Sunday, October 07, 2007

ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இயக்கம் ( ஆமாம் பெரிய 'சே' 'குவாரா' இயக்கம்) என்று அர்ச்சிக்கும் புண்ணூட்டங்கள் நின்றுபோன நிலையில் புதியதொரு பிரச்சினையை வலையுலகம் இப்போது சந்திக்கிறது...

அதற்கு யார் காரணம் என்று ஆதியையும் அந்தத்தையும் தேடிச்செல்லுமுன் அது 'இன்னா' அப்படீன்னு உங்களுக்கு சொல்றேன்..

வசதியான பதிவுகளில் ( அதர் / அனானி ஆப்சன் திறக்கப்பட்ட நிலையில் உள்ள பதிவுகளில்), எந்த பின்னிஊட்டம் போட்டாலும் பப்ளிஷ் செய்து தொலைக்கும் கொலைவெறி வலைஞர்கள் பதிவுகளில், முகம் சுளிக்கும்படியான ஆபாச அர்ச்சனை பின்னூட்டங்களும், தனிமனித தாக்குதல் பின்னூட்டங்களும் சற்று 'தாராளமாக' நாற்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், இணையத்தில் எப்போதும் 'உக்காந்தான்' களால் போடப்படுகிறது...

கும்மிப்பதிவர்களும், பின்னூட்டம் வருகிறதே என்ற காரணத்தால் - அதன் உள் மூலம் / வெளி மூலம் அறியாமல், பத்தோடு பதினொன்றாக அதையும் ரிலீஸ் செய்து தொலைத்துவிடுகிறார்கள்...

வரவணையான் 'பிடல் காஸ்ட்ரோ' பற்றி பதிவிட்டபோது, அதில் " இமெல்டா மார்க்கோஸ்" என்ற பின்னூட்டத்தை படித்து சுவற்றில் முட்டி சிரித்தேன்...ஆனால் அதில் மேலும் சில பின்னூட்டங்கள் பதிவை அசிங்கப்படுத்தும் நோக்கோடும், பதிவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் போடப்பட்டு அவை வெளியிடப்பட்டுமுள்ளன...

மட்டமான கருத்துக்களை வலையெங்கும் தெளித்துக்கொண்டிருந்த 'பாலா' என்பவரை, போலி பாலா, ISO 9002 பாலா என்று ஓட்டித்தள்ளி, இப்போது தன்னுடைய அரைவேக்காட்டுத்தனங்களை சில பதிவுகளில் வைப்பதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார் அவர்...

இந்த வகையில், லக்கிலூக்கின் " கலைஞர் கட்டையில போகட்டும்" பதிவிலும் அநாகரீக பின்னூட்டம் பத்தோடு பதினொன்றாக வெளிக்கிட்டு நிற்கிறது...

தமிழச்சி பதிவு, இந்த அனானி அசிங்கங்களுக்கு சரியான களம்.."பெங்களூர் அருண் ஒரு பேமானி" என்று புண்ணூட்டமிட்டுவிட்டு சென்றால், தமிழச்சி அதை வெளியிட்டு, "பெங்களூர் அருண் யாருன்னு தெரியாதுங்க அனானி" என்று வெள்ளந்தியாக பதிலிறுப்பார்...

அதே போல் லக்கிலூக் பதிவொன்றில் (தானே கேள்வி / தானே பதில்), "உண்மைத்தமிழன் ஒரு மொள்ள மாறி" என்ற பின்னூட்டம் உண்மைத்தமிழனை காயப்படுத்தியிருக்கிறது...அதை விசாரித்து தெரிந்துகொண்டேன்...லக்கியும் அதனை நீக்க மறுத்து விட்டார்...அதனால் அதே அனானியை, "அப்போ நீ ஒரு தெள்ளவாறி" என்று நான் ஒரு லெக்ஸைட் ஸிக்ஸ் அடித்துவிட்டு வரவேண்டியதாயிற்று...

இதே போல் தமிழ்பித்தன் பதிவு கொச்சையாக்கப்பட்டு, அதில் என்னுடைய குடும்பம் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருந்தது...ஆனாலும் முழு/முக்கா/அரைகிறுக்கன் தமிழ்பித்தன், அதனை வெளியிட்டதோடல்லாமல், அதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்றும் தமிழ் கம்பூட்டர் துறையை ஆன்லைனில் மி(மு)ன்னேன்ற நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கிறார்...ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவனாயிருந்தால் சம்பந்தப்பட்ட என்னிடம் மன்னிப்போ, உடனடி பின்னூட்ட நீக்கமோ செய்திருப்பான்...இவன் எழுதி தமிழ் கணினி உலகம் தலைகீழ மாறப்போகுதா என்ன ?

வளர்மதி பதிவொன்றில் (ஜாதிப்புத்தி) அதை நான் தட்டிக்கேட்கப்போக, அடுத்ததாக என்னுடைய குடும்பத்தை இழிவாக்கி ஒரு புண்ணூட்டம்...அதையும் வெளியிட்டு தன் சிறு / குறு / மினிமல் / இலக்கிய அறிவை பட்டைதீட்டி சொறிந்துகொண்டார் வளர்மதி...

பெயரிலி அவர்களை பற்றியும் சில புண்ணூட்டங்களை ஆங்காங்கே பார்க்க நேரிட்டது...

டோண்டு இரண்டு வருடம் முன்னால் சொல்லிய கருத்துக்கள் தவறு என்று முந்தாநாள் பதிவுலகில் சேர்ந்த "பதிவன்" என்ற பதிவர் சொல்கிறார்..இவர் ரொம்ம்ம்ப புதிய பதிவர் தான் போலிருக்கு...

சுற்றி வளைத்துச்சொன்னால் இந்த புண்ணூட்டங்கள் டார்கெட் செய்வது ஒரு சிலரைத்தான்...

ஓசை செல்லா
குழலி
செந்தழல் ரவி
உண்மைத்தமிழன்
டோண்டு ராகவன்
பெயரிலி
தமிழச்சி
சில அமெரிக்க வாழ் பதிவர்கள்

இப்போ புரிஞ்சு போயிருக்குமே ? ஆனாலும் இது மட்டும் இந்த பதிவுக்கு காரணம் அல்ல...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டம் உங்கள் அனுமதியோடு வெளிக்கிடுகிறது...உங்கள் பதிவென்பது உங்கள் வீடு...அதில் மாற்றான் வந்து 'பிஸ்' அடிக்கவோ, 'பான்பராக்' எச்சில் துப்பவோ அனுமதிக்காதீர்...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி...

இணையம் கட்டற்றது என்பது ஓசை செல்லா அடிக்கடி சொல்வது...ஏற்றுக்கொள்ளக்கூடியதே...ஆனால் மாலன் சொல்லிய ஒரு கருத்து இன்றும் மனதில் நிற்கிறது..."உங்கள் மொழியையே நல்ல வார்த்தை / கெட்ட வார்த்தை என்று ஒரு வரையறைக்குள் நின்று புழங்கும்போது, இணையத்தில் எழுதினாலும், டைரியில் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுதான் எழுதவேண்டும்" என்றார்...முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது...

இன்றைக்கு குட்டிப்பாப்பாக்களும் வலைப்பதியவும், தமிழ் இணையத்தை எட்டிப்பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் இந்த கசடுகளை அவர்களுக்காக நீங்கள் உங்கள் 'வீட்டில்' விட்டுவைத்திருக்கவேண்டுமா ?

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று அடுத்தவர் சொல்லியா தெரியவேண்டும் ?

கும்மிகள் ரசிக்கப்படக்கூடியவை...அவை தனிமனித தாக்குதலாகவும் ( முத்துலெட்சுமி அவர்களுக்கு அப்துல்கலாம் என்று பின்னூட்டம் போட்டு, மொகல் கார்டர் வந்து பார்வையிடவும் என்று அழைத்திருக்கிறேன்...அப்துல்கலாம் எங்க வந்து வலையுலகை பார்க்கப்போறார் என்ற போதிலும், அதில் ஆபாசம் இல்லாமல் காமெடிக்காக செய்தேன்...)

அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...

1 comment:

நாமக்கல் சிபி said...

//அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...//

Agreed!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....