ரைம் போன்ற விடயங்களில் இந்திய சைபர் கிரைம் சிறப்பாகவே செயல்பட்டு - குற்றவாளிகளுக்கு "ஸ்பெஷல்" ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறது...

புகார் கொடுக்கப்பட்டால் இருபத்தினான்கு மணி நேரத்தில் பாஸ்போர்ட் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டு, இந்திய மண்ணில் இனிமேல் கால் வைக்க முடியாத அளவில் செய்தும் இருக்கிறார்கள்...

போலி டோண்டு மலேசியா மூர்த்தி மருதமுத்துவின் அத்தியாயம் முடிவுரையை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கிறதாகவே எனக்கு படுகிறது...

ஸ்பெஷல் ஆப்பு வைக்க "பாபா" கவுண்டவுன் ஸ்ட்ட்ட்ட்ட்ர்ட்...ஸ்ட்டார் மீஜிக்....

ஓவராக்ட் பண்ணி கெடுத்துட்டியேடா போலி டோண்டு !!!!


அடங்க்கொக்கமக்கா !!!! இப்படி ஓவராக்ட் பண்ணி கெடுப்பேன்னு ராசி பலன்ல தெரிஞ்சிருந்தா இன்னைக்கு பதிவே போடாம இருந்து இருக்கலாமே ?
தமிழ்மணத்தில் டாப் டென் : வசந்தம் ரவி (பர்ஸ்ட்) அப்படீன்னு இனிமே பதிவு போடமுடியாதே ?

இட்லிவடை மின்னஞ்சல் ஸ்கீரின்ஷாட்டை மாற்றிய போலி டோண்டு வசந்தம் ரவி


பூனைக்குட்டி வெளியே வந்தவுடன் பரபரவென்று அங்கே இங்கே ஒடும் கதையாக, வசந்தம் ரவி என்பது போலி டோண்டு மலேசியா மூர்த்தியை தவிர வேறில்லை என்று சொல்லி பதிவிட்டேன்..


அதில் இட்லிவடையின் மின்னஞ்சல் எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பி இருந்தேன்...


இட்லிவடைக்கு மின்னஞ்சல் செல்வன், பா.ராகவன் போன்றவர்களிடம் இருந்து வந்திருந்தது அந்த மின்னஞ்சல் ஸ்கீரீன் ஷாட்டில் காணக்கிடைத்து...


பா ராகவன் ஏதோ ராகம் பற்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். செல்வன் எதோ பார்வேர்டு செய்திருந்தார்...


கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை மாற்றி, கவுண்டமணி திருமணத்தில் விஜயகாந்த் பரிசு கொடுக்கும் ஸ்க்ரீனை போட்டுவிட்டார் விடாது கருப்பு மூர்த்தி..


அருண்மொழி, காசி, இளா உட்பட பல பதிவர்கள் அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பார்த்துள்ளார்கள்...அவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம்..

இந்த டெம்ப்ளேட் திருடப்பட்டதாக பாலபாரதி பதிவில் இப்போது தான் பார்த்தேன்..


இந்த திருட்டு திருமுகம் எப்போது தான் திருந்துமோ ? இதில் மேட்டர் என்னவென்றால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருக்கும் தெலுங்கு மாமியார் பார்ட்டிகள் இந்த ஊரை ஏமாற்றும் வேலைக்கு துணைபோவதுதான்...
பி.கு : விமானம் ஏறுகிற வரைக்கும் பதிவு போட்டுக்கிட்டிருக்கனும் அப்படீன்றது விதி போலிருக்க் :)))

வசந்தம் ரவிதான் போலி டோண்டு மலேசியா மூர்த்தியா ?

வசந்தம் ரவி எதையோ எழுதினார் என்பதற்காக பதிவர்கள் NMH எடிட்டர், முகுந்தின் இ-கலப்பை உட்பட மென்பொருட்களை நீக்கிவிட்டு மொக்கையாகிறார்கள் என்று ஆனபிறகு உண்மையை சொல்லிவிடலாம்...

"தமிழ் தட்டச்சு" மென்பொருட்கள் என்று குன்ஸாக பெயர் வைத்து அவர் எந்த மென்பொருளை டார்கெட் செய்கிறாரோ அது புரியவில்லை, ஆனால் கூகுள் டூல்பார், மைக்ரோ சாப்ட் வேர்டு உட்பட எந்த மென்பொருளும் இணையத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை அனுப்ப முடியும்...

இட்லிவடையின் இ-மெயில் ஹேக்கிங் படம் எப்படி கிடைத்தது இவனுக்கு ? ஹேக் செய்ததே இவன் தானோ ? தமிழ் இணையத்தில் ரெண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டால் போதும், எது மலேசியா மூர்த்தியின் பதிவு என்று குழந்தை கூட சொல்லிவிடும்...

இப்போதெல்லாம் மின்னஞ்சலில் உயர் பாதுகாப்பு தகவல்கள், வங்கி கணக்குகள் போன்ற விவரம் இருப்பதால் உங்கள் மின்னஞ்சலை பாதுகாத்துக்கொள்வது நல்லது தான்,

ஆனால் மின்னஞ்சலை பாதுகாக்கிறேன் என்று வசந்தம் ரவி அலைஸ் போலி டோண்டு அலைஸ் மலேசியா மூர்த்தி அலைஸ் விடாது கருப்பு பேச்சை கேட்டீங்கன்னா, முதலுக்கே மோசமாகும்.

வேலியில் போற ஓனானை காதில் விட்டுக்கொண்டது போல ஆகும்...

பதிவர்களை ஒரு மென்பொருளை டவுன்லோடு செய்ய சொல்லுகிறானே, அந்த மென்பொருள் கூட ஒரு திருட்டு மென்பொருளாக இருக்கும்...

பதிவர்களே - இந்த "தெய்வமகன்" வசந்தம் ரவி அலைஸ் விடாது கருப்பிடம் இருந்து (மூர்த்தி) தப்பித்துகொள்ளுங்கள்....

Wednesday, March 26, 2008

விண்டோஸ் கணிணிக்கு புதிய வைரஸ் !!!!!!!!!!!!



புதிய ட்ரோஜன் வைரஸ் ஒன்று வண்தட்டுகளை அழித்து வருகிறது.

விண்டோஸ் எக்ஸ்பி அப்டேட் செய்யுங்கள் என்று நாசூக்காக சொல்லும் அந்த மின்னஞ்சல், நீங்கள் அதனோடு இனைக்கப்பட்ட சுட்டியை க்ளிக்கியவுடன், உங்களிடம் சில எஸ், நோ க்களை கேட்டுவிட்டு உள்ளே இறங்கிவிடும்...

பிறகு உங்கள் வண்தட்டு முழுவதையும் காலி செய்துவிடும்...

அதனால் ஜாக்கிரதை...ஜாக்கிரதை...!!!!!!!!!!!!

( இந்த படத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்...எந்த கருமத்தை எழுதினாலும் அதுக்கு ஒரு பின்னவீனத்துவ படம் போடுறது இப்ப வழக்கமாகிட்டு வருது )

மோகன்தாஸ் கதைகளின் மீது ஒரு விமரிசனப்பார்வை

பொதுவாக மோகன்தாஸ் எழுத்துக்களை பார்த்தால் ரொம்ப பழுத்த உலக அனுபவவாதியின் எழுத்துக்கள் போலிருக்கும்...இப்போ வவ்வால் எழுதுகிறாரே...அதுபோல இருக்கும்...ஆனால் அவரை நேரில் சந்தித்த வெகுசிலரில் நானும் ஒருவன் என்பது தவிர அதிகம் தொடர்புகொள்வதில்லை.

பி.கே.எஸ் போன்றவர்கள் அவரது எதுக்களின் மீது விமர்சனங்கள் வைக்கும்போது, ரொம்ப பெரிய ரைட்டர் போலிருக்கு என்று எனக்கு ஒவ்வாத குரூப்பில் வைத்து ( அதாவது பதிவைக்கண்டதும் தமிழ்மணத்தையே மூடிவிடுவது :))))...புறக்கணித்துக்கொண்டிருந்தேன்.

ஒருமுறை ஒரு ம.க.இ.க தோழர் கூட மோகன்தாஸ் நன்றாக எழுதுவதாக சொன்னார்...அப்பவே முடிவு செய்துவிட்டேன், இந்தமாதிரி ஆளுங்க பதிவை எட்டியே பார்க்கக்கூடாது என்று...

வெறுப்பு இல்லை, அந்த அளவுக்கு நமக்கு சரக்கு இல்லை என்பதே உண்மையான காரணம்...

ஆனால் - அதனை அந்த சந்திப்பு மாற்றியது.

முதலில் பார்த்ததும், மோகன்தாஸ் தன்னோட மகனை அனுப்பி விளையாட்டு காட்டுகிறாரோ என்று தான் நினைத்தேன். தலைமேலடித்து சத்தியம் வைக்காத குறையாக சொன்னபிறகு தான் நம்பினேன்...

இருபத்து மூன்றுகளில் நிற்கும் மோகன்தாஸா இவ்வளவு நீள அகலமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் என்று நம்பவே சற்று கடினமாக இருந்தது...

அப்புறம் ஆசிப் அண்ணாச்சியுடனும் மோகனாவுடமும் அடித்த நீண்ட லால்பாக் அரட்டை மற்றும் வாலிபால் விளையாட்டு வாட்சிங்...ஊப்ஸ்...மறக்கவே முடியாத காவியம் :))

இவரிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், தன்னுடைய மனதுக்கு பிடித்ததை / மனதுக்கு சரியென்று பட்டதை தயங்காமல் செய்யும் குணம்...

இந்த வார இறுதியில் வரும் நீண்ட பயணத்துக்கான பணிகளில் ஒன்றாக மடிக்கணினியில் நல்ல சிறுகதை - தொடர்கதைகளை இணையத்தில் இருந்து உறிஞ்சும் வேளையில் மோகன் பி.டி.எப் கோப்பாக கொடுத்து இருந்த தொடர்கதைகளின் பட்டியல் தென்பட்டவேளையில் அப்படியே உருவிக்கொண்டேன்.

விமானத்தை தொலைத்தாலோ அல்லது நீண்ட நேரம் விமான நிலையங்களில் அமரவேண்டியிருந்தாலோ படிக்கலாம் என்றுதான் எடுத்தேன், ஆனால் டெஸ்க்ட்டாப்பிலேயே அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்ததால் இன்றைக்கு திறந்துவிட்டேன்.

இதுக்கு பிறகு தான் விமர்சனமே வருதுங்னா, ப்ளீஸ் வெயிட்...

கதைகள் ஏனோ வளவளா !!!! ஒன்றுக்கொண்று தொடர்பில்லாத பல வாக்கியங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பத்திகளை உருவாக்குகின்றன...

ஒவ்வொரு காரெக்டர்களும் ஏதோ தாடி வைத்த சாமியார் பேசுவது போல விஷயங்களை அள்ளித்தெளித்திடுகின்றன....

இண்டராக்டிவ் என்பதை விட ப்ரீச்சிங் அதிகமாகவே காணக்கிடைக்கிறது....

கொஞ்ச நேரம் படித்தபிறகு ஏனோ ஒரு திடீர் சலிப்பு வந்து ஒட்டிக்கொள்கிறது....

இவ்ளோ தான் என்னோட விமர்சனம்....எனக்கு மட்டும்தான் இப்படி தோனுதா என்பது தெரியவில்லை, இருந்தாலும் எழுதிவிட்டேன்...

Sunday, March 23, 2008

சுவீடன் வாழ் தமிழர்கள் இருக்கீங்களா ??

அல்லாருக்கும் வணக்கங்னா...!!!!!

இப்பாலிக்கா புதுசா ஆணி புடுங்க ஆரம்பிச்ச இடத்துலேங்னா, நெறைய ஆணிங்னா....நம்மளோட தொல்லை பொறுக்கமுடியாம, ஒரு மூனுமாசம் 'ஒழிஞ்சு போ' அப்படீன்னு தொரத்துற இடம் சுவீடனுங்னா...

நம்ம புது டேமேஜர் இருக்காரே, படா பேஜார் புடிச்ச ஆளுங்னா...மதுரைக்காரர்...மொபைல் வேர்ல்டு காங்கிரஸாமே, அதுக்கு போயிட்டு வந்ததுலருந்து, அத்தப்பண்ணு இத்தப்பண்ணுன்னு ஒரே பேஜார் பண்ணிக்கினு கீறார்...

ஹும்...ஸ்டாக்குஹோமுல ஆணி புடுங்குன்னு தொரத்துறாருங்கன்னா...

ஸ்வீடன் வாழ் தமிழர்கள் ஆராவது வலைப்பதியுறீங்களா ? அதிகம் தொந்தரவு ஒன்னும்மில்ல, அரிசி பருப்பு கிடைக்குதா, இட்லிக்கடை ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கொஸ்டின்ஸ் தானுங்க...

உங்களோட அலைபேசி எண்ணை பின்னூட்டமா கொடுங்க, அடுத்த வார இறுதியில அங்கே மனைவியோட வந்திருவேனுங்க...கொஞ்சம் லொக்கேஷன் ஹெல்ப்ஸ் !!!!

ஆங்...ஆணி அதிகமாயிட்டதால இந்த வருஷம் இது கடைசி பதிவுங்னா..(ஹை ஹை, யாரை ஏமாத்தப்பாக்குற :)))) )

வரேனுங்க...!!!!!

Sunday, March 09, 2008

டோண்டு மீட்டிங் - முழுமையான கவரேஜ்...!!!

என்னுடைய வாடகைக்காரை நடேசன் பூங்கா வாசலில் நிறுத்திய நேரம் சரியாக மணி 6:00..அதியமான் ஏற்கனவே வந்து காத்திருந்தார்...அங்கே வாசலில் நின்று எலந்தப்பழம் விற்றுக்கொண்டிருந்த நன்பரை, வலைப்பதிவு மீட்டிங் உள்ளே நடப்பதாகவும் அதில் வந்து கலந்துகொள்ளுமாறும் வலியுறுத்திக்கொண்டிருந்தார்..

டங்கென எண்டரி கொடுத்த நான், வலைப்பதிவு முடிந்ததும் டட்ச் ட்ரீட் முறையில் ரத்னா கபேயில் சாப்பிடவும் அழைக்குமாறு சொல்லிக்க்கொண்டே, மீட்டிங் நடைபெறவிருந்த புல் தரையை நோக்கி நடையை கட்டினோம்...

நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சாலை தெளிவாக தெரிந்ததால் கரிய நிற ஸ்கோடா ஒன்று வந்து நிற்பதும் அதில் இருந்து ஆஜானுபாகுவான ஒருவர் இறங்கிவருவதும் தெரிந்தது...முகம் சரியாக தெரியவில்லை...

எங்களை நெருங்கியவுடன் அவர். திரு.எல்லே ராம் என்று நன்றாக விளங்கியது...அவரை வரவேற்று - அமர சரியாக இடம் கிடைக்கவில்லை, கையில் இருந்த துக்ளக் நடுப்பக்கத்தினை கிழித்து தரையில் போட்டு - அவரை அமரவைத்தோம்...

வேறு யாரும் வருவதை உறுதி செய்யவில்லை...இருந்தாலும் பாரதீய நவீன அரசன், குட்டிப்பையன் இருவரும் கடைசீ நேரத்தில் எஸ்கேப்பானது ஏன் என்று தெரியவில்லை...டட்ச் ட்ரீட் என்றதும் தெறித்து ஓடிவிட்டார்களோ ?

நான் தான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே...மீட்டிங்கு வந்துவிட்டு ரத்னா கபேக்கு வராதவர்கள் இந்த டட்ச் ட்ரீட் முறைக்குள் வரமாட்டார்கள் என்று ( ரத்னா கபேக்கு வராதவங்கிட்ட எப்படி காசு கேக்குறது ???) - இருந்தாலும் அட்லீஸ் டி.பி.ஆர் ஜோசப் அய்யா இருவரும் வந்திருந்தால் இன்னும் சிறப்படைந்திருக்குமே இந்த மீட்டிங் ?

இனி டயலாக் மோட்...!!!

டோண்டு: முதல்ல, சுஜாதா இறந்ததுக்கு ஒரு இரங்கல் கூட்டம் போட்டுக்கலாம்...

எல்லே ராம்: ரெண்டு மூனுபேரு வந்தா அது கூட்டமா டோண்டு சார் ?

அதியமான்: நான் இன்னும் ரெண்டு பேரை எதிர்பார்க்கிறேன் சார்...வெயிட் ப்ளீஸ்...ஹே அங்கே பாருங்க...யாரோ வருகிற மாதிரி இருக்கு...

உண்மைத்தமிழன் எண்ட்ரி...!!! சார், பக்கத்துல தான் வீடு...நான் டீ சாப்பிட வந்தேன்...

டோண்டு: நோ...இந்த பக்கம் க்ராஸ் பண்ணா உட்கார்ந்து தான் ஆகனும்...நீங்க போக விடமாட்டேன்...பக்கத்துலேயே சிக்கன் பிரியாணி ஸ்டால் இருக்கு...அதுல சிக்கன் பிரியாணி வாங்கித்தரேன்...இருங்க...

உண்மைத்தமிழன்: சார்...நான் வெஜிட்டேரியன்...

டோண்டு: ஆமாம், நீங்க தான் சொல்றீங்களே..."நான் வெஜிட்டேரியன்னு.." அப்ப நீங்க என்.வி தானே...எப்படி மொக்கை போட்டேன் பார்த்தீங்களா ?

உண்மைத்தமிழன் : தாங்கலை...ஆளை விடுங்க...

(அதியமான் வாக்கிங் பாத்தில் இருந்து தும்பைப்பூ நிற வேட்டியணிந்த ஒருவரை பிடித்து இழுத்து வருகிறார்)

டோண்டு: வாங்க சிவஞானம்ஜி. எப்படியோ மீட்டிங் வந்துட்டீங்க...தாங்ஸ்...உங்களுக்கு டட்ச் ட்ரீட்ல 5% டிஸ்கவுண்ட் தரேன் ஓக்கே ?

சிவஞானம்ஜி: யோவ் நான் வாங்கிங் வந்தேன்யா...

அதியமான்: அதெல்லாம் ஒத்துக்கமுடியாது...வலைப்பதிவு வெச்சிருக்கீங்க இல்லையா ? அப்போ நடேசன் பார்க் ஏன் வந்தீங்க ? நீங்க மீட்டிங்ல கலந்துக்கிட்டுத்தான் ஆகனும்...

சிவஞானம்ஜி: சரி விடுங்கப்பா...எத்தனைபேர் மீட்டிங்ல இருக்கீங்க ?

டோண்டு : உங்களோட சேர்த்து ஆறு பேர்...

சிவஞானம்ஜி: யோவ் எனக்கெண்ன கண்ணு பொடனியிலயா இருக்கு ? அஞ்சு பேரு தானே இருக்கீங்க ?

டோண்டு: ஹி ஹி இட்லிவடையோட சேர்த்து ஆறு பேர். அவர் எக்ஸல் ஷீட் ஹிட்டன் செல் மாதிரி. இருப்பார். ஆனா இருக்கமாட்டார். வருவார். ஆனா வரமாட்டார். இப்ப புரிஞ்சுதா ?

உண்மைத்தமிழன் : ஒரு மண்ணும் விளங்கல...

டோண்டு: நான் ஒன்னும் ப்ரெஞ்ச்லயோ, ஜெர்மன்லயோ சொல்லலியே...சரி இனிமே மீட்டிங்க ஆரம்பிச்சுடலாமா ?

அதியமான்: எஸ் ஸார்.

டோண்டு: முதலிலேயே சொன்னமாதிரி எல்லாரும் சுஜாதா இறப்புக்கான இரங்கலா, ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம். எல்லாரும் எழுந்திரிங்க...நான் உட்கார்ந்தே செலுத்தரேன்...

எல்லோரும் மவுனமாகிறார்கள்...

டோண்டு: இப்படித்தான் சுஜாதா வீட்டுக்கே போய் நாங்க மவுன அஞ்சலி செலுத்தினோம் தெரியுமா, சமீபத்தில் 1971ல் சுஜாதாவை ட்ரெயினில் சந்தித்தபோது...

எல்லேராம்: ஷட்டப் டோண்டு. ஒரு நிமிட மவுன அஞ்சலின்னு சொல்லிட்டு பத்தாவது செக்கண்ட்லேயே பேசுறீங்களே...

டோண்டு: சாரி மிஸ்டர் எல்லே ராம். இப்படித்தான் ஐ.டி.பி.எல்ல ஒர்க் பண்ணும்போது...

உண்மைத்தமிழன் (டெண்ஷனாக): யோவ், இப்ப மவுன அஞ்சலி நடக்குதா இல்லையா ?

அதியமான்: மவுன அஞ்சலி ப்ளான் ட்ராப் ( எல்லோரும் உக்காருங்க), டோண்டு சாரை வெச்சுக்கிட்டு என்னத்த மவுன அஞ்சலி செய்யுறது ?

டோண்டு: சுஜாதா சார் வீட்டுக்கே போய் நானும் அதியமானும் அவர் பாடிக்கு லெப்ட் சைட்ல நிக்குறோம். தேசிகன் ரைட் சைட்ல கலங்கிப்போய் நிக்குறார். அப்போ ஒரு ஹாட் டிஸ்கஷன் செய்தோம் நானும் அதியமானும்...

சிவஞானம்ஜி: என்ன டிஸ்கஷன் சார் அது ?

டோண்டு: போலி டோண்டு இப்ப எல்லாம் பின்னூட்டம் போடுறதில்லையே, ஒரு வேளை நம்ம வலைப்பதிவு முகவரி அவனுக்கு மறந்துட்டதான்னு ரெண்டு பேரும் டிஸ்கஷன் செய்தோம்...

எல்லே ராம்: யோவ் அங்க போயும் விடலையா அதை நீங்க....

உண்மைத்தமிழன்: அங்க கமலஹாசன் கிட்ட என்ன சார் பேசுனீங்க ?

டோண்டு: நான் அய்யங்கார், அப்படி சொல்வதில் பெருமை கொள்கிறேன் அப்படீன்னேன்...அவர் கவனிக்கவே இல்ல...

சிவஞானம்ஜி: அப்புறம் ?

டோண்டு: மருதநாயகம் எப்ப சார் வருது ? அது ட்ராப் ஆணா மந்தைவெளி நாயகம்னாவது ஒரு படம் எடுங்க அப்படீன்னேன்...

உண்மைத்தமிழன்: அட...அதுக்கு அவர் என்ன சார் சொன்னார் ?

டோண்டு: அசமஞ்சமா நின்னார். பாவனான்னு ஒரு பாப்பா வந்திருக்கு ( துபாய் கும்மி கோஷ்டிகள் கவனிக்க), ப்ரெஞ்சு கிஸ்ஸுக்கு ஏற்ற உதடு அதனோடதுன்னேன்...ரொம்ப இண்ட்ரஸ்ட்டா கேட்டார்...

உண்மைத்தமிழன்: அப்புறம் ????

டோண்டு: நானும் ஒரு ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், ப்ரெஞ்சு கிஸ் பற்றிய சந்தேகங்களை என்னிடமே கேட்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டேன்...

சமீபத்தில் 1961ல் ஏவீஎம் திரைப்படத்தில் அம்மாவும் நீயே என்று அவர் பாடியதை ட்ரிப்ளிக்கேன் ஜலசா தியேட்டரில் மண்ணை குவித்து பார்த்ததை சொல்லி பழைய சம்பவங்களை நினைவு படுத்தினேன்...என்னன்னே தெரியல...நான் கிளம்புறேன் பாய் அப்படீன்னு சொல்லிட்டு போய்ட்டார்...

உண்மைத்தமிழன்: நானும் அங்கேயே தானே இருந்தேன்...அவரை பார்த்தா பாய் சொல்லிட்டு போன மாதிரி தெரியலியே...புடுங்கிக்கிட்டு ஓடினமாதிரி தானே தெரிஞ்சது ?

டோண்டு: அடப்போங்க சார்...அங்கே வந்திருந்த பிரபல எழுத்தாளர்கள் சாரு, எஸ்.ரா, ஜெயமோகன் ஆகியவர்களிடம் போய் நானே என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன்...

டோண்டுன்னவுடனே சும்மா அதிர்ந்தாங்க தெரியுமா...என்னுடைய ஜடிபிஎல் நினைவுகள், புதிர்கள் எல்லாத்தையும் படிச்சுக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்...

சிவஞானம்ஜி: டோண்டுன்னவுடனே அதிர்ந்தாங்களா ??

டோண்டு: அட ஆமாம் சார்...நம்புங்க...

அதியமான்: அதில ஒரு ரகசியம் இருக்கு சார்...ஏன் டோண்டு சார் கை கொடுத்தவுடனே எழுத்தாளர்கள் தெரிச்சு ஓடினாங்கன்னு எனக்கு தான் தெரியும்...

எல்லே ராம்: அதியமான்...ப்ளீஸ்...கொஞ்சம் விளங்குற மாதிரி சொல்லுங்களேன்...

அதியமான் : நான் டோண்டு சார் பின்னாடி நின்னுக்குவேன்...

ஐ யம் டோண்டு, ப்லாக்கர் அப்படீன்னு டோண்டு சார் அறிமுகப்படுத்திக்கிட்டிருக்கும்போது, டோண்டு அப்படீங்க வார்த்தையை சார் சொல்லுறதுக்கு முன்னாடி, நான் பின்னால இருந்து "போலி" அப்படீம்பேன்...

சோ...சார் அறிமுகப்படுத்திக்கறதே, ஐ.யம்.போலி.டோண்டு அப்படீன்னு ஒலிக்கும்...அதான் எழுத்தாளர்களின் அதிர்ச்சி ரகசியம்...

உண்மைத்தமிழன்: அடப்பாவிங்களா ?

எல்லே ராம்: குப்பையான அறிமுகம்...என்னத்த சொல்ல...இந்த கொடுமையை எல்லாம் கேட்க நான் அமெரிக்காவிலிருந்து வரவேண்டியதா இருக்கு...

<<<< அதியமானின் தொலைபேசி அழைக்கிறது...>>>

ஹல்லோ, நான் உண்மைத்தமிழன் பேசுறேன், ஐ யம் சாரி, என்னால வரமுடியல...

அலறுகிறார் அதியமான்...(சத்தமாக) அப்போ இவ்ளோ நேரம் உண்மைத்தமிழன் என்கிற பெயரில் பேசிக்கிட்டிருக்கிறது யாரு ???

உண்மைத்தமிழன்: ஆக்சுவலி நான் அல்க்காட்டெல்லுல வொர்க் பண்றேன்...பாலா நான் இல்லை...

சிவஞானம்ஜி: ஏய் என்ன நடக்குது இங்க ?

டோண்டு: எல்லாரும் ஒரு நிமிடம் நான் சொல்லுறதை கேளுங்க...இந்த மீட்டிங்......இந்த அளவில்.........நிறைவு பெற்றது.......வாங்க எல்லோரும் ரத்னா கபேக்கு போலாம்...

இந்த முறை வழமையான முறை இல்லாமல், புதுமையாக வெங்காய போண்டாவுக்கு பதில் காலி பிளவர் போண்டா சாப்பிடலாம்...(இதுல என்ன புதுமை - எல்லே ராம் கமெண்ட்)..அதே டட்ச் ட்ரீட்....

மகர நெடுங்குழைகாதன் அருளால் போண்டா அருமையாக இருக்கும்...வாங்க போலாம்...என்று திரும்பி பார்க்கிறார்...

அதியமானை தவிர யாரையும் காணவில்லை...!!!!!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....