Monday, July 16, 2007

திரிகோணமலை பள்ளி மாணவர்களுக்கு உதவலாம் வாருங்கள்

மகாலட்சுமி என்ற மாணவிக்கு உதவிகேட்டு எல்லோரிடமும் கைஏந்தியபோது பொன்ஸ் தன்னுடைய பதிவில் பாரதியின் வரிகளை இப்படி எழுதி இருந்தாங்க...

ஆலயம் பல்லாயிரம் செய்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

அப்படீன்னு...

சமயத்துக்கு தக்கமாதிரி அந்த வரிகள் பலரோட இதயத்தை தொட்டு, இன்றைக்கு ஒரு மாணவி தன்னுடைய கல்வியை முடிக்கவும் நிச்சயமான வேலைவாய்ப்புக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் தோள் கொடுத்தாங்க...

உதவி செய்ததோட இல்லாம உஷா அக்கா எழுதி இருந்த வரி என்னவென்றால்...

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள் என்று...!!!!

இப்போது இன்னொரு வாய்ப்பு...தமிழன் பசியோடிருந்தால் தான் துடிப்பான் சக தமிழன்...தமிழன் கல்விகற்க வாய்ப்பில்லாமல் இருந்தால் நெஞ்சுருகுவான் சக தமிழன்...இல்லையா...தன் கண்ணெதிரே எதிர்ப்படும் எந்தவொரு உதவி செய்யும் வாய்ப்பையும் மறுக்க மாட்டான் இந்த தமிழன்...அதனால் தான் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொன்னாங்க...

இலங்கை திரிகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து உதவிகேட்டு வந்துள்ள இந்த செய்தி, பாடசாலை பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் அளிக்கக்கூடியதொரு வாய்ப்பு...

பத்தாம் வகுப்பை சேர்ந்த நாற்பது பிள்ளைகள் அங்கே தங்கி படித்து வருகிறார்கள்...டிசம்பர் வரையிலான அவர்களது கல்விக்கும் உணவுக்குமான உதவியை கேட்டுத்தான் இந்த ரெக்வஸ்ட் வந்திருக்கு...

ஐந்து மாதத்துக்கு நாற்பது பிள்ளைகளுக்கு உணவும் கல்வியும் தான் தேவை...ஒரு பிள்ளைக்கு உணவு மற்றும் கல்விக்கு 1 டாலர் தேவை என்று மதிப்பிட்டிருக்காங்க...ஆக மொத்தம் 6000 டாலர் தேவையாக இருக்கும்...

வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யும்படி வேண்டுகிறேன்...

தொடர்புக்கு

பிரவீண் (guy.praveenkumar@gmail.com)

முகவரி:

Trincomalee Children Foundation
Mailing address:
283 John Deisman Blvd
Maple,
ON L6A 3H4
Canada

மேல்விவரம் ரிச்மாண்ட் தமிழ்ச்சங்க முகவரியிலும் பார்க்கலாம்...

நன்றிகளை முன்பே தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!

No comments:

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....