Friday, August 31, 2007

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

ஊரே காறித்துப்பும் மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
என் தாயை அவமதித்த மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...
பலரை அநாகரீக வார்த்தைகளால் திட்டிய மூர்த்தி - கவிதாவுக்கு மட்டும் நல்லவன்...

அல்லக்கைகள் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்...

சில நாட்களுக்கு முன்னால் விடாது கருப்பு பதிவில் என்னுடைய குடும்பம் பற்றி அவமானகரமான பதிவுகள் மூர்த்தி எழுதியபோது மூர்த்தி பற்றி என்னுடைய பதிவை நீக்குமாறும் அதற்கு பிரதி உபகாரமாக மூர்த்தி அவனுடைய பதிவுகளை நீக்குவான் என்றும் மடல் எழுதி மூர்த்தி பற்றியதான என்னுடைய பதிவை நீக்கவைத்தவர் இந்த கவிதா...

"அடித்துக்கொண்டு சாகுங்கடா" என்று தலைப்பில் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு பதிவிட்டிருக்கும் கவிதாவின் வலைப்பூவில் தலைப்பு மட்டுமல்ல...எண்ணமும் தவறு..

என்னுடைய தாயை அவமானப்படுத்தி எழுதி இருக்கிறான் மூர்த்தி...அதை எதிர்த்து கேள்வி கேட்கும் நான் கெட்டவனா ? நான் நியாயத்துக்காக குரல் கொடுக்கக்கூடாதா ?

உள்ளத்தில் கசடில்லாவிட்டால் பதில்சொல்லட்டும் இந்த கவிதா..

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, August 30, 2007

அமீரக அல்லக்கை சொறிநாய் கதை கேளுங்க...



கதை கேளு கதை கேளு சொறிநாயி கதைகேளு
சொறியோடும் வெறியோடும் இருந்தாடும் கதைகேளு

சொறிநாய் ஒன்றி சொறிபுடிச்சு ஓடிப்போச்சு பாரு
வெறியும் சொறியும் சேர்ந்து முழுசா மாறிப்போச்சு பாரு

அல்லக்கைக்கு நொள்ளைக்கைக்கும் வித்தியாசம் பாரு
அவிச்ச முட்டை அழுகிய நாத்தம் ரொம்ப நாத்தம் பாரு

எனக்கு கவிதை எழுத வரலைங்க, உரையாடலுக்கே போறேன்...
எனக்கு தெரிஞ்ச இந்த அமீரக நாய்க்கு


எலும்புத்துண்டு : பார்ப்பன எதிர்ப்பு
என்னைக்காவது கிடைக்கும் கறிசோறு : பத்து ஹிட்டு
அடிக்கடி வர ஆப்பு : சோத்துக்கு
ஊருக்கெல்லாம் வேஷம் : ரொம்ப நல்லவன்.
உள்ளுக்குள்ளாற : சொறிநாய்


என்னைக்கூட நாயிங்க கடிச்சிருக்கு...ஆனா அது சொறிநாயின்னு தெரியாம அப்போ ஊசி போடாம இருந்துட்டேன்...புரையோடிப்போச்சு...நாயை போயி அல்லக்கைன்னு சொல்லலாமா ? அல்லக்கை என்னைக்கிருந்தாலும் அல்லக்கை தானே...ஆனா பாருங்க...ரெண்டு மூனு பேரு, நாயை நாயின்னு சொல்லாம அல்லக்கை அல்லக்கைன்றாங்க...

ஒரு போலிப்பதிவை மெயிண்டெயின் பன்றது கஷ்டம் தான்...அதனால அமீரகத்துக்கு அவுட்சோர்ஸிங் முறையில ங்கோத்தா ங்கொம்மான்னு திட்டுறதுக்கு கொடுத்தானாம் ஒரு மலேசிய மூதி...அதுக்கு எலும்புத்துண்டா ரெண்டு பார்ப்பணீய எதிர்ப்பு போலிப்பதிவு போட்டானாம்...

எல்லாம் அப்படியே காத்துல வரது தான்...எனக்கு ஒன்னும் தெரியாது...நான் வர்ட்ட்டா....!!!!



நோண்டுவிடம் ரயில் பேட்டி


பட்டையை கிளப்பிய குழலி பதிவு

Wednesday, August 29, 2007

போலி டோண்டு = மலேசியா மூர்த்தி

போலிப்பதிவர் மலேசியா மூர்த்தியா ? ஆதாரம் இருக்கிறதா என்று சில வெண்ணைகள் என்னிடம் பலமுறை வினவியிருக்கின்றன...மலேசியா மூர்த்தி தங்கமானவன், சொங்கமானவன் என்று சில நாதாரிகள் என்னிடம் சத்தியம் செய்திருக்கின்றன...



இணையத்தில் இனிமையாக பொழுதைக்கழிக்கவரும் நன்பர்களை ங்கோத்தா என்று ஆரம்பித்து குச்சிக்காரி மகனே என்று விளித்து ஆபாச மடல் எழுதும் இந்த நாயை நினைத்தாலே பற்றிக்கொண்டு எரியும் எனக்கு...

ஒருமுறை டோண்டு மொக்கையாக எழுதிய ஒரு பதிவில் நான் மொக்கையாக ஒரு பின்னூட்டம் போட்டுவைக்க, இந்த நாதாரியிடம் இருந்து மடல் வந்தது..

"டோண்டு பதிவில் பின்னூட்டம் போடவேண்டாம்..பிறகு எங்கள் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்" என்று...

இந்த நாய் எதுக்குடா எனக்கு சொல்லுது...எந்த பதிவுல பின்னூட்டம் போடலாம், எதுல பின்னூட்டம் போடக்கூடாது என்று எனக்கு தெரியும்....இவன் சொல்லி நான் ஏன் கேட்கனும் என்று பிறக்கும்போது கூடவே வந்த திமிர் காரணமாக மேலும் ஒரு டோண்டு பதிவுக்க்கு, நான் விரும்பவில்லை என்றால் கூட - பின்னூட்டம் போட்டேன்...

வந்ததே வினை....ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தும், என்னுடைய பிறவியை கேள்வி கேட்டும் இந்த நாதாரியிடம் இருந்து பின்னூட்டம் வந்தது...

வந்ததே கோபம்....முழுமையாக டோண்டுவின் எல்லா பதிவுகளையும் படித்து பார்த்ததில் ( அதைவிட கொடுமை என்ன போங்க) மலேசியாவில் இருந்து இந்த ஆபாச பின்னூட்டம் எனக்கு போட்டது இந்த மூர்த்தி என்ற நாதாரிதான் என்று தெரிந்தது...

இந்த நாய்க்கு கொள்கை கோட்பாடு என்று எந்த கருமாந்திரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...ஆண் / பெண் பேதம் இல்லாமல் டோண்டு என்ற வயசாளிக்கு பின்னூட்டம் என்ற பெயரில் எதையாவது போடுபவரை ஆபாசமாக திட்டி மடல் அனுப்புவதும், அவர்களை அநாகரீகமாக தன்னுடைய போலி டோண்டு பதிவில் எழுதுவதுமாக இந்த நாய் முழுமையான சைக்கோவாக மாறிவிட்டது தெரிந்தது...



பார்ப்பணீய எதிர்ப்பு, அய்யா பெரியாரின் கொளுகை என்று விடாது கருப்பு என்ற சொறிநாய்த்தனமான ஒரு தளத்தில் சொறிந்துகொண்டு உட்கார்ந்திருப்பதும் தெரிந்தது.....பலருக்கு சொல்லியும் புரியவில்லை...வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இந்த நாதாரியை அட்லாஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தபோது தன்னுடைய முதலிரவு கதை என்று தன்னுடைய வழக்கமான காமக்கதை பாணியில் எதோ எழுதியது.....கேப்பங்கஞ்சி வித் கவிதாவில் தன்னுடைய புளுகு மூட்டைகளை அவித்துவிட்டது...ஆக இரட்டைவாழ்க்கையை முழுமையாக வாழத்துவங்கி, தன்னை ஒரு சைக்கோவாக முழுமையாக காட்டிக்கொண்டது...

சாதியை தான் எதிர்ப்பதாக சொல்லி, தமிழ்மணம் கண்ட காசியை "தலித்" என்று திட்டியதாகட்டும், குழலியை "வன்னியர்" என்று சொல்லி தன்னுடைய தீண்டாமை புத்தியை காட்டியதாகட்டும், டோண்டுவிடம், தான் "பூனூல்" போடும் ஒரு "ஆசாரி" என்று தன் ஆச்சாரத்தை காட்டியதாகட்டும் இந்த நாதாரிக்கு சாதியை ஒழிக்கவேண்டும் அல்லது பார்ப்பணீயத்தை எதிர்க்கவேண்டும் என்று இம்மியளவு கூட இஷ்டம் கிடையாது...

வெறுமனே டோண்டு எதிர்ப்பு...அதற்கு பார்ப்பணீய எதிர்ப்பு என்ற வேலி...இந்த நாதாரிக்கு பார்ப்பணருக்கும் பார்ப்பணீயத்துக்கும் வித்தியாசம் தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது என்பது தான் என்னுடைய பதில்....

கிட்டத்தட்ட இரண்டு வருடகாலமாக பலருக்கு ஆபாச பின்னூட்டம் அனுப்பியும் போலிப்பதிவு தயாரித்தும் மன உளைச்சலை தரும் இந்த நாய்க்கு தமிழ்மணத்தில் மட்டும் மொத்தம் இருபத்தைந்து பதிவுகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...

விடாதுகருப்பு, சட்னிவடை, சதுர்வேதி, ஆதிசேஷன் என்று பல வலைப்பூக்களை உருவாக்கி, தினமும் தமிழ்மணத்தை சொறியவில்லை என்றால் இவனுக்கு தூக்கம் வருவதில்லை...

இவனை கண்டறிய கொஞ்சம் கொஞ்சமாக இவனுடன் பழகி கூட பார்த்தாகிவிட்டது...சொறிநாயிலும் கேடுகெட்ட சொறிநாய் இது.....தொலைபேசியில் அழைத்தால் பி.பி வந்தவன் போல் பேசுகிறான்...இவனுக்கு ஆதரவு கொடுத்த எல்லோர் தோலையும் இந்த பதிவிலேயே உரிக்க ஆசைதான்...இப்போதைக்கு அந்த விடயத்தை விட்டுவைப்போம்...

எல்லோருடைய குடும்பத்தையும் அசிங்க வார்த்தையில் திட்டும் இவன் குடும்பத்தை அதே போல் யாராவது திட்டினால் இவன் எப்படி எரிமலையாவான் தெரியுமா ? நான் திட்டிப்பார்த்திருக்கிறேன்...அப்படியே உடம்பெல்லாம் பத்தி எரியுது இவனுக்கு...அதே போல் தானே அடுத்தவனுக்கும் இருக்கும்...



போலித்தனத்தை விட, பேடித்தனம் இவன் உடன் பிறந்த சொத்து...தன்னை எதிர்ப்பவர்களுக்கு போலிப்பதிவு ஆரம்பித்து, அவர்கள் பெயரில் ப்ரொபைல் ஆரம்பித்து அசிங்க பின்னூட்டம் இடுவது, அனானிமஸாக அவர்களை அசிங்க வார்த்தைகளில் திட்டி பலருக்கு பின்னூடடம் இடுவது என்று கொஞ்சம் கூட தில் இல்லாத பயந்தாங்கொள்ளி செய்யும் அத்தனை வேலைகளையும் செய்வான்...

முத்தமிழ் மன்றம் என்ற பெயரில் நடத்தும் தளத்தில் பதிவு செய்ய நைஸாக இன்வைட் அனுப்புவது...அதில் பதிவு செய்பவர்கள் யுனீக் பாஸ்வேர்ட் வைத்திருந்தால் அவர்களின் மின்னஞ்சலுக்குள் நுழைந்து தேவையான விவரங்கள் ( போட்டோக்கள், கிரெடிட் கார்டு விவரங்கள்) என்று அனைத்தையும் கபளீகரம் செய்து தன்னுடைய சொந்த பெனிபிட்டுக்காக பயன்படுத்தும் இந்த நாதாரியின் முத்தமிழ் மன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேறவேண்டும்...

தான் இணைய பிதா என்றும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என்றும் தொலைபேசியின் என்னிடம் இவன் சொன்னபோது, என்னையறியாமல் சிரிப்பு வந்தது...அட நாதாரியே, இப்படி சொன்னவன் எல்லாம் எப்படி செத்து சுண்ணாம்பா போனானுங்க என்று எனக்கு தெரியுமேடா...

தொலைபேசியில் அழைத்து மிரட்ட வேண்டியது...இணையம் மூலமாக வரும் தொலைபேசி அழைப்பில் நம்பர் வராது இல்லையா...அந்த வெட்டி தைரியம் தான்...ஏன் உன்னுடைய மொபைல் நம்பரை தில்' லாக வெளியிடும் தைரியம் உனக்கு இருந்ததா ?



இப்போது நான் வெளியிடுகிறேன்...இது தான் மலேசியா மூர்த்தியின் எண்..

60167606592

தான் பெரிய பருப்பு என்றும் தான் தன்னுடைய மொபைல் எண்ணை மாற்றப்போவதே இல்லை என்றும் கூறிய பருப்பே...இப்போது உன்னால் பாதிக்கப்பட்டவர்கள் உன்னை செருப்பால் அடிக்க அழைக்கும்போது என்ன செய்யபோகிறாய் ? வழக்கப்போல பொண்டாட்டிக்கு பயந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்போகிறாய்..இல்லையா...

பக்கம் பக்கமாக தன்னுடைய சித்தாந்தம், சாதி எதிர்ப்பு பற்றி இவன் விளக்கம் கொடுக்கும்போது என்னையறியாமல் சிரித்துக்கொள்வேன்...இது செய்வதெல்லாம் போக்கிரித்தனமும், பேடித்தனமும்...இந்த நாதாரி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் கொடுக்குது பாரு என்று...

கைக்காசை போட்டு திரட்டி நடத்துபவர்கள் இவனிடம் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டுமாம்...இவன் கேட்டால் ஐ.பி போன்ற தகவல்களை தரவேண்டுமாம்...பெரிய பருப்பு இவரு...இவர் கேட்டா அப்படியே கொடுத்துடனும்...

இந்த கசடை ஒழிக்க முதல் வழி, இந்த கசடுக்கு ஆதரவளிக்கும் நன்பர்களுக்கு முதலில் அர்ச்சனையை ஆரம்பிக்க வேண்டும்...அவன் உள்ளே போகும்போது கூட போயி அண்டர்வேரோட உக்காந்திருக்கனுமா நன்பர்களே ? யோசியுங்க...முதல் தகவல் அறிக்கை விரைவில் தாக்கல் ஆகும் என்று தெரிகிறது...அப்போது அவனுடைய பாஸ்போட் முடக்கப்படும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன...மலேசிய அமைச்சர் ஒருவரின் உதவியும் நாடப்பட்டுள்ளதாம்...

தமிழ் இணையத்தில் இவன் ஒரு கசடு....வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இணைய ஊடகம் தழைத்து ஓங்க வேண்டும் என்றால் இந்த களை பிடுங்கப்படவேண்டும்...வேரோடு...வேரடி மண்ணோடு...இவனுடைய குடும்பம், குழந்தை, குட்டி என்று பரிதாபம் பார்த்தால் வேலைக்காவாது....பெண்களை வன்புணர்பவனுக்கும், கூலிக்கு கொலைசெய்யும் கொலைகாரனுக்கு கூடத்தான் குழந்தை குட்டி இருக்கிறது...அதனால் அவனை முதுகில் தட்டிக்கொடுத்து "போடா ராசா" என்றா சொல்கிறோம்...முள்ளை உடைத்து தூக்கு தண்டனைதானே தருகிறோம்...

ஆப்பு'ரேசன் ஆரம்பம்....!!!!!

Friday, August 24, 2007

லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து



இன்று பிறந்தநாள் காணும் லக்கிலுக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

செந்தழல் ரவி

Padam Help: Balabarathi

Thursday, August 23, 2007

பழனி பஞ்சாமிர்தம், சாய்பாபா, காவி, முதல் வரி

நேத்து நைட்டு பக்கத்துவீட்டு அங்கிள் பழனி பஞ்சாமிர்தம் கொஞ்சம் தந்தார்...அதை வாங்கி சாப்பிடும்போது கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது...எதும் புட் பாய்ஸன் ஆகுமோன்னு கூட ஒரு பயம்...இருந்தாலும் கொஞ்சமா சாப்பிட்டேன்...

காலையிலே எழுந்தவுடன் ஒரு மாதிரி தலை வின் வின் என்று வலித்தது...லைட்டாக தொட்டுப்பார்த்தவுடன் முடி கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தோன்றியது...

முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து பாத்ததில் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்...

ஆமாம்...கிட்டத்தட்ட சாய் பாபா ரேஞ்சுக்கு முடி வளவளவென்று வளர்ந்திருந்தது...

அய்யோடா இனிமேல் இந்த முடியை வாறி அலுவலகம் கிளம்புவதற்குள் செத்து சுண்ணாம்பாகிடனுமே என்று கிலி கிளம்பியது...

ஏன் இப்படி ஆனது என்று தலையை போட்டு உடைத்துக்கொண்டதில் பக்கத்துவீட்டு அங்கிள் கொடுத்த பஞ்சாமிர்தம் நியாபகம் வந்தது...

கொஞ்சூண்டு சாப்பிட்டதுக்கே இப்படியா என்று ஆச்சர்யமாக இருந்தது...

டி.எஸ்.என் டெலிஷாப்பிங் - முடியுதிர் தைலம் விற்பனை செய்பவர்ளோ அஸ்வினி அஸ்வினி அஸ்வினி என்று கூந்தல் தைலம் விற்பவர்களோ கேள்விப்பட்டால் டி.வி. விளம்பர மாடலாக வரச்சொல்வார்களே என்று பயப்பந்து நெஞ்சில் உருண்டது...

பக்கத்துவீட்டு ஆண்ட்டி வந்து ஏதோ பிரசாதம் என்று நெற்றியில் பொட்டெல்லாம் வைத்தார்கள்...அவர்கள் ஒயிட் பீல்டில் உறையும் சத்திய சாயி பாபா பக்தை...என்னை பார்த்தால் சாயிபாபா மாதிரியே இருப்பதாக வேறு சாமியாடினார்கள்...

எப்போதோ ஏலத்தில் எடுத்த சாயிபாபா நீள அங்கி (காவி நிறமானது) ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்துவிட்டு போனார்கள்...

இந்த அங்கியை போட்டுக்கொண்டு அலுவலகம் போனால் என்ன என்று ஒரு திடீர் ஆசை உதயமானது...



ச்சே...நம்ம ஆபீஸ் ட்ரெஸ் கோட் பார்மர் ட்ரெஸ் மற்றும் சூட் மற்றும் ஹூ வாச்சே...இதை போட்டுக்கொண்டு போனால் ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்டில் இருந்து கேள்வி வராதா என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்து நெஞ்சை குடைந்தது...

இப்போது முடி வளர்ந்ததை மட்டும் அவர்களால் கேள்வி கேட்க முடியுமா என்று நினைத்துபார்த்து லைட்டாக சிரித்துக்கொண்டேன்...

முடியை வெட்டிக்கோடா என்ற அம்மாவை முறைத்தேன்...நானே ரஜினிகாந்த் மாதிரி முடி கொட்டிக்கொண்டு இடது பக்கமும் வலது பக்கமும் ஏறு நெற்றியாகிக்கொண்டே இருக்கிறதே என்ற மனக்கவலையில் தான் ஆறு மாதமாக இருந்தேன் என்பதை எப்படி வெளிப்படையாக சொல்லமுடியும்...

டி.வியில் காதலன் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது...கெடச்சத வெச்சுக்கோட அவ்வளவு தான்...முடியும் பார் முடியும் பார்.....பேட்டா ராப்...

படபடவென சாயிபாபா அங்கியை அணிந்தேன்...அட நான் கூட சாமியார் மாதிரி இருக்கேன்ப்பா..!!!!

அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது யாருமே ஒரு வித்யாசமாக பார்க்கவில்லை...அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..



நானும் என்னுடைய இடத்துக்கு வந்தேன்...மடிக்கணிணியை திறந்தேன்...இ-கலப்பையை திறந்தேன்...ஒரு நோட் பேட் ஓப்பன் செய்து டைப் செய்ய ஆரம்பித்தேன்...மீதியை முதல் வரியில் இருந்து படித்துக்கொள்ளுங்கள்...

தேசிகன்: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும் தேசிகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

செந்தழல் ரவி

http://www.employees.org/~desikan/




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, August 22, 2007

நான் மிக இனிப்பானவன்.....

தேசிகன் அவர்கள் அவருடைய சர்க்கரை அனுபவத்தை சுவையாக எழுதி இருக்கார்...நான் என்னுயை சர்க்கரை கதையை அங்கே பின்னூட்டமா போட்டபோது ரொம்ப பெரிசாகிட்டது...அதான் அப்படியே ஒரு பதிவு...முதல்முதலாக எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப்பட்டது ஜே ஜில் க்ரைஸ்ட் கண்டுபிடிப்பை போல எனக்கும் ஆச்சர்யமான ஒன்றுதான்...

ஸாஸ்கன் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது ப்ராஜக்ட் முடிந்து சப்போட் செய்துகொண்டிருந்தேன்...க்ளையண்ட் வந்தால் தான் வேலை...க்ளையண்ட் வருவது மாலை ஆறு மணிக்கு மேல் தான்...அதனால் மதியம் நல்ல சாப்பாட்டுடன், அங்கேயே இருந்த ரெஸ்ட் ரூம்களில் ஒன்றை தேர்ந்தெடுந்து குறட்டைவிடாமல் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தேன்...

ரெஸ்ட் ரூமை ஒட்டியபடி சின்ன நர்ஸிங் ஹோமை, எம்ளாயீஸ்க்கு என்று வைத்து இயக்கிக்கொண்டிருந்தார்கள்...அங்கே இருந்த நர்ஸ் ஒரு சேச்சி...என்னுடைய உடல் நலனில் அக்கறை...ஏசியிலும் சில சமயம் எனக்கு வியர்த்து தொலைவதை பார்த்து, சிக்கென இருந்த ஒரு எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்கல் சர்க்கரை வியாதி டெஸ்ட்டரை வைத்து என் இடது கையில் சிறிய ஓட்டையை போட்டு ரத்தத்தை உறிஞ்சி...

அடுத்த முப்பதாவது வினாடி அய்யோ என்ன உங்களுக்கு சுகர் 380 இருக்கு, எண்ட குருவாயூரப்பா என்று மெர்சலானார்...

அங்கேயே திங்கள் கிழமைகளில் விசிட் அடிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர், இந்த புடி செமி டயனில், உணவுக்கு அரைமணி நேரம் முன்னாடி தின்று தொலை என்று பாசத்துடன் திட்டி கொடுத்தார்...

ஒரு வாரம் தினமும் சாப்பிட்டேன்...பிறகு க்ளையண்ட் பகல்நேரங்களிலேயே வர ஆரம்பித்ததால் உறங்க போவதை நிறுத்தினேன்...

அப்புறம் அவுஸ்திரேலியா சிங்கை என்று எங்கெங்கோ சுற்றினாலும் டயபட்டீஸ் பற்றி எந்த ப்ரக்ஜையும் இல்லாமல் திரிந்திருந்தேன்...ஒருமுறை இணையத்தில் (ப்லாக் உலகம் எனக்கு செய்த இன்னொரு நன்மை இது) டயபட்டீஸ் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்தபோதே கிறு கிறு என்று வந்தது...

உடனடியாக காலை வெறும் வயிற்றில் சோதித்தபோது 212 என்று இருந்தது...டெஸ்ட் எடுத்தவரே "என்ன சார் இவ்ளோ இருக்கு" என்று கிலியை கிளப்ப...

டாக்டரை கன்ஸல்ட் செய்தேன்..உங்களுக்கு வந்திருக்கறது டைப் 1 - ப்ளட் சுகர், இந்தாங்க டயனில், இதை சாப்பிடுங்க, ஒரு மாதம் கழித்து வாங்க என்றார்...(திரும்ப போகவே இல்லை)

டி.வி. விளம்பரம் பார்த்து அக்யூ செக் என்ற கருவி வாங்கினேன்...அதில் பார்த்தபோதும் டயபட்டீஸ் கன்னாபின்னாவென்றே இருந்தது...

என்னைப்போலவே 29 வயதில் டயபட்டீஸ் வந்த சென்னை நன்பனை தொடர்புகொண்டேன்..அவன் சொன்ன மாத்திரை க்ளுக்கோரெட் போர்ட்டே...அதைத்தான் இன்றுவரை சாப்பிட்டு வருகிறேன்...

டயபட்டீஸ் குறைஞ்சிட்டதும் / அதிகமாயிட்டதும் தன்னாலேயே தெரிஞ்சுடும் எனக்கு...லைட்டாக கை வெலவெலப்பு (கொறைஞ்சுபோச்சு...சாப்பாட்டை வெட்டு), வாய் காய்ந்துபோய், லைட்டாக முதுகு வலி...அதிகமாயிட்டது...க்ளுக்கோரெட் போடு...

இப்படி மானேஜ் செய்துவருகிறேன்....

லைட்டாக யோகா ஒரு மூன்று மாதம் முயன்றேன்...ஒன்னும் வேலைக்காவல...வாக்கிங் போனால் டயபட்டீஸ் கண்டிப்பாக குறைகிறது...நேரமின்னையால் கண்டிநியூ செய்ய முடியல...

ரீசண்டாக புகை பழக்கத்தை விட்டுவிட்டதும், ஆறுமாசத்துக்கு ஒரு முறை குடிப்பதை கூட சுத்தமாக நிறுத்தியதும் (அடத்தூ நீ எல்லாம் ஒரு குடிகாரன்னு வெளிய சொல்லிக்காத ரவி) , ஓட்ஸ் கஞ்சியை காலையில் குடிப்பதும் டயபட்டீஸ் என்னுடைய வாழ்க்கையில் கொண்டுவந்த மாற்றங்கள்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

தேவேகவுடா: கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா?

மைசூர் மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது, கர்நாடகாவாக மாற்றம் செய்யப்பட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்து மூன்றில்...அந்தப்பக்கம் கோவா, இந்தப்பக்கம் ஆந்திரா, இப்பிக்கா கேரளா, அப்டிக்கா தமிழ்நாடு, என்று நடுவாந்திரமாக உட்கார்ந்திருக்கும் இந்த மாநிலம் இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலம்...மக்கள் தொகையில (கொஞ்சம் கேப்) ஒன்பதாவது பெரிய மாநிலம்..அங் ( கேப்டன் விஜயகாந்த் பாணியில் படிக்கவும்)...

கர்நாடக அரசியலில் புயலாகட்டும், சின்ன காற்றாகட்டும் அது ஹெச்.டி.தேவகவுடாவை சுற்றித்தான் இருக்கும்...ஹரதனஹள்ளி தொட்டகவுடா தேவே கவுடா ( Haradanahalli Doddegowda Deve Gowda) ஒரு சிவில் எஞ்சினீயருங்க...தன்னோட இருவத்தெட்டாவது வயசுல 1962 ல ஹொலெநரசிபூர் தொகுதியில் சுயேச்சையா நின்னது ஆரம்பிச்ச இவரோட அரசியல் வாழ்க்கை, இன்னமும் கர்னாடகத்தை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்குன்னா பாருங்களேன்...



1953 ல ஸ்கூல் படிப்ப முடிக்கறப்பவே காங்கிரஸ்ல மெம்பராம் தேவேகவுடா...பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் காங்கிரஸ்ல பம்பரமா சுழன்று வேலைபார்த்தவர் 1962 வரைக்கும் ( அதாவது சட்டசபை தேர்தல்ல சீட் மறுக்கப்படும் வரைக்கும்) காங்கிரஸ்ல தான் இருந்தார்...எம்.எல்.ஏ ஆகுறத்துக்கு முன்னாடி, அஞ்ஞனய்யா கூட்டுறவு மையம் (சொசைட்டி), அதுக்கப்புறம் ஹொலெநரசிபூர் தாலுக்கா முன்றேன்ற மையத்துல எல்லாம் உறுப்பினரா இருந்து பதவிகளையும் ஒரு கை பார்த்திட்டு தான் இருந்திருக்கார்...

அதிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ தான்...ஏழாவது முறையும் எட்டாவது முறையும் பொதுநலம் மற்றும் நீர்வள மந்திரியாவும் பணியாற்றியிருக்கார்...(Minister of Public Works and Irrigation.)...விவசாய குடும்பத்திலிருந்து வந்தவருங்க இவரு...அதனால இந்த பதவி கொடுத்தாங்களோ என்னமோ...



ஆங்...சீன் போடுறதுல நம்ம தலைவரை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு இப்போ ஒரு பேச்சு இருக்கில்ல...ஆனா அதை நம்ம தலைவர் 1987 லே ஆரம்பிச்சுட்டார்...நீர்வளத்துறைக்கு சரியான நிதி ஒதுக்கலைன்னு மந்திரி சபையில் இருந்து விலகிட்டார்...அதனால பெருவாரியான மக்களின் பரபரப்பான ஆதரவை பெற்றார்...



இந்த பரபரப்பான ஆதரவுதான் 94- 96 ஆம் ஆண்டுகள்ல இவரை கருனாடக முதல்வர் பதவிக்கே கொண்டுபோய் உட்கார வைச்சதுங்க...அதுலயும் உச்சபட்சமா மைய அரசியலில் நடந்த குழப்பங்களால் நடந்த ஒரு அரசியல் சித்து விளையாட்டு, இவரை பிரதமாராகவே ( 1996 - 1997) உட்கார வைச்சுடுச்சு....

ஜனதாதளத்தை பிரிச்சு மதசார்பற்ற ஜனதா தளம்னு நடத்திக்கிட்டு வரும் தேவகவுடா, 1999 சட்டசபை எலக்ஷன்ல பாரதீய ஜனதா கட்சியை போல காங்கிரசிரம் மண்ணைத்தான் கவ்வினார்..ஆனால் 2004 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தல்களில் 57 சீட்டுகள் பெற்று பாரதீய ஜனதா ( 79) மற்றும் மண்ணை கவ்விய காங்கிரஸ் ( 64) ஆகியவற்றுடன் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிரூபித்தார்...



மதர்சார்பற்ற ஜனதா என்ற பெயரிலேயே அவர் எந்த ஓட்டுக்களை குறிவைக்கிறார் என்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரியும்...அதை கீழே உள்ள படம் மேலும் விளக்கும்...



மேலும் தேர்தல்களில் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கவுடர்களையும், ஒக்கலிகர்களையும், லிங்காயத்துக்களையும் அரவணைப்பது, மேலும் செல்வாக்குள்ள ராஜ்குமார் ரசிகர்களை அவ்வப்போது தட்டிக்கொடுப்பது, (ராஜ்குமார் இருந்தவரை அவரை சந்திப்பது, அவர் மரணத்துக்கு பிறகு அவ்வப்போது அவரது மனைவி பர்வதம்மாளையும் மகன்களையும் சந்தித்து, தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வது), மேலும் அவர்களது குடும்ப வியாபாரங்களுக்கு எந்தவித இடையூறும் வராது காத்து அரண் அமைத்து நிற்பது என்று தாஜா செய்து வைத்துள்ளார்...



மேலும் காவேரிப்பிரச்சினையில் இவர் எடுத்திருக்கும் நிலை, யாராலும் புரிந்துகொள்ள இயலாதது...மைசூர், மாண்டியா மாவட்டங்களில் கடுமையான ஆதரவு நிலை...தமிழ்நாட்டுக்கு சொட்டு தண்ணி தரமாட்டேன் என்று பேசுவார்...பெங்களூரில் மாடரேட்டாக ஏதாவது சொல்லிவைப்பார்...அடுத்தால் கிளம்பி காரைக்கால் சனீசுவர பகவானிடம் பூஜை செய்ய கிளம்பி நிற்பார்...எனக்கென்னவே தேவேகவுடா கர்நாடக அரசியலில் இருக்கும் வரை இந்த பிரச்சினையை நீறு பூத்த நெருப்பாகத்தான் வைத்திருப்பார் என்று தோன்றுகிறது...




பெங்களூரில் வசிக்கும் இவரது குடும்பம் பற்றி சொல்லவேண்டும் என்றால் மனைவி சென்னம்மாள்...மீடியா வெளிச்சத்தில் விழுந்ததேயில்லை என்று சொல்லவேண்டும்...நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்...இளைய மகன் ஹெச்.டி.குமாரசாமி ( இளைஞர் பட்டாளத்துக்கு செல்லமாக குமார் அண்ணா ) , கருனாடக முதல்வராக தேவே.கவுடாவின் சிறிய நாடகம் மற்றும் குட்டி கலாட்டாவினால் அமர்த்தப்பட்டார்....ஊரில் (ஹொலெனரசிபுரத்தில்) சினிமா தியேட்டர் நடத்திக்கொண்டு, சினிமாத்துறையில் திரைப்பட வினியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த குமாரசாமி இன்றைய கருனாடக முதல்வர் என்றால் அதுதான் தேவேகவுடாவின் ராஜதந்திரம்...

மூத்த மகன் ஹெச்.டி.ரேவண்ணா அரசில் அமைச்சராக பணியமர்த்தப்பட்டுள்ளார்...சுத்திரதாரி யார் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா ? ஹெச்.டி.தேவகவுடாதான்...இதுபற்றி கொஞ்சம் பார்ப்போம்..

2004 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் போனது...மதசார்பற்ற முகமூடி போட்டிருந்த தேவேகவுடா, தனிப்பெரும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா (79) உடன் கூட்டணி வைக்க இயலாது என்று எண்ணினார்...அதனால் காங்கிரசுக்கு (64) வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார் கவுடா...தரம்சிங் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்...

பத்தொன்பது மாதம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தரம்சிங்கை கவிழ்க்க தேவகவுடா கையாண்ட உத்தி - அரசியல் வாழ்வில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை கூட வாயை பிளக்கை வைத்தது....ஆம்..மகன் குமாரசாமியை தூண்டி நாற்பது எம்.எல்.ஏக்களை ஆதரவை விலக்க வைத்தார்...மீதம் உள்ள எம்.எல்.ஏக்களை (கட்சி கூட்டத்தை) கூட்டி, குமாரசாமியையும், நாற்பது எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்...ஆனால் உள்ளடி வேலையாக, பாரதீய ஜனதாவுடன் பேச்சு நடத்தி, கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை பங்கிட்டுக்கொள்வதாக பேரம் பேசி, தனது மகன் குமாரசாமியை முதல்வராகவும் - பாரதீய ஜனதாவை சேர்ந்த எடியூரப்பாவை துணை முதல்வராகவும் ஜனவரி 2006 ஆம் ஆண்டில் உட்காரவைத்து, தனக்கு எதுவுமே தெரியாது என்ற குட்டிப்பாப்பா முகபாவனையை வைத்துக்கொண்டு அவர் ஊடகங்களில் நடத்திய நாடகத்தை பார்த்த சில காங்கிரஸ் பெருசுகளுக்கு ஹார்ட் தனது ஆட்டையை நிறுத்திக்கொண்டது என்றால் பாருங்களேன்...!!!!

ஆனால் குமாரசாமி ஆட்சியில் நல்ல வீரிய காட்டினார் என்றுதான் சொல்லவேண்டும்...டொம்ளூர் சுற்றுப்பாலம், மடிவாளா முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான எலவேட்டட் ப்ரிட்ஜ் ப்ராஜட் ஆரம்பம், மெட்ரோ ரயில் ப்ராஜக்ட் துவக்கம், தேவனஹள்ளி இண்டர்நேஷனல் ஏர்ப்போட்டுக்கான பணிகள், பதவி பறிபோகும் செண்டிமெண்ட் காரணமாக எந்த முதல்வரும் போகாத சாம்ராஜ்புரா போனது, ஜனதா தரிசனம் என்ற வகையில் பொதுமக்களை நேரடியாக ஒவ்வொரு நாளும் சந்தித்தது, க்ல் குவாரி பிரச்சினையில் எழுந்த லஞ்சப்புகாரை ஊதி தள்ளியது என்று அதிரடியாகத்தான் ஆட்சி செய்துவருகிறார்...

ஆயிற்று...குமாரசாமியின் இருபது மாத டர்ன் ஓவர்...அடுத்த மாதம் ஆட்சியை பாரதீய ஜனதாவிடம் ஒப்படைக்கவேண்டும்...ஆனால் மந்திரி சபையில் இருக்கும் தேவேகவுடாவின் ரகசிய அல்லக்கைகள் ஆட்சியை ஒப்படைக்க மாட்டோம் என்று அங்கங்கே பேசி வருவது, எடியூரப்பாவுக்கு புளியை கரைக்கிறது...கடந்த சுகந்திர தினவிழாவில் அடுத்த வருடம் நான் தான் முதல்வராக கொடி ஏற்றுவேன் என்று அவர் திருவாய் மலர்ந்தது போதாதா தேவகவுடாவுக்கு...குமாரசாமியை விட்டு "எடியூரப்பா - இவ்வாறு பேசியது எனக்கு மனக்கசப்பை உருவாக்கியுள்ளது" என்று பேசவைத்துவிட்டார்...முன்னாள் முதல்வர் தரம்சிங்கை தூண்டிவிட்டு, ஜனதாதளத்துக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தர தயார் என்று பேசவைத்துவிட்டார்...நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து கை-குலுக்கி, ஒரு புதிய உறவுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் தயார் என்று கருனாடக மக்களுக்கு புரியவைத்து, எடியூரப்பாவின் முதல்வர் கனவிலும் மண் அள்ளி போட்டுவிட அடிகோலுகிறார் என்று புரிகிறது...



தனது எண்ணங்களுக்கு எதிரானவர்களை ஆட்டதில் இருந்தே ஒழித்துக்கட்டும் ஹெச்.டி.தேவகவுடாவின் சூழ்ச்சிகளுக்கு ஏற்கனவே பலியானவர் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.க்ருஷ்னா...இன்றைக்கு சட்டீஸ்கர் மாநில கவர்னராக குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்...இப்போதைக்கு பாரதீய ஜனதாவின் எடியூரப்பா...பாவம்பா நீ...எடியூரப்பா...



இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறப்போகும் ஒரு சூப்பர் நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி மீண்டும் ஆட்சியில் அமரத்தான் போகிறார் என்று அடிமனது அரித்துக்கொண்டிருக்கிறது...அதற்கு தகுந்தார்ப்போல காய்கள் நகருவது கண்கூடாக தெரிகிறது...கருனாடக அரசியலை எழுதினால் தேவ.கவுடாவை மறப்பது மிகவும் கடினம் என்று எல்லாருக்கும் தெரியும்...ஆனால் அரசியல் சதுரங்கத்தில் இப்படிப்பட்ட காய்நகர்த்தல்களை அரசுவிழாவில் அரைத்தூக்கத்தில் இருந்த முன்னாள் பிரதமர் அடித்து தூள்கிளப்புவது....அடுத்த மாதம் வரை அரசியல் நோக்கர்களுக்கும், பத்திரிகை நன்பர்களுக்கும் கொண்டாட்டம் தான் போங்கள்.....

Monday, August 20, 2007

பெப்சி உமா, இத்தோட நிறுத்திக்க...!!!

வலைப்பதிவர்களை நக்கல்விட்டு பெப்சி உமா விடுத்த அறைகூவலை சின்னக்குட்டியரின் வலைப்பதிவில் பார்த்தேன்...

ஆனால் எனக்கு தெரிந்தவரைக்கும் இந்தம்மா தமிழ் வலைப்பதிவர்களை சொல்வதாக தெரியவில்லை என்றே தோன்றுகிறது...

ஆனந்த விகடனும், ஹிண்டு பேப்பரும் படித்து, ஷாம்பார் வடையும் சாப்பிடும் பெப்சி உமா, வலைப்பதிவு தமிழில் எழுதப்படுகிறது என்று அறிந்தால், அப்பாவித்தமிழன் ஆறு ஆண்டுகளாக அவரது லைனை ட்ரை செய்து, ஏழாவது ஆண்டில் லைன் கிடைத்தது, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு எனும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனை விட அதிக எக்ஸ்ப்ரஷனை கொடுப்பார் என்கிறேன் நான்...

" ஓஓஓ...தமிழ்ல கூட ப்லாக்ஸ் இருக்கா ? " என்றதொரு கேள்வியைத்தான் பெப்ஸி உமா கேட்கக்கூடும்...

அதனால் சின்னக்குட்டியரில் வலைப்பதிவில் அவரை குமுறிக்கொண்டிருக்கும் வவ்வால், ப்ரின்ஸ், மாசிலா, தெக்கி காட்டான் போன்றவர்கள் இங்கே கும்மியை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

மேலும் அவரை பெப்ஸி உமா என்று விளிப்பதை அன்புடன் நிறுத்திக்கொண்டு, ஆச்சி மசாலா உமா என்றே விளித்து தொலையுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

செந்தழல் எங்காவது காரை மோதி ஒரு இருபதாண்டு கோமாவில் விழுந்து எழுந்துவந்தால், அப்போதும் வால்மார்ட் மினரல் வாட்டர் வழங்கும் உங்கள் சாய்ஸ் என்று உமா பாட்டி உளறிக்கொண்டிருப்பதை காண சகியாமல் அப்படியே போய்விடவேண்டும் என்று ஆக்ஸிலெட்டரை நன்றாக அழுத்தி புளியமரத்திலோ அல்லது நின்றுகொண்டிருக்கும் லாரியின் பின்புறத்திலோ குத்தவேண்டும்...அதுதான் இப்போதைய அவா...

கல்லூரி படிக்கும் காலத்தில் எம்.சி.ஏ மாணவர் ஒருவர் பெப்சி உமாவிடம் போன் போட்டு பேசியதாக ஒரே பரபரப்பாயிருந்தது...வழக்கமாக முக்கிய வேலையாக நிற்கும் இடத்தில் யார் அந்த பெப்சி உமா என்ற மொக்கையான கேள்வியை நான் கேட்டுவைக்க, எதிர்வீட்டு ஜன்னல் ப்ளஸ் டூ பிகர் என்னை சனி கிரக ஏலியனை பார்ப்பது போல் பார்த்து, பர்மனண்ட்டாக அந்த ஜன்னலை சாத்திய சம்பவமும் நடந்து தொலைந்தது...

டி.வி சரளமாக பார்க்கும் காலம் வந்தது, எப்போது இந்த நிகழ்ச்சியை வைத்தாலும் யாராவது போனை போட்டு, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டாயிருக்கு என்று உளர, ஒருவேளை எனக்கு ஏற்படும் வயத்தெரிச்சலால் தான் இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லையோ என்று உள்ளூர எழுந்த கிலி காரணமாக ரெண்டு மூனு பேரிடம் விசாரிக்க, அப்படி ஒன்றும் பெப்சி உமாவின் வாய்ஸ் ரசகுல்லா மாதிரி இல்லை என்றும் ஐஸ் க்ரீம் தின்று கரகரத்த ஆயாவின் வாய்ஸ் போலத்தான் இருக்கிறது என்று கடும் கோபத்தில் ஆபீஸ் கலீக் சொல்ல...ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா என்று நினைத்துக்கொண்டேன்...

ஒரு காலத்தில் யாரும் போன் போடாது போனபோது, சன் டீ.வி நிறுவனத்தினரே பக்கத்து அறையில் இருந்து போனில் உமாவிடம் எழுதிக்கொடுக்கப்பட்ட டயலாக்குகளை வைத்து மொக்கை போட்டதாக ஒரு அதிரடி தகவல் பரவியபோது, நம்புறதா வேண்டாமா ஆண்டவா என்று நொந்துகொண்டேன்...

இப்போது யாரவது ஒரு செலபிரட்டியை கூப்பிட்டு வைத்து உமா மொக்கை போடுவதாக கேள்விப்பட்டு, இன்று கண்டிப்பாக பார்த்தேவிடுவது என்று அலுவலகத்தில் இருந்து விரைந்து வீடு திரும்ப திட்டமிட்டு...அலுவலகத்தில் மானேஜரிடம் ஆணி வாங்கிக்கொண்டிருந்த, அன்றைக்கென்று பார்த்து வீட்டு சாவியை எடுத்துச்சென்றுவிட்ட அறை நன்பனை ஆயிரம் காரணம் சொல்லி வீட்டுக்கு வரவைத்து, வேகமாக ஏழு மணிக்கெல்லாம் டி.வியை ஆன்ன்னியபோது...பெப்சி உமா ப்ரொக்ராம் பார்க்கத்தான் வந்தேண்டா என்றபோது நன்பன் முறைத்த முறையில் தீக்கங்கே வந்துவிட்டது...ஆமாம் பின்ன...பெப்சி உமா ப்ரொகிராம் விசாழ கிழமையாம்...நான் அவனை டார்ச்சர் கொடுத்தது திங்கக்கிழமை...வெற வழி, ஆனந்தமோ, அடுப்படியோ, ஒரு சீரியலை அந்த நேரத்துக்கு பார்த்து அழுதேன்...(இன்னும் கூட அந்த சீரியல் வருதாம்...ஆனா நான் பார்த்தப்போ இருந்த ஹீரோயினி, கொடுமைக்கார மாமியாராம் இப்ப)...

சரி விஷயத்துக்கு மறுபடி வரேன்...

கட்டற்றதாயுள்ள இணையத்துல வலைப்பதிவர்களை கலாய்த்து, தன்னுடைய வேலையான ஹி ஹி சிரிப்பு, புதுப்பாட்டு போடுறது என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதிகப்பிரசங்கித்தனம் செய்த உமாவை எதிர்த்து, மவுண்ட்ரோட்டில் மழைபெய்யும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...(இதுவரை ஓசை செல்லா இதைப்பற்றி பதிவு எழுதாதது ஆச்சர்யமாயுள்ளது)

பின் குறிப்பு:

தற்சமயம் நான் வெளியூரில் இருப்பதால் உண்மைத்தமிழன், வரவணை, சுகுணா, ப்ரின்ஸ், லக்கிலூக், பொட்டீக்கடை போன்றவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு நடத்துவார்கள்....வணக்கம்...

நான் எங்கே என கண்டுபிடியுங்கள்...!!!

ஓபிஸில் நடந்த - சுகந்திர தின எத்னிக் டே பங்ஷன்ல நானும் வேசம் போட்டேன்...எங்கே நான் கண்டுபிடிங்க...




|--------|


சரி ஏன் உங்களை அவ்ளோ டென்ஷன் பண்ணிக்கிட்டு என்று கொஞ்சம் பெரிய புகைப்படத்தை (அதான் டிஜிட்டல் காம் வந்திட்டதே...இதுக்கு யாராவது ஒரு பேரு வைக்க கூடாதா..இன்னும் புகைப்படம்னே சொல்லிக்கிட்டு திரியுறேன்) நானே கொடுத்திட்டேன்...



சரி அப்படியே ஒரு கைக்கூ:

போலிப்பதிவிலும்
அழகாகவேயிருக்கிறது...
உன் படம்...

பார்த்து சூதானமா இருந்துக்கோங்க புள்ளைங்களா....

சும்மா ஒரு வெளம்பர பதிவு: பார்த்து போடுங்ககும்மியர் 007

Tuesday, August 07, 2007

செந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி



செந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி
இலங்கை அரசியல் பற்றியோ, இந்திய அரசியல் பற்றியோ முழுமையாகவோ அரைகுறையாகவோ அறிந்துதொலைக்காமல், வெறுமனே வலைப்பதிவுலகில் மொக்கையும் கும்மியும் அடித்துக்கொண்டிருக்கும் செந்தழல் ரவியை குறுக்கு மறுக்காக அழைத்துச்சென்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஒரு இலங்கையில் இருந்து வந்திருக்கும் கருணா என்ற கிழக்கு மாகாண போராளியை பேட்டி எடுக்கவேண்டும் என்று சொல்லி அழைத்துசெல்கிறார்கள்...

பேட்டி எடுக்கச்சொல்லி உட்கார வைக்கப்பட்ட இடத்தில் குளிர்பதன வசதி செய்யப்படாமல் வியர்த்து வழிந்து டென்ஷனாக இருக்கும் செந்தழலிடம் நன்றாக மாட்டிக்கொள்கிறார் பேட்டி கொடுக்க வந்தவர்...

இனி நடந்தவைகளை நீங்களே பாருங்கள்...இவை இருவருக்கும் நடந்த ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உரையாடல்களின் தொகுப்பு...!!!!

செந்தழல்: வணக்கம்...

கருணா: உங்க பேரு ?

செந்தழல்: என்னோட பேரு செந்தழல் ரவி..உங்க பேரு ?

கருணா: என்னுடைய பெயர் கருணா அம்மான்.

செந்தழல்: என்ன ? கருணா அம்மாவா ? அம்மான்னா..மம்மியா ?

கருணா: இல்லை...அம்மான் என்றோல் அன்ணை..

செந்தழல்: அட வெண்ணை...நானும் அதைத்தானே சொல்றேன்...மேல்மருவத்தூர் மாதிரி எதாவது மேட்டரா ? பேண்ட் போட்டிருக்க...மம்மிங்கற ?

கருணா: தம்பி, நான் மம்மியல்ல...அம்மி...கிழக்கில் ஊன்றிவிட்ட அம்மி...பெரியாரை அப்படித்தான் அண்ணை என்று எங்களூரில் அழைப்பது வழக்கம்...

செந்தழல்: நீ அம்மியோ டம்மியோ...இதுக்கு மொதல்ல பதில் சொல்லு...பெரியாரை அண்ணைன்னு அழைச்சா அண்ணாவை என்ன தொன்னைன்னு அழைப்பீங்களா ? என்னடா குழப்பித்தள்ற...

சரி அதை விடு...செல்வி குடுக்கறேன் செல்வி குடுக்கறேன்னு யாருக்கோ மொபைல்ல கத்தி கத்தி பேசிக்கிட்டிருந்தியே ? செல்வின்னா ? என்ன ராதிகாவை சொல்றியா ?

கருணா: நான் குழப்பவில்லை...தமிழே அறியாத நீ எல்லாம் செவ்வி எடுக்க வந்துவிட்டாய்...அது செல்வி அல்ல...செவ்வி...செவ்வி என்றால் உங்கள் கொச்சைத்தமிழில் பேட்டி என்று அர்த்தம்.....இந்த கேனல் கருணாவிடமே உன்னுடைய பகடி செய்யும் வேலையை காட்டுகிறாயா?

செந்தழல்: என்னது, கேன கருணாவா ? என்ன நன்பா சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கற ? உன்னை நீயே கேனை என்றால் ஊருல உன்னை எவன் மதிப்பான் ?

கருணா ( மனதுக்குள்): ஹுக்கும், இப்ப மட்டும் எவன் மதிக்கிறான்..ஹும்..!!! (தொண்டையை கனைத்துக்கொண்டு இடம் வலமாக மண்டையை ஆட்டுகிறார்) எங்கள் ஊரில் உள்ள இலங்கை படையினர் எம்மை கிழக்கின் முழுமையான பிரதிநிதியாக நியமித்துவிட்டார்கள்...நீ என்ன சொல்வது...

செந்தழல்: சரி இப்போ சீரியஸா ஒரு கேள்வி கேட்கிறேன்...ஏன் புரட்சி சிறுத்தைகள் அமைப்பை விட்டு வெளியே வந்தீங்க ?

கருணா: (மனதுக்குள்): (நான் எங்க வெளிய வந்தேன், அவனுங்களே தொரத்திட்டானுங்க.....)..மீண்டும் தொண்டையை கணைக்கிறார்...இந்த விடயத்தை நீங்கள் கூர்மையாக கெவனிக்க வேண்டும்...புரட்சி சிறுத்தைகளிடம் வடக்கில் வெள்ளமாக பாய்ந்த பணத்தில் கிழக்கில் டீ வாங்க கூட பக்கத்தில் இருந்த பிள்ளையானின் சட்டைப்பையில் கைவைக்க வேண்டிய நிலையில் இருந்த நிலையில் இருந்த எனக்கு அனுப்பவில்லை...வெறும் ஆயுதத்தை கொடுத்து சுடு சுடு என்று சொன்னால் என்ன செய்வது...அதுவும் எங்களுக்கு அனுப்பபட்ட துப்பாக்கிகள் சென்னையில் வால்டர் தேவாரம் தன்னுடைய துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தியவை ஆகும்...அவை வெறும் புஸ் போகும் துப்பாக்கிகள் என்பது சென்னையில் உள்ள நரிக்குறவர்களுக்கே தெரியும்போது, அவைகளை வைத்து எப்படி இலங்கை ராணுவத்துடன் சண்டையிட முடியும்....அதனால் தான் நான் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன்...

செந்தழல்: இலங்கை ராணுவத்தை நோக்கி பொழுதுபோனால் துப்பாக்கியை தூக்கி பிடித்துக்கொண்டிருந்த நீங்கள் இப்போது எப்படி அவர்களுடைய அல்லக்கையாக செயல்பட முடிகிறது ?

கருணா: இந்த விடயத்தையும் நீங்கள் கூர்மையாக கவனிக்கவேண்டும்..

செந்தழல்: கூர்மையாத்தான் கவனிக்கறேன் சொல்லுங்க...

கருணா: ஏராளமாக வந்த சுனாமி நிதியை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் முன்பிருந்ததை விட பணக்கார அரசாங்கமாக மாறிவிட்டிருந்தது...துப்பாக்கியை நீட்டி பிடித்துக்கொண்டிருந்த என்னுடைய வீரர்கள் அங்கே எதிர்முனையில் டீ.கடை வைத்திருக்கும் உருமயா, மலிங்கா போன்றவர்களிடம் ஓசியில் டீ.யும் சிகரெட்டும் பாரிய அளவில் வாங்கி வந்திருந்திருக்கிறார்கள்....கடன் பாரிய அளவில் ஆனதால் எங்கள் போராளிகளின் சட்டையை பிடித்த கடைக்காரர்கள் என்னை பஞ்சாயத்துக்கு அழைத்தார்கள்..நான் அங்கே சென்று இந்த சண்டையை விலக்க முயலும்போது அங்கே பக்கத்தில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த இலங்கை ராணுவ SLA வீரர் தன்னுடைய பிஸ்கட் பாக்கட் ஒன்றை கொடுத்தார்...அதன் மூலம் இலங்கை ராணுவ வீரர்கள் மிகவும் நல்லவர்கள் என்ற கருத்து உருவானது...இந்த அளவுக்கு அல்ப்பையாக நாங்கள் இருப்போம் என்று எதிர்பாராத இலங்கை அரசு, கிழக்கில் இருந்து எனக்கு ஒரு பெட்டி பிஸ்கட் பாக்கட்டும் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு ஜீப்பும் அனுப்பியது...இதன் மூலம் நிறைய பிஸ்கட் பாக்கட்டுகளை எங்கள் ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை அரசுடன் இணைந்தோம்...இதன் மூலம் கிழக்கை எங்களுக்கு தாரை வார்த்துவிட்டது இலங்கை அரசு...

செந்தழல்: அமைதி முயற்சியில் நீங்கள் பங்கெடுத்ததை பற்றி சொல்லுங்கள்..

கருணா: நான் இதுவரை ஆறுமுறை அமைதி முயற்சிகளில் பங்கெடுத்துள்ளேன்...நோர்வேக்காரர் எரிக் சொல்ஹிம்மை நம்பவே கூடாது...டேபிள் மேல் பிரித்து வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கட்டுகளில் நான் கை வைத்து எடுப்பதற்குள் அதை எடுத்து பக்கத்தில் இருக்கும் ஆண்டன் பாலசிங்கத்திடம் கொடுத்துவிடுகிறார்...இதன் மூலம் அவர் நடுநிலை அற்றவர் என்று அப்போதே எனக்கு தெரிந்தது...இருந்தாலும் அதை அப்போது சொல்ல முடியாமல் நான் அவர்கள் பக்கம் இருந்தேன்.....இது போன்ற நடுநிலை அற்ற எரிக் சொல்ஹிம்முக்கு நோர்வே அரசாங்கமே பிஸ்கெட் பாக்கட்டுகளை அனுப்புவது எனக்கு முன்பே தெரியும்...எப்படி இருந்தாலும் அவர் அதனை புரச்சி சிறுத்தைகளின் அரசியல் தலைவருக்கு தான் கொடுப்பார் என்பதும் அறிந்திருப்பதால் தான், எரிக் சொல்ஹிம்மை அமைதி முயற்சிகளில் ஆட்டத்தில் சேர்க்காதீர்கள் என்று நான் சொல்வது...

செந்தழல்: ஒரு கவிதை சொல்லுங்க...

கருணா:

வெருகல் ஆற்றுப்படுக்கையெங்கும் - எம்
வேந்தர்கள் வீழ்ந்து கிடந்தபோது
வெட்டப்பட்ட எம்கரங்கள்
மீண்டும் முளைத்தன.
ஆயிரமாய்…

செந்தழல்: அரசியல் பாதைக்கு நீங்கள் திரும்பியதை ஏற்றுக்கொள்ளமுடியுமா ? அப்படி என்றால் நீங்கள் ஏன் இன்னும் வால்டர் தேவாரத்தின் துப்பாக்கியை வைத்துள்ளீர்கள் ?

கருணா: இது ஒரு சிக்கலான விடயம்...அரசியல் பாதை என்றால் என்னவென்றே எனக்கு கற்றுக்கொடுக்காமல் இருட்டடிப்பு செய்த புரட்சி சிறுத்தைகளின் தலைவர், கிழக்குக்கு எப்படிப்பட்ட பாரிய துரோகத்தை செய்துள்ளார் என்று நீங்கள் புரிந்துகொள்ள முடியும்...ஆகவே உங்களது முதல் கேள்வி எனது மரமண்டையில் ஏறவில்லை...துப்பாக்கிகளை நாங்கள் வைத்துள்ளது மிகவும் எளிமையான கேள்வி...நாங்கள் இட்டலிக்கு பூண்டு சட்டினி செய்யும் போது எம்மிடம் கிரைண்டர் அல்லது மிக்ஸி போன்றவை இல்லாததால் வால்டர் தேவாரத்தின் துப்பாக்கியை வைத்துத்தான் பூண்டை நசுக்கி மிளகாய்தூளில் இடுகிறோம்..ஆகவே எம்முடைய பாதுகாப்புக்காகத்தான் நாங்கள் துப்பாக்கியை தூக்கி பிடித்துள்ளோம்...

செந்தழல்: புரட்சி சிறுத்தைகளால் உங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதாக சொல்வது எந்த அளவுக்கு உண்மை ?

(எங்க ஆபத்து எங்க ஆபத்து என்று மெர்சலாகி எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார் கருணா..)

செந்தழல்: அட இப்போ இல்லைங்க...வருங்காலத்தில்...

கருணா : (நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார்)...புரட்சி சிறுத்தைகளால் எனது உயிருக்கு ஆபத்து என்பது உண்மைதான்...எந்த இரவும் தூங்க முடிவதில்லை...தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மானிட்டர் குவாட்டர்தான் அந்த பணியை செய்கிறது...இருந்தாலும் பிஸ்கட் பாக்கட்டுக்காக செய்யப்பட்ட இந்த துரோகத்தை மன்னித்து புரட்சி சிறுத்தைகள் தலைவர் அறிக்கை விட்டால் மீண்டும் இலங்கை ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கிகளை தூக்கி பிடிக்க தயார்...ஆனால் மீண்டும் மூன்று நான்கு பெட்டி பிஸ்கட் பாக்கட்டுகளை புரட்சி சிறுத்தைகள் தலைவர் அனுப்பவேண்டும்...என்னை பார்த்தாலும் முகத்தில் அறைவதை செய்யக்கூடாது...இது தான் எனது கோரிக்கை...

செந்தழல்: பொறுமையாக செல்வி அளித்ததுக்கு நன்றீ....வெளியில் ஒரு பெட்டியில் குட் டே பிஸ்கட் உள்ளது...அதை பெற்றுக்கொண்டு நீங்கள் விடைபெறலாம்...

கருணா: நன்றி செந்தழல் அவர்கள்...

செந்தழல்: நன்றி கேன.கருணா அம்மான் அவர்களே...

Monday, August 06, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை - தழலின் பார்வையில்

நானும் எழுதுவேன், ஆட்டத்தை கலைப்பேன்....

பதிவர் பட்டறையை பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவுகள்....ஹைய்யோடா...என்று இருக்கிறது ஸ்னாப்ஜட்ஜ் பதிவை பார்க்க...!!!

சனிக்கிழமை காலையில் நான்கு மணிக்கு பெங்களூர் கிளம்பி, டி.நகர் கீதாஞ்சலி ஹோட்டல் அறையை வந்தடைந்தபோது மணி 11:00...செல்ப் ட்ரைவிங்கில் டவுசர் கழண்டதில் அறையில் க்ராஷ் ஆகி மாலை வரவணையின் தொலைபேசி அழைப்புக்கு தான் விழித்தேன்...

அப்படியே வரவனையுடன் கிளம்பி கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் பாலாபாயை தேடி சென்றால் ஏற்க்கனவே பட்டறை நடக்கும் இடத்துக்கு லக்கியுடன் அப்பீட்டு...அங்கே சென்று திருவள்ளுவர் சிலையை க்ராஸ் ஆகி போய், போர்வீரர் நினைவில்லம் வரை சுற்றி மீண்டும் 'ஓ' அடித்து திரும்பியதில் மக்கள் இஷ்யூ செய்ய கவர்கள் ப்ரிப்பேர் செய்துகொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தோம்...

பாலபாரதி என்னவோ சரியாக பேசலை...என்ன டென்ஷனோ...மா.சி அண்ணன், வாங்க அ.மு.கவினரே, உக்காந்து 'பின்' அடிச்சு கவர்ல பொருளை போடுங்க என்று உத்தரவிட்டார்...வரவணை, "அங்க வந்தா கல்யாண வேலை செய்ய வெச்சுருவாங்க" என்று வெளியிலேயே 'தம்' போட அப்பீட் ஆனார்...

என்னுடன் வந்த அனானிமஸை கவர் போட அமர்த்திவிட்டு, உட்கார்ந்து கவர் போடுவதை எல்லாம் ச்ச்செல்லா ஆன்லைனில் மொபைல் மூலம் வலையேற்றிக்கொண்டிருந்த ஓசை செல்லாவை தள்ளிக்கொண்டு பீச்சாங்கை பக்கம் இருந்த பீச்சாண்ட சென்று ஒரு சிகரெட் பற்றவைத்தோம்....

சென்னையில் விற்கும் கிங்ஸ் பில்டர் க்வாலிட்டியை நொந்துகொண்டே ரெண்டு இழுப்பில் முடித்துவிட்டு, (பெங்களூரில் ஐ.டி.சி நிறுவனம் தரும் க்வாலிட்டியை சென்னையில் தருவதில்லை...மட்டமான புகையிலையை போட்டு சிகரெட் தயாரித்து விற்கிறார்கள் சென்னையில்....தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது சர்வதேச சமூகத்துக்கே கைவந்த கலையாக இருக்கும்போது, கொல்கத்தாவில் இருக்கும் ஐ.டி.சி கம்பெனி காரன் என்ன விதிவிலக்கா)...சிறிது மொக்கைக்கு பிறகு மீண்டும் திரும்பியபோது கல்யாணவேலை முடிந்துபோயிருந்தது...

பிறகு வரவணை ட்ரைவ் செய்ய ('ரவி வண்டி பர்மாமென்ஸ் சூப்பர்'), செல்லாவும் நானும் என்னுடைய ஹோட்டலை நோக்கி...லக்கி முன்பே பைக்கில் ஹோட்டலை நோக்கி பறந்துவிட்டார்...

பாரில் பல விஷயங்கள் பேசினோம்...ஓசை செல்லா அரை க்ளாஸ் ரெட் வைன் அடித்துவிட்டு முகமெல்லாம் வியர்க்கவியர்க்க மப்பாகி மட்டையானார் என்பதை நினைக்க நினைக்க நொந்தேன்...ஆட்டோவில் 70 ருப்பீஸ் பேசி அவரை எக்மோரில் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வழியனுப்பிவிட்டு, லக்கிலூக்கிடமும் என்னிடமும் முத்து தமிழினியின் வேலையை (அதான் பஞ்சாயத்து), கொஞ்ச நேரம் செய்த வரவணை செந்தில் பிறகு லக்கியுடன் தன்னுடைய அறைக்கு பார்சல் கட்டிய எம்.ஸி விஸ்கியுடன் புஸ்க்கினார்...

அடுத்தநாள் காலை கண் விழித்தபோது மணி ஒன்பதரை...படபடவென குளித்து ஆர்டர் செய்த தோசையை பல் விளக்காமல் வயிற்றில் அழுத்திவிட்டு கிளம்பி போய் எங்கும் சுற்றாமல் சென்னை பல்கலைக்கழகத்தில் கார் ப்ரேக்கை மிதித்தபோது மணி பத்து...!!!

ஏற்கனவே பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள் என்று எண்ணத்தோன்றியது..."துன்றதுக்கு" என்று ஒரு உணவு டோக்கன்...கண்டிப்பா பாலபாரதி ஐடியாவாத்தான் இருக்கும்...அவர்தான் இப்படி க்ரியேட்டிவா (கிறுக்குத்தனமா என்று ஊர்நாட்ல சொலவடை) சிந்திப்பார்...பெயர் எழுதி பேட்ச் குத்திக்கொண்டு உள்ளே பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த பத்ரியை பார்க்க ஏ.சி. அறையில் சென்று அமர்ந்தபோது, தமிழ் வலைப்பதிவர்கள் போண்டாவை ஊதி போண்விட்டாவாக்கிவிட்டது தெளிவாக தெரிந்தது...

டோண்டுவுடன் வழக்கமாக மரவண்டு கனேஷும், ஜெயகமலும், ஜெயராமனும் போண்டா சாப்பிட்ட உட்லேன்ண்ட்ஸ் ஓட்டல் சந்திப்புகளை நினைத்துக்கொண்டேன்...இப்போது ப்ரம்மாண்டமாக நடக்கும் வலைப்பதிவர் பட்டறையை கழுத்தை திருப்பி ஒரு நோட்டம் விட்டபோது...முன்னது கஸ்தூரி ராஜாவின் மொக்கை படம் போலவும், பின்னது ஷங்கரின் அதிரும் ப்ரம்மாண்டம் போலவும் தோன்றியது...

காலியாக இருந்த இருக்கையை தேடியபோது டோண்டுவுக்கு பக்கத்தில் தொடர்ந்து நாலு இருக்கைகள் காலியாக இருந்தது...டோண்டுவுக்கு பின்னால் பூபாலன்...வழக்கமாக...டோண்டு வரும் சந்திப்புகளுக்கு மட்டும் சரியாக வருபவர்..:)))))) இரண்டு சேர் தள்ளி அமர்ந்தேன்...பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை "இவர் தான் நான் என்று அறியப்பட்டவர்" என்று குழப்பமாக அறிமுகம் செய்தார் டோண்டு...ச்சும்மாவே எனக்கு எதுவும் புரியலைன்னு வைங்களேன்...வலைப்பூ சுனாமி பக்கத்தில் வந்து அமர்ந்தது...

பக்கத்தில் அமர்ந்திருந்த லக்கியிடம் சொன்னேன்...பாருங்க, நாம பார்த்துக்கிட்டிருக்கும்போதே வலைபூக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட்டாங்க சென்னைப்பட்டனத்துக்காரங்களும் பாலாபாயும் என்றேன்...

மதியம் சாப்பாட்டுக்கு டோக்கன் எடுத்துக்கொண்டு போனால் ஆட்டோவில் நசுங்கிய தயிர்சாதங்களை வழித்து, டப்பாக்களை க்ளீன் செய்துகொண்டிருந்தார் பாலபாரதி...என்ன கமிட்மெண்ட்டா சாமீயோவ் என்று நினைத்துக்கொண்டேன்...அப்படியே முகுந்தின் தண்ணீர் பாட்டிலை வைத்து தயிர்சாதம் மற்றும் வெஜ் பிரியாணியை முடித்தேன்...

மேலே தமிழி கல்லூரி பேராசிரியர் மாதிரி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்...கூட்டம் பெப்பெரப்பே என்று அவர் விளக்குவதை பார்த்தபோது, இவர் கண்டிப்பாக கல்லூரி பேராசிரியராகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்...ஹூம் இல்லையாம்...மென்பொருள் நிறுவன மேலாளராம்...சரி மென்பொருள் துறை ஊத்திக்கிட்டா டியூஷன் எடுத்து பொழைச்சுக்கலாம், ஹி ஹி !!! அவரது நிறுவன வேலைவாய்ப்புகளை தருவதாக சொன்னது ரொம்ப ப்ளஷர் ஆக இருந்தது...மற்ற தகவல்களை வேலைவாய்ப்பு பதிவில் வெளியிடுகிறேன்...

பிறகு என்னுடைய செஷன்...முதலில் யார் யாருக்கு இ-மெயில் ஐ.டி இல்லை என்றேன்...எங்கிருந்தோ வந்திருந்த ஆசிறியர் ஒருவர் சிற்றிலக்கிய வெளியீட்டாளர் ஒருவர், கையெழுத்து பிரதி எழுதும் ஒரு தம்பி என்று கை தூக்க, அவர்களுக்கு முதலில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதில் பத்து நிமிடம் கழிய, ஹெச்.டி.எம்.எல் பற்றி சில விவரங்களை சொல்லி ஒருவழியாக நிறைவு செய்தேன்...ஓசை செல்லா நான் வகுப்பு எடுப்பதை அப்படியே பதிவாக்க, செல்லா ஆன்லைனில் ரெப்ரஷ் செய்ய, அந்த பதிவு வெளிக்கிட, அதைப்பார்த்த வகுப்பு மாணவர்கள் ஆ வென வாயை பிளந்தது மகிழ்ச்சியாக இருந்தது...இந்த ஆர்வம் தான் அவர்களை மேலும் மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள கிரியா ஊக்கி என்று மனத்துக்குள் நினைத்து மகிழ்ந்தேன்...

ப்ளாக் செக்யூரிட்டி பற்றி லக்கிலூக், நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவர் என்று ஆரம்பித்ததை நான் இருந்து பார்க்கவில்லை...இருந்திருந்தால் சிரித்து ரசித்திருப்பேன்...ஆனால் இந்த டாப்பிக் பற்றி நாகூர் இஸ்மாயில் சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் வளவளவென்று போட்ட ப்ளேடு தாங்காமல் மேடையில் இருந்த பத்ரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்காமல் விக்கியிடம் சொல்லி வெட்டச்சொல்லியும் வளவளப்பு நிற்கவில்லை...டி.வி. காமிராக்கள் உள்ளே வர, நாகூர் இஸ்மாயில், நேரமின்மை காரணமாக நான் வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பதில்லை, வலைப்பூ எழுதுவதும் இல்லை என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்க, அது காமிராவிலும் பதிவாகிக்கொண்டிருக்க பத்ரியே பொறுமை இழந்துவிட்டார்...பட்டென எழுந்து "நீங்களும் எழுதவேண்டும்" என்று சொல்லி ஒரு பஞ்ச் வைத்து சமயோசிதமாக சமாளித்தார்....நாங்கள் எல்லாம் வலைப்பூ எழுதுவதே வேலை வெட்டியாக இருப்பது போலவும், தான் மட்டுமே நாகூரில் ஆணி புடுங்குவது போலவும் அவர் பேசியபோது, அவர் மேல் விழுந்து கடித்துவைக்க வேண்டும் போல் இருந்தது...பத்ரி காப்பாற்றினார் அவரை...(விக்கியிடம் சொல்லி வெட்டி விடச்சொல்லி - பார்வையாளர்களையும்) !!!!!

பிறகு ஒரு தம் பற்றவைக்கலாம் என்று வெளியே வந்தபோது தினமலர், தினத்தந்தி, உண்மை, மாலைமலர், மாலைமுரசு என எல்லா பத்திரிக்கை நன்பர்களும் லிவிங் ஸ்மைலிடம் கூடி நின்று கும்மி அடித்து பேட்டி கண்டுகொண்டிருந்தார்கள்...அவர்களுக்கு பரபரப்பு நூஸு...ஒரு பக்கத்தை ரொப்புவார்கள்...ஹும்...ஸ்மைல்முடித்துவிட்டு வந்தபோது நான் கெளம்புறேன் என்று சொன்னேன்...!!!

மீண்டும் கிளம்பி நானும், ஜெயா.டிவி நட்டத்தில் இயங்குகிறது என்று கூறிய பெங்களூர் அரவிந்தனும் என்னுடைய ஹோட்டல் போனோம்...முகுந்த் என்னுடன் பெங்களூர் வருவதாக கூற, காரை ஓட்டுமாறு அப்ளிக்கேஷன் போட்டேன்...காரணம் நான் பயங்கர டயர்ட்...

மீண்டும் வரவணையும் லக்கியும் ஏழு மணிக்கு வந்து ரிசப்ஷனில் இருந்து அழைக்க, கிளம்பினேன்...பெங்களூர் கிளம்ப ஒன்பது மணி டார்கெட் என்பது ப்ளான்...கீழே வந்து சிறிது நேர காத்திருப்புக்கு பின் முகுந்த் வந்து சேர, கீதாஞ்சலி பாரில் இடமில்லாமல் வரலாற்று புகழ் வாய்ந்த - டோண்டு சார் சிக்கன் சாப்பிட்ட ஈகிள் பார் சென்று வலைப்பதிவர் மீட்டிங் நடத்திவிட்டு, லக்கிக்கும் வரவணைக்கும் பை சொல்லிவிட்டு, முகுந்து காரை பட்டையை கிளப்பி பெங்களூருக்கு வர காலை நாலுமணிக்கு பெங்களூர்...

முகுந்தை அவர் வீட்டில் ட்ராப் செய்துவிட்டு, வீட்டுக்கு போட் பெட்டில் நான் க்ராஷ் ஆகியபோது மணி நாலு முப்பது...

எப்படியும் பட்டையை கிளப்பும் பதிவுகள் வரும், பாபா எல்லாவற்றையும் எடுத்து ஸ்னாப்ஜட்ல போடுவார், மொத்தமாக படித்துக்கொள்ளலாம் என்று மூன்றுமணிவரை காத்திருந்தது வீணாகப்போகவில்லை...சிவாஜி த. பாஸ் படத்தை விட வலைத்திரட்டிகளை அதிரவைக்கும் எண்ணிக்கையில் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன...பட்டறை பற்றி எழுதவில்லை என்றால் வரலாற்று பிழையாம்...நானும் ஐக்கியமாகிட்டேன் ஜோதியில்..!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Sunday, August 05, 2007

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....