Thursday, September 06, 2007

நோ கமெண்ட்ஸ் ஒன்லி போட்டோஸ்...

போலியை அம்பலப்படுத்தியது சரி, சம்பந்தம் இல்லாமல் அவனது மனைவி படத்தினை போட்டது தவறு என்று சொல்லியிருந்தார்....மூர்த்தியின் ஆப்பு பதிவில் ஒரு மூத்த வலைப்பதிவரின் மனைவி மகள் படம் போட்டபோது எங்கே போயிருந்தார் பெயரிலி அண்ணை...அவர் ஆப்பு பதிவில் பின்னூட்டி அதை தூக்க செய்தாரா ? அப்படியே சொன்னாலும் தான் சைக்கோபாட் மூர்த்தி அதை செய்யப்போகிறானா ?



இருந்தாலும் பெயரிலி மீது வைத்துள்ள மரியாதை காரணமாக (என்னதான் அவர் நான் ரசிக்கும் மாலனை கும்மினாலும்) அந்த படத்தை நீக்குவது என்று முடிவெடுத்துள்ளேன்...

ஆனால் பாருங்கோ, கை பரபரங்குதே...அதனால் அந்த படத்தில் ஒரு சிறு மாறுதல் செய்து இங்கே வெளியிட்டிருக்கிறேன்...

என்ஞாய் மாடி...!!! கம்ஸாமீதா...!!!!

3 comments:

-/பெயரிலி. said...

செந்தழல் ரவி
/மூர்த்தியின் ஆப்பு பதிவில் ஒரு மூத்த வலைப்பதிவரின் மனைவி மகள் படம் போட்டபோது எங்கே போயிருந்தார் பெயரிலி அண்ணை/

எங்கேயும் போகவில்லை. ஆனால், மூர்த்தியிடம் அதைக் கேட்க முடிந்து நீக்க முடிந்திருக்கமுடியுமானால், இங்கே இத்துணை தூரம் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்போமா? மூர்த்தியிடம் கேட்காத நான் உங்களிடம் கேட்பதற்கான ஒரே காரணம், மூர்த்திக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றதென்று நம்புவதாலேதான். [இன்னொரு "முன்னாள்" நண்பரின் படங்களுக்கு ஸ்பெசல் ஆப்பு பதிவு இணைப்பினைக் கொடுத்திருந்தபோது, இன்னொரு "முன்னாள்" அறிந்தவரூடாக, அப்படங்களை அந்நண்பர் தானேற்றியிருக்கும் இடத்திலிருந்து அகற்றுவதே சாத்தியம் என்று அறியத்தந்தேனேயொழிய, மூர்த்தியிடம் போய் விலக்கு என்று கேட்கவில்லை. இதை நான் சொல்லி, அந்த ஆள் கேட்கக்கூடியவென்றால், இப்படியான தொடர்க்காட்சித்தொ(ல்)லைக்காட்சிப்பதிவுகள் இத்தனை ஆண்டுகளாக எதுக்கு?]

ஆனால், மூர்த்தியின் மனைவிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அப்பெண் இச்சண்டைக்குள்ளே எங்கே வந்தார்? மூர்த்தி உங்களது, எனது, இன்னும் எத்தனையோ பேரது அம்மாக்கள், மனைவிகளை இழுத்து வசை பொழிகின்றதற்கு சம்பந்தமில்லாதவர்களை இழுப்பதற்காக இத்துணை ஆத்திரம் கொள்கிறோமே, எமக்கு இங்கே எங்கேயுமே வராத மூர்த்தியின் மனைவியின் படத்தைப் போட என்ன உரிமையிருக்கின்றது? முதலிலே ராபின்ஹூட்தான் இப்படத்தினை ஏற்றிவைத்திருந்தார். அவர் போட்டபோதும் இதே கருத்துத்தான் எனக்கு. ஒருவரின் முகப்படம் மட்டுமேயிருந்தால், என்ன விளையாட்டினையும் போட்டோசொப் போன்றவற்றாலே வைத்துக்கொண்டு வேறு படங்களின் உதவியோடு காட்டமுடியுமென்று உங்களுக்கும் தெரியும். அப்படியான சூழ்நிலையிலே எப்பெண்ணாவது (ஆணாவது) தன் படத்தினை இணையத்திலே ஏற்றாத வரை, நமக்கு எடுத்து கண்டவிடமெல்லாம் ஒட்ட என்ன உரிமையிருக்கின்றது? இதுதான் என் கருத்து.


மீதிக்கு, மூர்த்தி, என்னோடு சம்பந்தப்பட்டுப் படமேதும் போடவில்லையேயொழிய, காலாகாலமாக, வேண்டிய அளவுக்கு அன்புமாரி பொழிந்து என் வீட்டிலே நாட்டிலே எல்லோரையும் தனிப்படவும் பகிரங்கமாகவும் விசாரித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்களென்று நம்புகிறேன். அட! நீங்கள் எனக்கு இரவுக்கழுகை எழுதித் தந்து, தொழில்வாய்ப்புப் போடும் வாய்ப்பினைப் பெற்றதாகத்தான் விழாது கரப்பு சொல்லியிருக்கின்றாரே? பார்க்கவில்லையா? இத்துணை புரிந்துணர்வு உள்ள நாமிருவது சண்டை போடலாமா? :-)

மாசிலா said...

பமீளா 'ஆண்டவர்'சன்னுக்கு மூளை ஜாஸ்தியாவே இருக்குபோல!
;-D

Anonymous said...

ithu epdi irukku ?

nalla illa.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....