Monday, April 30, 2007

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

வ.வா.சங்கத்தினருக்கு ஆப்பு(ரைசல்)

முதலில் அப்ரைசல் (what is appraisal) என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்...தகவல் தொழிநுட்பத்தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு பெறுகிறார்கள் அல்லவா...அவர்களுடைய சம்பள உயர்வு பலவேறு காரணிகளுக்காக வழங்கப்படுகிறது...சிறப்பாக உழைத்தவருக்கு நல்ல சதவீதம் உயர்வு கிடைக்கும்.....சரியாக வேலை செய்யாமல் ஓப்பி அடிப்பவருக்கு குறைவான சம்பள உயர்வு கிடைக்கும்...இந்த வகையில் அளவீடு செய்ய பல காரணிகளை மானேஜர்கள் பயன்படுத்துவார்கள்...ஊழியரின் பணி பற்றிய அறிவு, நேரம் தவறாமை, குழு மனப்பான்மை, தொடர்புகொள்ளும் திறன் போன்றவை கணக்கில் எடுக்கப்படும்...இந்த முறையில் ஒரு வருடத்தில் அவருடைய ப்ர்பார்மன்ஸ் (இயங்குதிறன்) கணக்கிடப்பட்டு (எவாலுவேஷன் - Evaluation)அதற்கு தகுந்தார்போல சம்பள உயர்வு அதிகமாகவோ குறைவாகவோ கொடுக்கப்படும்...

சரி இனி மேட்டருக்கு வரேன்...

நம்ம வ.வா.சங்கத்துக்காரவுக இந்த ஆண்டு 2006 - 2007 எப்படி செயல்பட்டாங்க என்பதை கணக்கீடும் ஆப்புரைசல் நடக்குது...ஆசிப் மீரான் ஆப்புரைசல் போடச்சொல்லி என்னிடம் கொடுத்துட்டாரு...நாம நமக்கு நாமே ஆப்பு வெச்சுக்கறதுல கில்லாடியாச்சே...

பத்து நிமிஷம் செலவழிச்சு பதிவை எழுதிட்டு தெரியாத்தனமா சேவ் பண்ணாம க்ளோஸ் பண்ணிட்ட நேரத்திலேயே ஆப்பு ஆரம்பிச்சுருச்சு...ஒரு வேளை வ.வா.சங்கத்தை பற்றி ஆரம்பிச்சாலே ஆப்புத்தானோ....

2006 முழுசும் போட்ட மொத்தம் 129 பதிவுகளை கணக்குல எடுத்துக்கிட்டாலே பெரிய ஆணியா கிடைக்கும்...அதுல புடுங்கினது போவ மீதி இருப்பதோ வகை வகையான ஆணிகள்...அந்த ஆணிகளை வெச்சு ஆப்படிச்சாலே அய்யகோன்னு ஆகிரும்...என்னத்த சொல்ல, என்னத்தை விட..இருந்தாலும் இந்த எவாலுவேஷன் பீரியடுல எவனோன்னுவேஷம் போட்டுக்கிட்டு இருக்க முடியாதே...ஆப்பு வெச்சே ஆவனுமே...

கைப்புள்ளையோட கதையை ஆப்பிரிக்காவுல இருந்து ஆரம்பிச்சு கைப்போங்கான்னு அகஸ்மாத்தா எழுதனத சொல்லவா, இல்லை கவுண்டரை வெச்சு ஆணியடிச்சு டெவில் ஷோ நடத்துனதை சொல்லவா...

இருந்தாலும் பாயிண்டு பாயிண்டா இப்ப புடிக்கலாம்...

ஜாப்பு நாலேஜ் : கைப்புள்ளைக்கு ஆப்பு வெக்கிறது தான் ஜாப்புன்னு சங்கத்துக்கு தெரியுது...கைப்புள்ள அடிவாங்கும்போது எஸ்கேப்பாயிட்டு, எங்கடான்னு கேட்டா பக்கத்தூருல லாரில ஆளு கூட்டியாற போயிருந்தேன் தல அப்படீன்னு கதைய உடுறது...பின்னூட்டம் போடுறவங்களுக்கு எல்லாம் இராம் நொந்து நூலாகி பதில் போட்டுக்கிட்டு இருப்பாரு...தேவும் இளாவும் ஆணி புடுங்க போயிருப்பாங்க....சவுண்டு பார்ட்டி எப்படா தீவாளி வரும், பொங்கலை பத்தி பதிவு போடலாம்னு காத்திருப்பாரு...ஜொள்ளு எங்கயாவுது பாளை பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு பிகர்களை பற்றி கணக்கெடுத்துக்கிட்டிருப்பாரு...சங்கத்துல இராமை போட்டு எல்லாரும் நொக்கு நொக்குனு நொக்கிக்கிட்டிருப்பாங்க...ம்ம்ம் விடுங்க அடுத்த பாயிண்டுக்கு போவோம்...

பிராப்ளம் சால்விங் ஸ்கில் : ப்ராப்ளமே நாந்தாண்டா என்று உக்காரும் இடத்திலெல்லாம் ஆப்பு வாங்கிக்கொண்டிருக்கும் கைப்புவை வைத்துக்கொண்டு என்னாத்த ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ல காட்டறது...ட்ராக்டர்னா தெரியுமான்னு வியசாயிய கேட்டா, ஆமாம் கைப்பு போட்டிருப்பாரே அழுக்கு கலர் ட்ராயர் அப்படீங்கறார்...என்னத்த ப்ராப்ளத்த சால்வ் பண்ணி...

ஆட்டிடியூட் டுவோர்ஸ் வொர்க் : பிகர்களை கலாய்க்கறது தான் தனது மெயின் ஒர்க் என்று சொல்லி சுத்திக்கொண்டிருக்கும் ஜொள்ளு...(உண்மையில்) ஆமா, போற எடத்துல எல்லாம் கட்ட வெளக்கமாத்த கொண்டி அடிக்கறாளுங்க. இதுல பிகரு வேற கேக்குது...இந்த வருசமாவது ஏதாவது மஞ்சத்தாவனிக்கு ரூட்டு விட்டு கல்யாணத்தை முடிச்சுடலாமுன்னு தான் பார்க்குறார்...ஒன்னும் செட்டாக மாட்டேங்குது...கடந்த நாப்பது வருஷமா...ச்ச்சே...இருவத்தைஞ்சு வருஷமா இந்த நிலை தென்மேற்கு பருவக்காத்து மாதிரி நீடிச்சிக்கிட்டு தான் இருக்கு...என்னாத்த சொல்ல...

டீம் ஒர்க் : இத பாராட்டித்தான் தீரனும்...உண்மையா சொன்னா, கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வை அப்படீன்னு ஒரு கிழ ச்சே பழ மொழி இருக்குல்ல...அதை மனசுல வெச்சுக்கிட்டு எல்லா மெம்பரும் சங்கத்துல ஒரு மொக்கை பின்னூட்டமோ பதிவோ போடாம நைட்டு வீட்டுல பாத்திரத்தை கழுவறதில்லைன்னு அடுத்தவிட்டு வாச்சுமேன் தலையில அடிச்சு சத்தியம் வச்சிட்டாங்கல்லா...

கம்மூனிகேசன் : இந்த டீம் எபக்டிவ் கம்மூனிகேசன் செய்யுதுன்னு சொன்னா அது மிகையில்லை...கைக்காச போட்டு ஆமதாபாளையம் வரைக்கும் போனப்போட்டு கைப்புவை கலாய்க்கறதுக்கு கொஞ்சம் தெம்பு வேனும்தான்...அந்தாளுக்கு போனப்போட்டா, காக்காய படம் புடிச்சிக்கினு இருக்கேன், மைனா மேல கழிஞ்சிருச்சி அதை துடைச்சிக்கினு இருக்கேன் அப்படின்னு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மைய சொல்லுவாரு...வேற என்ன...

இனிசியேட்டிவ் : சங்கத்து ஒரு வருச பர்த்து டேவுக்கு ஆயிரம் பொற்காசு போட்டி ஆரம்பிச்சு, வரவேற்பை பொறுத்து அதை மூவாயிரம் பொற்காசா மாத்தினது எல்லாம் ஒருவகை இனிசியேட்டிவ்தான்...ஆனா அதுக்காக அந்த மூவாயிரத்துக்கு நாமக்கல் சிபி க்ரெடிட் கார்டை தேச்சது தான் கைப்பு மீஞ்ஜில அயர்ண்ட் பாக்ஸை தேச்ச மாதிரி தீஞ்சு போன விஷயம்...ஹி ஹி...ச்ச்ச்சும்மா...

கஸ்டமர் ஓரியண்டேஷன் : சங்கத்துக்கு கஸ்டமர் யாரு...சைக்கிள் ரிப்பேர் பண்றவனும், பேரீச்சம்பழம் விக்கறவனும் தான்...இருந்தாலும் ஹிட்டு கொறையும் போதெல்லாம் ஒரு மொக்கை பதிவாவது போட்டு, குருப்புக்கு ஒரு மெயிலாவது தட்டி கஸ்டமரை எப்போதும் சிரிக்கவெக்கற சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு அஞ்சி மார்க்கை அஞ்சாமே போட்டுடறேன்...

ட்ரெயினிங் நீட்ஸ் ( Training Needs) : கம்பேனியில இலவசக்கொத்தனாரும், இம்சை அரசியும் அவ்ளோ ஆக்டிவ்வா இல்லை போலிருக்கே...கொறஞ்ச பட்சம் 100 கூட அடிக்கலன்னா என்ன சங்க போஸ்ட்டு...ஒரு போஸ்ட் போட்டா மொக்கையா ஒரு பத்து பின்னூட்டம் போடாம யாராவது இருந்தா அவங்களுக்கு இம்போஸிஷன் கொடுக்கனும்...

சூப்பர்வைசர் இறுதி கமெண்டுகள்..

மொத்தத்தில் இந்த வ.வா.சங்கம் சிறப்பாக செயல்படுகிறது...2006 ல் சிறப்பான எபக்டோடு செயல்பட்ட இந்த பதிவில் 2007 ல் குறைந்த பட்சம் 300 பதிவு விழவேண்டும்...இந்த வலைப்பூவை டொமைன் பதிவாக மாற்ற சூப்பர்வைசர் பரிந்துரைக்கிறார்...வெச்சாச்சுப்பா ஆப்புரேசல்.

தொழில்நுட்ப கூலிகளுக்கு மேதின வாழ்த்துக்கள்


Friday, April 27, 2007

வாழைப்பழ கோழிக் கறி

தேவையான பொருட்கள்:

கோழிக் கறித் துண்டுகள் - 4

சிக்கன் மசாலா பௌடர் - 2 தேக்கரண்டி

வாழைப்பழங்கள் - 2

அரிசி - 1 கப்

எலுமிச்சம் பழம் - 3

செய்முறை:

கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து, அதில் கோழித் துண்டுகளை நன்கு தோய்த்து எடுக்க வேண்டும். இந்தத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின்னர் சூட்டைக் குறைத்து விட்டு கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி அதை சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.

இப்போது வாழைப்பழங்களை எடுத்து நறுக்கி அதை சுமார் 5 நிமிட நேரம் கோழிக் கறியுடன் சேர்த்து வேக விடவும். அதேசமயத்தில் கொஞ்சம் அரிசியை எடுத்து வேக வைக்கவும். அரிசி வெந்த பிறகு அதில் அரை எலுமிச்சம்பழ சாறை விடவும். இப்போது வாழைப்பழ கோழிக் கறி தயார்.

Thanks Keetru.

http://www.keetru.com/recipes/non_veg/banana_chicken_curry.html







#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் "மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது" என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்





#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

வெப்சைட் வாங்கல்லியோ வெப்சைட்டு

மக்கள்ஸ்...சொந்தமா வெப்சைட் ஓப்பன் செய்ய விரும்புறவங்க, (அதாங்க டொமைன் நேம் ரெஜிஸ்டர் செய்ய விரும்புறவங்க) - நம்ம தமிழ் வலையுலகில் இதுபோன்ற பணிகளை ( வெப்சைட் டிசைன் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன்) செய்யும் ஓசை செல்லாவை அணுகலாம்...!!!

சரியான விலையில் தரமான பணியை ஆண்டுக்கணக்கில் செய்துகொண்டிருக்கும் நம்ம செல்லா, தமிழ் வலையுலகில் இருந்து வரும் ரெபரன்ஸுக்கு அதிக கேர் எடுத்து சூப்பர செஞ்சு தருவார் என்று நம்புறேன்...

அவரோட மின்னஞ்சல் முகவரி

webmediaconsultant@yahoo.com

வணக்கம்...!!!!!!




#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

URGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை

சென்னையில் ஒரு தோழரின் தந்தையார் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்..

இன்னும் இரண்டு மூன்று நாளில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது...ஆனால் தேவையான ரத்தம் கிடைக்கவில்லையாம்..

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்..

என்ன க்ரூப் : A1+ ( பாஸிடிவ்)

தொடர்புக்கு : லஷ்மி பிரியா (9884394125)

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினால் நன்று...!!!

URGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை

சென்னையில் ஒரு தோழரின் தந்தையார் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்..

இன்னும் இரண்டு மூன்று நாளில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது...ஆனால் தேவையான ரத்தம் கிடைக்கவில்லையாம்..

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்..

என்ன க்ரூப் : A1+ ( பாஸிடிவ்)

தொடர்புக்கு : லஷ்மி பிரியா (9884394125)

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினால் நன்று...!!!

Thursday, April 26, 2007

ஐ.பி.எம் இந்தியாவில் சேர விருப்பமா ?

உங்கள் தோழர் எவரேனும் பணி மாற்றல் / பணி வாய்ப்பு விருப்பத்தில் இருக்கிறாரா ? அவர் ஐ.பி.எம் நிறுவனத்தில் இணைய விரும்பினால் அவரது தகவல்களை (Resume) tedujobs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இட செய்யவும்...

இந்த வாரம் நடைபெறப்போகும் வாக்-இன் தேர்வில் 2000 பொறியாளர்களை தேர்ந்தெடுக்க விழைகிறது ஐ.பி.எம்.

Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்

வணக்கம்...எனது இந்தி கொள்கை குறித்தான தவறான புரிதலுக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

இந்தியை நான் தாங்கி பிடித்தேன் என்று சொன்னீர்கள்...உண்மைதான்...இந்தி - இந்திய தேசிய மொழி என்ற அளவிலும், இந்தியாவில் - உலகெங்கும் பலகோடிப்பேர் பேசுகிறார்கள் என்பதாலும், தமிழைப்போல அதுவும் ஒரு இனிமையான மொழி என்ற அளவிலும் நான் இந்தியை விரும்புகிறேன்...(ஹிந்தி பாட்டு கேக்க மாட்டீங்களா )

இந்தி எதிப்புக்கும் இந்தி திணிப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...எனக்கு இந்த விஷயம் லேட்டாக புரிந்தாலும் இப்போது தெளிவாகவே உள்ளேன்...

உதாரணம் சொன்னால், தமிழக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கும் ஒருவர், தனது பதவி உரிமை ஆணையில் ஹிந்தியில் கையெழுத்துப்போட்டு, நியமன ஆணையரான இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்...இந்த நடைமுறை இந்த பதிவை எழுதும் ஏப்ரம் 2007 ஆண்டு வரை உள்ளது...

நீங்கள் தமிழராகவே இருந்தாலும் ஹிந்தியில் தான் கையெழுத்திடவேண்டும்...நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பும் நபராகிய இந்திய ஜனாதிபதி மேதகு. ஏ.பி.ஜே அப்துல் கலாமாக இருந்தாலும் நீங்கள் ஹிந்தியில் தான் கையெழுத்திட வேண்டும்...

இதைத்தான் நான் ஹிந்தி திணிப்பு என்று புரிந்துகொண்டேன்...இதை கண்டிப்பாக எதிர்க்கிறேன்...

மற்றபடி,

ஹிந்தியில் பேச பழகுதலுக்கும்
ஸ்டார் ப்ளஸ் சேனலில் சீரியல் பார்ப்பதற்கும்
நமஸ்தே லண்டன் படம் பார்த்து ரசிப்பத்தற்கும் ஹிந்தி திணிப்பு என்று பெயர் வராது என்றூ நினைக்கிறேன்...

தாய் மொழியை மிகவும் நேசிக்கிறேன்...அதே சமயம் பிறமொழியை கற்றுக்கொள்வதினை தடுக்கவேண்டாம் என்று கருதுகிறேன்...என்னைப்பொறுத்தவரை ஜெர்மன், ப்ரெஞ்சு, ஹிந்தி எல்லாம் ஒன்று தான்...என்ன அரைகுறை ஹிந்தி தெரிவதால் ஹிந்தி (மட்டுமே) தெரிந்தவரிடம் ஹிந்தியில் பேசி பானி பூரியில் ஒரு எக்ஸ்ட்ரா வாங்க முடியுது...

ஹிந்தியை யாரும் படிக்காதீங்கடா என்று சொன்ன தமிழக அரசியல் தலைவர்கள் இன்று அதே ஹிந்தி தெரியும் என்பதற்காக தன் பேரனை மத்திய மந்திரி ஆக்கினேன் என்று சொன்னது ஏன் என்ற கவலை சத்தியமாக எனக்கு இல்லை...யார் எப்படிப்போனா எனக்கு என்ன ?

இதுபற்றி சொல்லும்போது, முந்தைய ஒரு பதிவில் முத்து தமிழினி அடிச்ச ஒரு ஷாட் நியாபகம் வந்து மீண்டும் சிரித்தேன்...அவர் சொன்னார், ஹிந்தி தெரிஞ்சா பெரிய ஆளாகலாம்னா ( கொஞ்சம் உளறினது - அப்போ), வட மாநிலத்தவன் ஏன் இங்க வந்து சோன் பப்டி விக்கறான்...!!!!! காமெடியா இல்லை...!!!

இப்போதைய அரசியல்வாதிகளில் இது போன்றதொரு கொள்கையை கொண்டிருப்பது கேப்டன் விஜயகாந்த்...எங்க அம்மா போன எலக்சனில் கேப்டனுக்கு ஓட்டு போட்டுது...ஏம்மா கேப்டனுக்கு ஓட்டு போடறே என்று எவ்ளோ வற்புறுத்தியும் காரணத்தை சொல்லவில்லை...என்னோட ஓட்டை இந்த முறை கேப்டனுக்கு போட்டுடலாம்னு பார்க்கிறேன் ( மீதி பேரை எல்லாம் ஏ.டி.எம்.கேவுக்கு போட வெச்சுரலாம்...எங்க ஏரியாவில எங்கப்பா சொல்லுற ஆளுக்கு தான் ஒட்டு தெரியுமா ஹி ஹி)

கோவியாரே...பதிவு போட்டாச்சு...மக்களே ஒரு பின்னூட்டம் ( சின்னதா) போட்ருங்க )

மத்த மக்கள்ஸ் இந்த விஷயத்தில என்ன நிலைமையில இருக்காங்கன்னு தெரியலை...சர்வேசனை கேட்டா பதில் கிடைக்கும் ( சாமியை இல்லைங்க ) , நம்ம சர்வே Sun !!!!

இவ்ளோ பொறுமையா பதிவை படிச்சதுக்கு நன்றி !!! வர்ட்டுங்களா...

கால்டுவெல் ஐயர்

இராபர்ட் கால்டுவெல் (1814-1891)

உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழக வரலாற்றில் - தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.

கால்டுவெல்லின் வருகை கிறித்தவ மதப்பரப்புப் பணியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் கால்டுவெல் தமிழகத்தில் ஏறத்தாழ 53 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி, வரலாறு, சமூக முன்னேற்றம், சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டதால் அவரின் வரலாறு அனைவராலும் அறியத்தகுந்த வரலாறாக அமைந்துள்ளது.கால்டுவெல் அவர்கள் அயர்லாந்து நாட்டில் உள்ள "கிளாடி' எனும் ஆற்றின்கரையில் அமைந்த சிற்றூரில் பிறந்தவர்(1814). இளமையில் அறிவார்வம் கொண்ட தம் மகனை அழைத்துக் கொண்டு பெற்றோர் தம் தாய்நாடான ஸ்காட்லாந்துக்குச் சென்று "கிளாஸ்கோ' நகரில் வாழ்ந்தனர். 16 ஆண்டுக்குள் ஆங்கில மொழியில் அமைந்த பல இலக்கியங்களைக் கால்டுவெல் கற்றுத் தேர்ந்தார். தம் மகனைக் கவின்கலைக் கல்லூரியில் பெற்றோர் சேர்த்தனர். ஓவியக்கலையைக் கால்டுவெல் கற்றுத்தேர்ந்தாலும் அதனை வாழ்க்கைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை.

கால்டுவெல் தம் இருபதாம் அகவையில் இறைப்பணி செய்வதற்காக இலண்டன் நகரில் அமைந்த சமயத்தொண்டர் சங்கத்தில் சேர்ந்தார். அச்சங்கத்தின் சார்பாகக் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மாணவராகச் சேர்ந்து ஐரோப்பிய மொழிகளில் அமைந்த நூல்களையும் சமய நூல்களையும் கற்றார்.இதன் பயனாக இரண்டு ஆண்டுகளில் இளங்கலைப்பட்டம் பெற்றார். அவ்வாறு படிக்கும்போது கிரேக்கமொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் டேனியல் ஸ்டான்போர்ட் அச்செம்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு நிறைவடையும்படிப் பயிற்றுவித்தார். கால்டுவெல் பெருமகனாருக்கு மொழியியலில் ஆர்வம் உண்டாக்கியது அப்பேராசிரியரின் வகுப்புரைகளே ஆகும்.

இலண்டன் சமயப்பரப்புக் கழகத்தின் சார்பாகச் சமயப் பணிக்கு என 1838ல் "அன்னமேரி' என்னும் கப்பலில் ஏறி இந்தியாவுக்குப் பயணம் செய்தார். கடலில் பயணம் செய்தபோது இவர் ஏறிவந்த கப்பல் மீது பிரெஞ்சு கப்பல் ஒன்று மோதிச் சிதைந்தது. பலர் மடிந்தனர். சிலர் உயிர் பிழைத்தனர். பழுதுற்ற கலத்தைப் "பிளிமத்' என்னும் துறைமுகத்தில் செப்பனிட்டனர். தென்னாப்பிரிக்கா வழியாகக் கப்பல் வரவேண்டியிருந்ததால் நான்கு மாதம் பயணம் செய்து சென்னைக்கு வந்தார். அவ்வாறு வரும்போது சி.பி. பிரெளன் என்னும் குடிமைப்பணி அதிகாரியுடன் நட்புகொண்டார். அவர் முன்பே ஆந்திராவில் பணி புரிந்ததால் தெலுங்கு, வடமொழி அறிந்து இருந்தார். அவர் வழியாகக் கால்டுவெல் அம்மொழிகளைக் கற்றார்.
கடலில் பயணம் செய்தபோது கால்டுவெல்லுக்கு முன்பு இருந்த இருமல் நோய் நீங்கியது. கால்டுவெல் சென்னைக்கு வந்ததும் "துருவர்'எனும் தமிழ்கற்ற அறிஞரைக் கண்டு மகிழ்ந்தார். வின்சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலானவர்கள் பின்னாளில் நண்பர்களாயினர்.சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார். நடந்து செல்லும்போது மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறியலாம் என நினைத்தார். சிதம்பரத்தில் இருந்த நடராசர் கோயிலைக் கண்டு மகிழ்ந்தார். மயிலாடுதுறை வழியாகச் சென்று தரங்கம்பாடியில் சில நாள் தங்கினார். டேனிஷ் மி­ன் செய்யும் பணிகளை அறிந்தார். பின்பு குடந்தை வழியாகத் தஞ்சாவூர் சென்றார். பெரியகோயிலையும் மாராட்டிய மன்னர் அரண்மனையையும் கண்டு மகிழ்ந்தார்.அங்கு வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு உரையாடினார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அழகையும் திருவரங்கச் சிறப்பையும் கண்டு மகிழ்ந்தார். பின்பு நீலமலை சென்றார். அங்கு ஸ்பென்சர் எனும் தந்தையாரைக் கண்டு அவரின் விருந்தினராக ஒரு மாதம் தங்கி இளைப்பாறினார்.

நீலமலையிலிருந்து இறங்கி, கோவை வழியாக மதுரை வந்தார். வரும் வழியில் மக்கள் அவரைப் பலவாறு இழித்தும், பழித்தும் பேசினர். ஒருநாள் நடந்து செல்லும்போது மழைவரத் தொடங்கியது. இரவுப் பொழுதில் தங்கிச்செல்ல நினைத்தார். சத்திரம், சாவடி உண்டா என வினவிய போது அரசின் சத்திரம் உள்ளது எனவும் அது ஆங்கிலேயர்க்கு இல்லை எனவும் கூறினர். மழையில் நனைந்து துன்பப்பட்ட கால்டுவெல்லைக் கண்டு மாட்டுத் தொழுவத்தில் தங்கும்படி சொன்னார்கள். சத்திரத்தில் இடம் கிடைக்காததாலும் மாட்டுத் தொழுவத்தில் தங்க மனம் விருபாததாலும் ஒரு வீட்டின் திண்ணையில் தங்கி இரவுப் பொழுதைக் கழித்தார்.
மதுரை வந்தடைந்த பின்பு திருமங்கலத்தில் சமயத்தொண்டு புரிந்த திரேசியர் அவர்களைக் கண்டு உரையாடினார். பின்பு நெல்லை வழியே பாளையங்கோட்டை சென்றடைந்தார் (நவம்பர் 1841). பின்பு நாசரேத்தில் (நவம்பர் 28) தங்கி இறைவழிபாடு நிகழ்த்தி ஒரு விரிவுரையும் செய்தார்.பின்பு முதலூரில் ஞாயிற்றுக்கிழமை விரிவுரையயான்று நிகழ்த்தினார். அருகில் இருந்த இடையன்குடியைப் பாதை தெரியாமல் நெடுந்தூரம் சுற்றி அடைந்தார். அந்த ஊரே அவர் பணிபுரியும் இடமாகவும், கடைசிக் காலத்தில் நிலைகொள்ளும் இடமாகவும் அமைந்தது.இடையன்குடி என்பது பெரும்பாலும் பனைமரங்கள் நிறைந்த பகுதியாகும். கூரைவீடுகளே மிகுதி. கள்ளியும் முள்ளியும் நிறைந்த பகுதி. அங்குக் கால்டுவெல் குடியிருப்புகளையும் கோயிலையும் உருவாக்கினார். எழுதவும் படிக்கவும் மக்களுக்குக் கற்றுத் தந்தார். அப்பகுதியில் வாழ்ந்த நாடார் இன மக்களைக் கல்வியறிவுப் பெற்றவராக மாற்றினார்.1847ல் அங்கு ஆலயப்பணியைத் தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு 1880-இல் அப்பணி நிறைவுற்றது. சென்னை மாநில ஆளுநராக இருந்த நேப்பியார் அவர்கள் கால்டுவெல்லின் திருப்பணிகளைக் காண விரும்பி இடையன்குடியில் ஒருவாரம் தங்கினார். 500 உருபா அன்பளிப்பாக வழங்கியதையும் அறியமுடிகிறது.

இடையன்குடியில் மூன்று மாதம் இளவேனில் காலமாகவும் 9 மாதம் கடும் வெப்பம் நிறைந்த காலமாகவும் விளங்கும். இடையன்குடியில் வாழ்ந்தபோது வெப்பம் தாளாமல் கால்டுவெல் துன்பப்பட்டுள்ளார். அக்காலங்களில் தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவகசிந்தாமணி, நன்னூல் முதலிய நூல்களைக் கற்றார். உடல் வெப்பம் தணிக்க அருகே உள்ள கடற்கரையில் உவரி என்னும் காயல்பகுதிக்குச் சென்றார். உவரித்துறை பழம்பெருமை வாய்ந்ததை உணர்ந்தார். அங்கிருந்த இளஞ்சுனையில் வெயிற்காலத்தில் தங்கி வாழ்ந்தார். கோடைக் காலங்களில் திருக்குற்றாலம், அசம்புமலை, கொடைக்கானல் மலைகளில் தங்கியிருந்துள்ளார்.

கால்டுவெல் "தமிழில் கிறித்தவ வழிபாட்டு நூல்' உருவாக்கும் குழுக்களில் இடம்பெற்று அப்பணியைச் சிறப்புடன் செய்துள்ளார்.மேலும் கிறித்தவ மறைநூலை மொழிபெயர்க்கும் பன்னிருவர் குழுவில் இடம்பெற்றுத் திறம்படப் பணியாற்றியுள்ளார். கால்டுவெல் தமிழகத்தின் திருநெல்வேலி பற்றி, அயல்நாட்டவரின் குறிப்புகளைக் கொண்டு வரலாற்று நூல் எழுதியுள்ளார். பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளையும் கால்டுவெல் செய்துள்ளார். கொற்கையின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பு அறிந்து மகிழ்ந்தார். மேலும் கொற்கையின் அகழாய்வுப் பணியைத் தம் சொந்த முயற்சியில் செய்துள்ளார். ஆறடிக்குகீழ் மணற்பாறையும், அதன் பிறகு கடற்கரைக் குறுமணலும் கடல்சங்கும் சிப்பிகளும் மூழ்கிக் கிடந்ததை உலகிற்கு வெளிப்படுத்தினார்.இன்றுள்ள கொற்கைக்கு அப்பால் 5 கல்லில் கடல் உள்வாங்கி உள்ளது என்று குறிப்பிட்டார். பழங்காயல் என்னும் ஊரையும் ஆய்வு செய்தார். இவ்வூரும் பண்டைய கடற்கரைத் துறைமுகமாக இருந்திருக்க வேண்டும் என உணர்ந்தார்.

மேலும் மகாவம்சம் முதலான நூல்களின் துணைகொண்டு ஈழத்தமிழக உறவுகளையும் கால்டுவெல் எழுதியுள்ளார்.பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றிய பலகட்டுரைகளை மேல்நாட்டு அறிஞர்கள் எழுதினர். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்துத் தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலைத் தந்தார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனவும் குறிப்பிட்டார். மேலும் வடசொற்களை அகற்றினாலும் தமிழ்மொழி வளம் குன்றாது தழைத்து இனிது வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கால்டுவெல்லின் பணிகளைக் கண்ட கிளாஸ்கோ பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்படுகிறது. அவர்தம் காலத்தில் தொல்காப்பியம் முதலான நூல்கள் பதிப்பிக்கப் படாததால் கால ஆய்வுகள் குறித்த இவர் செய்திகளில் பிழையுள்ளதை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆராய்ச்சிப் பணிகளை மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தம் நூல்களில் வாய்ப்பு அமையும் இடங்களில்எல்லாம் நன்றியுடன் போற்றி மதித்துள்ளார்.""திராவிடம் வடமொழிச் சாற்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பலசொற்கள் தென்சொற்களேயயன்றும், வடமொழியில் பல தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளனவென்றும், முதன்முதல் எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால் நிறுவியவர் கால்டுவெல் கண்காணியரே... இவர் தமிழ்மொழியைச் சிறப்பாய் ஆராய்ந்தது போன்றே மலையாள மொழியைச் சிறப்பாயாராய்ந்தவர் டாக்டர் குண்டட் ஆவர். இவ்விருவர்க்கும் திராவிடவுலகம், விதப்பாய்த் தமிழுலகம் பட்டுள்ள கடன் மாரிக்குப்பட்டுள்ளதேயயனினும் பொருந்தும் ""(ஒப்பியன் மொழிநூல், ப.84), எனவும் "....தமிழ் என்பதன் திரிபே திராவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ்வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய்நோக்கி, திராவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார்.'' (தமிழ்வரலாறு, ப.33) எனவும் "கால்டுவெல் ஐயர் கடைப்பிடித்த கொடிவழி மொழிநூலையே கையாளல் வேண்டும்' (த.இ.வ. ப. 48) எனவும் பாவாணர் குறிப்பிடுவார்.

கால்டுவெல் அவர்கள் 18 மொழிகளைக் கற்றவர். பல்வேறு வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் கற்றவர். சமய அறிவு நிரம்பப்பெற்றவர். எனவே தம் அறிவு முழுமையும் பயன்படுத்தி மொழி நூலையும் வரலாற்று நூலையும் சமய நூலையும் உருவாக்கித் தமிழர் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இவர் இயற்றிய திருநெல்வேலி சரித்திரம் என்னும் நூல் அக்காலத்தில் இருந்த போர்ச்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ்வதற்குச் செய்த முயற்சிகளையயல்லாம் மிகச்சரியாகப் பதிவு செய்துள்ளது.அக்காலத்தில் இருந்த படைத்தளபதிகள், சமயத் தொண்டர்கள் எழுதிய மடல்கள், நூல்கள், குறிப்புகள், வாய்மொழிச் செய்திகள், அகழாய்வுச் செய்திகள் இவற்றைத் துணைக்கொண்டு வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கால்டுவெல் தம் 29ஆம் அகவையில் நாகர்கோவிலில் வாழ்ந்த மால்ட் என்பவரின் மகளான எலிசா (21 அகவை) என்னும் மங்கையை மணந்தார். எலிசா ஆங்கிலமும் தமிழும் நன்கறிந்தவர்.இடையன்குடியில் பெண்கள் கல்விபெற எலிசா பணிபுரிந்தவர். பிணியுற்றவர்களுக்கு மருத்துவம் பார்த்தார்.எலிசா வழியாகக் கால்டுவெல் பேச்சுத் தமிழைக் கற்றார். கால்டுவெல்லுக்கு மூன்று மக்கள் எனவும் நான்கு மக்கள் எனவும் கருத்து வேறுபாடு உண்டு. அம்மக்களுள் ஆடிங்கிதன் (புddஷ்ஐஆமிலிஐ) என்பவர் மருத்துவராகப் பணிபுரிந்தவர். முதல் மகள் திருச்சியில் "வியத்தர்' என்பவரை மணந்தாள். இளைய மகள் "லூயிசா' ஆங்கிலப்படை வீரனை மணந்தாள். எனினும் (28-10-1872இல்) மறைந்தாள்.கால்டுவெல் வாழ்க்கை எளிமையானது.பெரும்பாலும் நடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஊர்களில் கிடைக்கும் காய்கனிகளை உண்டு வாழ்ந்தார். வெயில் கொடுமைக்கு அஞ்சி கூரைவீடுகளில் தங்கியிருப்பார். அமர்ந்து படிப்பார். காலை மாலை உலாவுவார். மூட்டைப்பூச்சிகளுக்கு அஞ்சி இரவில் பனைநாற்கட்டிலில் வீட்டு முற்றத்தில் உறங்குவார். பெரும்பான்மையான நாள்களில் சுற்று வட்டாரத்தில் சமயப்பணி புரிந்துவிட்டு ஏழாம்நாள் இடையன்குடி வருவார். தாம் பணி செய்த பகுதிகளில் 1877ஆம் ஆண்டு ஏற்பட்ட தாதுவருடப் பஞ்சத்தில் வாடிய மக்களுக்குப் பேருதவி செய்தார்.கால்டுவெல் தமிழகத்தில் தங்கியிருந்தபோது மூன்றுமுறை தம் நாடு சென்று வந்துள்ளார். ( 1. 1854-57, 2. 1873-75, 3. 1883-84).

கால்டுவெல் திருநெல்வேலி ஆயராக கி.பி. 1877-இல் திருநிலைப்படுத்தப் பட்டார். 1891 சனவரியில் 31-ஆம் ஆண்டு தம் பணியிலிருந்து ஓய்வுபெற்றுக் கொடைக்கானல் சென்று தங்கியிருந்தார். அக்காலங்களில் கொடைக்கானல் செல்ல சரியான பாதை வசதியில்லை. அம்மை நாயக்கனூரில் இருந்து கடும் பாறை வழியாகச் சென்றார். ஒருநாள் குளிரால் நடுக்கம் கொண்டார். ஏழாம்நாள் நோய் வலுவுற்று 1891 ஆகத்து மாதம் 28-ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இடையன்குடிக்குக் கொண்டுவரப்பட்டு அவர் எடுப்பித்த கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது.

கால்டுவெல் பெருமகனார் தம்மைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ""நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன்; ஸ்காட்லாந்து நாட்டில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். எனினும் என்வாழ்நாளில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியப்பெருநாடும்,அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுவதுமாகக் கவர்ந்துகொண்டதால் நான் இந்தியர்களுள் ஒருவனாயினேன். இந்தியர்களுள் ஒருவராக இருந்தாலும் தமிழர்களின் புதிய வரலாற்றுக்கு மூலநூல் தந்ததால் தமிழ் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் கால்டுவெல் பெயரை நம் உதடுகள் ஒலிக்கும்.

உதவிய நூல்கள் :
1. இரா.பி. சேதுப்பிள்ளை, கால்டுவெல் ஐயர் சரிதம்
2. கா. மீனாட்சிசுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி
3. வாழ்வியற் களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்
4. கால்டுவெல் நூல்கள்
5. பாவாணர் நூல்கள்

Thanks. Mu.Ilangovan

அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

சில நாட்களுக்கு முன் பரபரப்பாக செய்தியில் அடிபட்ட ஒரு விஷயம், ஒரு மீன் மேல அல்லான்னு இயற்கையா அமைஞ்சிருக்குது கல்ப் கண்ட்ரில...ஒரு தொழிலதிபர் பெரிய அமவுண்டு கொடுக்க தயாராக இருந்தும் மீனை வெச்சிருக்க ஓட்டல்காரங்க அதை தர மறுத்திட்டாங்க என்றும் தகவல் கிடைச்சது...

இன்னைக்கு தினத்தந்தியில இன்னோரு மேட்டர் வந்திருக்கு...தமிழ்நாட்டு பஞ்சாயத்து தலைவர் ஒருத்தர் - பேரு பாபுன்னு நினைக்கிறேன்...ஏழு வருஷத்துக்கு முன்னால பெங்களூர்ல வாங்கின டைமண்ட் ஒன்னுல அல்லான்னு இருக்காம்...அதை சென்னையில் வெச்சு ஒரிஜினல் வைரம்தான்னு செக் பண்ணிட்டாராம்...சில முஸ்லிம் பெரியவர்கள் அதனை பல லட்சம் கொடுத்து வாங்க தயாரா இருக்காங்களாம்...ஆனால் ஹிந்துவான அவர் அதனை வைத்து வழிபட்டு வருவாதாக தெரிவித்துள்ளார்...

இப்ப மேட்டர் என்னான்னா "அல்லாவை வழிபடும் இந்து பஞ்சாயத்து தலைவர்" அப்படீன்னு யாரும் பதிவு போடறாங்களா ? இருந்தாலும் ஒரு இத்துப்போனவன், பேரு எழில்னு...http://ezhila.blogspot.com/2007/04/blog-post_13.html இப்படில்லாம் பதிவு போட்டுக்கிட்டிருப்பான்...

அவன் கூட்டாளிக்க ரெண்டு வீனாப்போனவனுங்களை திரட்டி தூக்கிருச்சே...(சடவாயுவையும் / நீலகுண்டனையும் தான் சொல்றேன்) - ஆனா ஒரு சத்தமும் காட்டாம திருடனாட்டம் குந்திக்கினு இருக்கான் ? ஏன் எதிர்த்து ஒரு பதிவு போடவேண்டியது தானே ?

தூக்கனதே தூக்கினீங்க, இந்த மதவாதியையும் தூக்கிருங்க...சுத்த்த்த்த்தமாகிரும்...இல்லைன்னா அடுத்தது பழைய குருடி கதவை திறடின்னு மீண்டு சாதிவெறி, சனாதனம் அப்படீன்னு மதவெறி புடிச்சு அலைவானுங்க...இது எதாவது பதிவு போடும், பிறகு அதுக்கு யாரவது பதில் சொல்றேன்னு கிளம்புவாங்க...அப்படியே சாதி மதம்னு எல்லா கசடுகளும் உள்ளாற பூந்துடும்...

என்ன ரவி நீயுமான்னு கேக்காதீங்க...ஊதற சங்க ஊதித்தான ஆகனும்...

Wednesday, April 25, 2007

தமிழ் இணைய கசடுகள் ஒழிந்தன

தமிழ் இணைய கசடுகள் சில ஒழிந்ததை கொண்டாடும் விதத்தில் இந்த பதிவு...!!! மீதியெல்லாம் உங்களுக்கே தெரியும்...!!!!

அடுத்ததாக சடாயுவின் பதிவில் இப்படி இருந்த ஒரு வரிக்கு நான் போட்ட பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது...


///பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான்.///

என் நன்பர் வரவணையான் செந்திலை ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் மிஸ்டர் ஜடாயு.

அந்த பதிவுக்கு பதிலைக்கானோம்...அதை விடுத்து ரவுடி என்று நீங்கள் குறிப்பிட்டது உங்கள் நேர்மையற்ற செயலை குறிக்கிறது. நீங்கள் ஏன் அவ்வாறு எழுதி இருக்கிறீர்கள் என்று விளக்கம் தரமுடியுமா ?

ரவுடி என்றால் அவர் என்ன கடைகளில் மாமூல் வசூலித்து வயிறு வளர்க்கிறாரா ? அல்லது கூலி வாங்கிக்கொண்டு கொலைத்தொழில் செய்கிறாரா ?

தயவு செய்து விளக்கவும்...!!!

சடாயு பதில் சொல்வாரா ? இணையத்தில் மட்டுமே கருத்துப்பரிமாற்றத்தின் மூலம் அறிந்த ஒரு நபரை ரவுடி என்று குறிப்பது எந்த வகையான கீழ்த்தர எண்ணம் ? இவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள் ?



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Friday, April 20, 2007

திவ்யா to அர்ச்சனா

இன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...

ஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...

என்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ?) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...

நானும் திவ்யாவும் ஒரே ஆபீஸ்ல தான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம்...ரொம்ப திக் ப்ரண்ஸ்...திவ்யாவை பற்றி சொல்லனும்னா அவளோட குண்டு கண்களை சொல்றதா, இல்லை கழுத்தில் புரளும் கருமையான முடியை சொல்றதா, இல்லை எப்போதும் புன்முறுவலோட பேசும் அவளோட குணத்தை சொல்றதா...இந்த புன்முறுவலே அவளுக்கு தனி அழகுதான்...என்னோட ஆளை பற்றி அதிகமா சொல்ல மாட்டேன் போங்க...விஷயத்துக்கு வரேன்...அவளுக்கு ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு வேற ட்ரை பண்ண ஆரம்பிச்சா...ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும்போது அவளுக்கு வேற பெரிய கம்பெனி கிடைச்சு அதுக்கு மாறிட்டா...நானும் ட்ரைபண்ணிக்கிட்டு தான் இருக்கேன்....லாஸ்ட் இயர் திவ்யா போன கம்பெனியிலேயே ஜாய்ண் பண்ணனும்னு வெறியா ட்ரை பண்ணேன்...ஆனா முடியல...அவளோட இண்டர்வியூ மாதிரி என்னோடது சக்ஸஸ் ஆகல...ஊத்திக்கிச்சு...அதுக்கு நான் கொஞ்சம் மெண்டலி அப்செட் ஆனதும் ஒரு காரணம்...

மொதல்ல நான் ஏன் திவ்யா பின்னால ஓடுறேன்னு தெரிஞ்சுங்கோங்களேன்...ஆமாம் இதுல என்ன கம்ப சூத்திரம் (இது டிஸ்க்ரீட் மேக்ஸ விட பெரிய சப்ஜெட்டா - எல்லோரும் சொல்றாங்க, நானும் சொல்றேன், நீங்க பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்) அப்படீன்னு கேக்கறீங்களா ? அவளை லாஸ்ட் இயர் ஏப்ரல்ல நான் ப்ரபோஸ் பண்ணேன்...மொதல்ல பிப்ரவரி 14த் தான் பண்ணலாம்னு நினைச்சேன்...இருந்தாலும் அப்படியே தயங்கி தயங்கி ஏப்ரல் ஆகிருச்சு...

ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல மணிக்கணக்கா பேசுவோம்...ஏர்டெல் டூ ஏர்டெல் ப்ரீ கார்டு வாங்கி போன் சூடாக சூடாக பேசுவோம்...கே டிவியில பார்த்த அரதப்பழசு படம், சினிமா கிசு கிசு, ஜாவா அப்படீன்னு பேச்சு மணிக்கணக்கா நீளும்...அவளுக்கு அவளோட டாடின்னா உசுரு...அது தெரிஞ்சதுல இருந்து நானும் என்னோட டாடின்னா உசுருன்னு சொல்லிக்கிட்டேன்...அவளுக்கு ஜாஸ் மியூசிக் பிடிக்கும்...நானும் என்னை நானே ஜாஸ் மியூசிக்கு கண்வர்ட் ஆக்கிக்கிட்டேன்...அப்படி எல்லாம் அவளுக்கு பிடிச்சமாதிரி தான் நடந்துக்கிட்டேன்...

ஆனா அவளை ப்ரபோஸ் பண்ணப்போ கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு 'வேணாம்' குமார்னு ஒத்தை வார்த்தையில சொல்லிட்டா...நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன்...காரணம் ஒன்னும் பெரிசா அவளால சொல்ல முடியல...இண்டர் காஸ்ட் மாரேஜ் எல்லாம் எங்க பேமிலியில ஒத்துக்கமாட்டாங்க குமார் அப்படீன்னா...அவளோட கணவன் எப்படி இருக்கனும்னு சில கனவுகள் இருக்காம் அவளுக்கு...அதுக்கு நான் சூட்டாக மாட்டேன் அப்படீன்னு சொன்னா...நான் விடலை...எப்படி எல்லாம் இருந்தா உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்றெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுப்பார்த்தேன்...அவ ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லிட்டா...கடைசியா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனப்புறம், நான் கொஞ்சம் யோசிக்கனும் அப்படீன்னா...

ரெண்டு மூனு நாள் வேலையே ஓடலை...அப்புறம் கேண்டீனுக்கு போய் சாப்டுட்டு வந்தப்புறம் கொஞ்ச நேரம் பார்க் பக்கமா இருந்தா...பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்...

திவ்யா...

ம்...சொல்லுங்க குமார்...

என்ன யோசிச்சாச்ச...என்னால சாப்பிட முடியல, தூங்க முடியல திவ்யா...ப்ளீஸ்...சொல்லும்மா...

குமார்...எனக்கு யோசிக்க டைம் வேனும்னு சொன்னேன்...ரெண்டு மூனு நாள்ல சொல்ல முடியாது குமார்...

வேற எவ்ளோ நாள் வேனும் திவ்யா...

லுக்..இது என்னோட லைப் பிரச்சினை...இதுல நான் திங்க் பண்ணி தான் டிஸிஸன் எடுக்க முடியும்...

ஓக்கே ஓக்கே...திங் பண்ணி சொல்லும்மா...அதுல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...ஆனா உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்...

குமார்...நீ எனக்கு நல்ல ப்ரண்ட்...ஒன்னை லூஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல...இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ப்ரண்ஷிப்பை விட லைப் தான் முக்கியம்னு நாம டிசிஷன் எடுக்கவேண்டியிருக்கும்...பிக்காஸ்........

திவ்யா...நீ எடுக்கற எந்த முடிவும் எனக்கு ஓக்கே தான்...நான் உன்னை கண்டிப்பா கட்டாயப்படுத்தல...ஆனா என்னோட மனசுல இருக்க ஆசையை சொல்லக்கூடாதுன்னு நீ சொல்லலியே...

ஓக்கே...ஒனக்கு ஒரு விஷயம் சொல்லனும்...நாம ரெண்டு பேரும் அட்டண் பண்ண இண்டர்வியூ ரிசல்ட் கண்ஸல்டண்ட் மெயில் பண்ணியிருக்கா...நான் செலக்டடாம்...உன்னோட ரெஸ்யூமை ஹோல்டு ல போட்டுட்டாங்களாம்...15 டேய்ஸ்ல ஜாய்ன் பண்ணச்சொல்லி ஆபர் அனுச்சிட்டாங்க...நான் கண்டிப்பா ஜாய்ண் பன்றதா சொல்லிட்டேன்....என்னோட மனசு சரியில்ல...எனக்கு இப்போ ஒரு சேஞ்ச் வேணும் குமார்...

திவ்யா...உன்னோட மனசு சரியில்லாததுக்கு நான் காரணமா ? ப்ளீஸ் திவ்யா...என்னால இதுக்கு மேல ரெஸிஸ்ட் பண்ண முடியல...

நோ நோ...எனக்கு இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்...புது கம்பெனியில சூப்பர் ப்ராஜக்ட்...அருமையான சேலரி...கண்டிப்பா நல்லா இருக்கும் குமார்..டாடி கூட ஓக்கே சொல்லிட்டார்...எனக்கு டெண் டேய்ஸ் லீவ் இருக்கறதால நான் நெக்ஸ்ட் வீக் போயிருவேன் குமார்...

அப்படியே கண்கள் கலங்க ஆரம்பித்தது எனக்கு...

சீ..என்ன சின்ன குழந்தை மாதிரி அழற குமார்...நான் ஒன்னும் ரிஜக்ட் பண்ணல்லியே உன்னோட ப்ரபோஸலை...ஒரு ஒன் இயர் போகட்டும்...பிறகு சொல்றேன்...

என்னாது ஒன் இயரா ?

என்ன திவ்யா சொல்ற ?

எஸ் குமார்...நான் புது கம்பெனியில ஜாயின் பன்றேன்..நீயும் வேற நல்ல கம்பெனி ட்ரை பண்ணு...வீட்டுக்கு எப்போதும் போல வா...போன் பண்னு...நெக்ஸ்ட் இயர் கேளு...சப்போஸ் எனக்கு ஓக்கேன்னா சரி...இல்லைன்னா நம்ம எப்போதும்போல ப்ரன்ஸாவே இருக்கலாம்...

சரி திவ்யா...இருந்தாலும் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா ?

ப்ளீஸ் குமார்..இந்த விஷயம் இதோட விடுவோமே...ஹாரி பாட்டர் புக் வாங்கித்தரச்சொன்னனே என்ன ஆச்சு...

நேத்தே வாங்கிட்டேன்பா...உன்னோட ட்ராயர்ல வெச்சிருக்கேன்...எடுத்துக்கோ...

தேங்ஸ் குமார்....நான் கிளம்பறேன்...டைம் ஆச்சு...

இவ்ளோதான் எங்களோட உரையாடல் நடந்தது...அதுக்கப்புறம் எப்போ போன்பண்ணாலும் நான் பிஸி...அப்புறம் பேசறேன்...அப்படீனே சொல்றா...நானும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் போன் பன்றதையும் விட்டுட்டேன்...அவங்க வீட்டுக்கு மட்டும் சண்டேஸ்ல போவேன்...ஆனா அவ பெரும்பாலும் வீட்டுக்கே வரதில்லயாம்...புதுக்கம்பெனியில அக்காமடேஷன் இருக்காம்...நிறைய வேலைன்னு அங்கயே தங்கிடறாளாம்...யூ.எஸ். ஹெச் ஒன் பி வேற ப்ரபோஸ் பண்றாங்களாம் கம்பெனியில.....என்று அவங்க அம்மா ஒரு முறை போன்ல சொன்னப்ப கொஞ்சம் சுர்ர்ருனு இருந்தது...

இன்னையோட எங்களோட (என்னோட) ப்ரபோஸலுக்கு ஒரு வயசாச்சு...

சரி இன்னைக்கு எப்படியும் அவளோட பேசிடலாம் என்று அவள் அலுவலக நெம்பருக்கு போன் அடித்தேன்...

ரிங் ரிங்...!!

நாலு ரிங்குக்கு பிறகு வாய்ஸ் மெயில் போனது.....

அட...வாய்ஸ் மெயில் பாக்ஸ் க்ளீயர் ஆகி இருக்குப்பா...

ப்ளீஸ் லீவ் எ மெஸேஜ் ஆப்டர் த பீப்...அப்படீன்னு ஒரு பெண் குரல்...

பீப்........

நான் ஹ்ஹ...என்று ஒருமுறை கனைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்...

ஹாய் திவ்யா...எப்போதும்போல உன்னோட வாய்ஸ் மெயில் புல்லா இருக்கும்னு நெனச்சேன்...பட் க்ளீயர் பண்ணிட்டே போலிருக்கே....சே...நான் சொல்ல வந்தது அது இல்லை...ஆக்சுவலி....நான் சொல்ல வந்தது நம்மோட லவ் மேட்டர் பத்தி...நானும் இந்த ஒன் இயரா உனக்காக வெயிட் பண்ணி பார்த்தேன்...நீ பதில் சொல்றமாதிரி தெரியல...நம்ம ஆபீஸ்ல - அதாவது உன்னோட பழைய ஆபீஸ்ல...புதுசா ஜாய்ன் பண்ணி இருக்க அர்ச்சனா எனக்கு தகுந்த மாதிரி இருப்பான்னு தோனுது....நெறைய யோசிச்சு அவளை ப்ரபோஸ் பன்னலாம்னு பாக்கறேன்...இனிமே நான் உனக்கு கால் பண்ண மாட்டேன்...உன்னை டிஸ்டப் பண்ணதுக்கு சாரி...ஹேவ் அ நைஸ் டைம் திவ்யா...பை....

Thursday, April 19, 2007

என்னைய வெச்சு காமெடி கீமடி பண்ணலியே - சிறுகதை

இன்னையோட திவ்யாவை ப்ரபோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு...அவளோட வாய்ஸ கேக்கலாம்னு அவளோட ஆபீஸ் நம்பருக்கு போன் போட்டேன்..வழக்கம்போல பிஸி...வாய்ஸ் மெயில் போகுது...வாய்ஸ் மெயில் கொடுக்க முடியாதுன்னு ஒரு அறிவிப்பை கொடுத்துட்டு ஆப்பரேட்டருக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது ஆட்டோமேட்டிக்கா...அவளோட வாய்ஸ் மெயில் பாக்ஸத்தான் நான் இந்த ஒரு வருஷத்துல நிரப்பிட்டனே...ம்ம்ம்ம்...

ஆங்...இன்னோரு விஷயம்...இந்த ஒரு வருஷத்துல அவளை ரெண்டு மூனுமுறை தான் பார்த்திருக்கேன்...ஒரு நாலஞ்சு முறைதான் போன்ல பேசியிருக்கேன்...என்ன குழப்பமா இருக்கா...மொதல்ல அப்படித்தான் இருக்கும்...என்னோட கதையை கொஞ்சம் பொறுமையா கேட்டீங்கன்னா அப்புறம் குழம்ப மாட்டீங்க...

என்னோட பேரு குமார்....திரைகடல் ஓடி திரவியம் தேடுன்னு ஒரு பழமொழி இருக்கில்ல...(திரவியம்னா ஏதாவது லிக்விடா ?) அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கில்ல...ஐ.டி ஜாப் தேடி பெங்களூர் வந்து, ஜாவா ப்ரோக்கிராமரா ஒரு கம்பெனியில சேர்ந்து மூனு வருஷமாச்சு...கிராமத்துல அப்பா அம்மா, ஒரு தங்கச்சி....ப்ளஸ் டூ படிக்கறா...இந்த வருஷம் பப்ளிக்...அதை விடுங்க, அது அவ்ளோ இண்டரஸ்டிங்கா இருக்காது...

நானும் திவ்யாவும் ஒரே ஆபீஸ்ல தான் ரெண்டு வருஷம் வேலை பார்த்தோம்...ரொம்ப திக் ப்ரண்ஸ்...திவ்யாவை பற்றி சொல்லனும்னா அவளோட குண்டு கண்களை சொல்றதா, இல்லை கழுத்தில் புரளும் கருமையான முடியை சொல்றதா, இல்லை எப்போதும் புன்முறுவலோட பேசும் அவளோட குணத்தை சொல்றதா...இந்த புன்முறுவலே அவளுக்கு தனி அழகுதான்...என்னோட ஆளை பற்றி அதிகமா சொல்ல மாட்டேன் போங்க...விஷயத்துக்கு வரேன்...அவளுக்கு ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு வேற ட்ரை பண்ண ஆரம்பிச்சா...ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும்போது அவளுக்கு வேற பெரிய கம்பெனி கிடைச்சு அதுக்கு மாறிட்டா...நானும் ட்ரைபண்ணிக்கிட்டு தான் இருக்கேன்....லாஸ்ட் இயர் திவ்யா போன கம்பெனியிலேயே ஜாய்ண் பண்ணனும்னு வெறியா ட்ரை பண்ணேன்...ஆனா முடியல...அவளோட இண்டர்வியூ மாதிரி என்னோடது சக்ஸஸ் ஆகல...ஊத்திக்கிச்சு...அதுக்கு நான் கொஞ்சம் மெண்டலி அப்செட் ஆனதும் ஒரு காரணம்...

மொதல்ல நான் ஏன் திவ்யா பின்னால ஓடுறேன்னு தெரிஞ்சுங்கோங்களேன்...ஆமாம் இதுல என்ன கம்ப சூத்திரம் (இது டிஸ்க்ரீட் மேக்ஸ விட பெரிய சப்ஜெட்டா - எல்லோரும் சொல்றாங்க, நானும் சொல்றேன், நீங்க பெருசா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்) அப்படீன்னு கேக்கறீங்களா ? அவளை லாஸ்ட் இயர் ஏப்ரல்ல நான் ப்ரபோஸ் பண்ணேன்...மொதல்ல பிப்ரவரி 14த் தான் பண்ணலாம்னு நினைச்சேன்...இருந்தாலும் அப்படியே தயங்கி தயங்கி ஏப்ரல் ஆகிருச்சு...

ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னால ரெண்டு பேரும் போன்ல மணிக்கணக்கா பேசுவோம்...ஏர்டெல் டூ ஏர்டெல் ப்ரீ கார்டு வாங்கி போன் சூடாக சூடாக பேசுவோம்...கே டிவியில பார்த்த அரதப்பழசு படம், சினிமா கிசு கிசு, ஜாவா அப்படீன்னு பேச்சு மணிக்கணக்கா நீளும்...அவளுக்கு அவளோட டாடின்னா உசுரு...அது தெரிஞ்சதுல இருந்து நானும் என்னோட டாடின்னா உசுருன்னு சொல்லிக்கிட்டேன்...அவளுக்கு ஜாஸ் மியூசிக் பிடிக்கும்...நானும் என்னை நானே ஜாஸ் மியூசிக்கு கண்வர்ட் ஆக்கிக்கிட்டேன்...அப்படி எல்லாம் அவளுக்கு பிடிச்சமாதிரி தான் நடந்துக்கிட்டேன்...

ஆனா அவளை ப்ரபோஸ் பண்ணப்போ கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு 'வேணாம்' குமார்னு ஒத்தை வார்த்தையில சொல்லிட்டா...நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தேன்...காரணம் ஒன்னும் பெரிசா அவளால சொல்ல முடியல...இண்டர் காஸ்ட் மாரேஜ் எல்லாம் எங்க பேமிலியில ஒத்துக்கமாட்டாங்க குமார் அப்படீன்னா...அவளோட கணவன் எப்படி இருக்கனும்னு சில கனவுகள் இருக்காம் அவளுக்கு...அதுக்கு நான் சூட்டாக மாட்டேன் அப்படீன்னு சொன்னா...நான் விடலை...எப்படி எல்லாம் இருந்தா உன்னோட எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்கும் என்றெல்லாம் நோண்டி நோண்டி கேட்டுப்பார்த்தேன்...அவ ஸ்ட்ரிக்டா 'நோ' சொல்லிட்டா...கடைசியா கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சுனப்புறம், நான் கொஞ்சம் யோசிக்கனும் அப்படீன்னா...

ரெண்டு மூனு நாள் வேலையே ஓடலை...அப்புறம் கேண்டீனுக்கு போய் சாப்டுட்டு வந்தப்புறம் கொஞ்ச நேரம் பார்க் பக்கமா இருந்தா...பக்கத்துல கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தேன்...

திவ்யா...

ம்...சொல்லுங்க குமார்...

என்ன யோசிச்சாச்ச...என்னால சாப்பிட முடியல, தூங்க முடியல திவ்யா...ப்ளீஸ்...சொல்லும்மா...

குமார்...எனக்கு யோசிக்க டைம் வேனும்னு சொன்னேன்...ரெண்டு மூனு நாள்ல சொல்ல முடியாது குமார்...

வேற எவ்ளோ நாள் வேனும் திவ்யா...

லுக்..இது என்னோட லைப் பிரச்சினை...இதுல நான் திங்க் பண்ணி தான் டிஸிஸன் எடுக்க முடியும்...

ஓக்கே ஓக்கே...திங் பண்ணி சொல்லும்மா...அதுல எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல...ஆனா உனக்காக நான் வெயிட் பண்ணிக்கிட்டிருப்பேன்...

குமார்...நீ எனக்கு நல்ல ப்ரண்ட்...ஒன்னை லூஸ் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல...இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் ப்ரண்ஷிப்பை விட லைப் தான் முக்கியம்னு நாம டிசிஷன் எடுக்கவேண்டியிருக்கும்...பிக்காஸ்........

திவ்யா...நீ எடுக்கற எந்த முடிவும் எனக்கு ஓக்கே தான்...நான் உன்னை கண்டிப்பா கட்டாயப்படுத்தல...ஆனா என்னோட மனசுல இருக்க ஆசையை சொல்லக்கூடாதுன்னு நீ சொல்லலியே...

ஓக்கே...ஒனக்கு ஒரு விஷயம் சொல்லனும்...நாம ரெண்டு பேரும் அட்டண் பண்ண இண்டர்வியூ ரிசல்ட் கண்ஸல்டண்ட் மெயில் பண்ணியிருக்கா...நான் செலக்டடாம்...உன்னோட ரெஸ்யூமை ஹோல்டு ல போட்டுட்டாங்களாம்...15 டேய்ஸ்ல ஜாய்ன் பண்ணச்சொல்லி ஆபர் அனுச்சிட்டாங்க...நான் கண்டிப்பா ஜாய்ண் பன்றதா சொல்லிட்டேன்....என்னோட மனசு சரியில்ல...எனக்கு இப்போ ஒரு சேஞ்ச் வேணும் குமார்...

திவ்யா...உன்னோட மனசு சரியில்லாததுக்கு நான் காரணமா ? ப்ளீஸ் திவ்யா...என்னால இதுக்கு மேல ரெஸிஸ்ட் பண்ண முடியல...

நோ நோ...எனக்கு இந்த ப்ராஜக்ட் பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்...புது கம்பெனியில சூப்பர் ப்ராஜக்ட்...அருமையான சேலரி...கண்டிப்பா நல்லா இருக்கும் குமார்..டாடி கூட ஓக்கே சொல்லிட்டார்...எனக்கு டெண் டேய்ஸ் லீவ் இருக்கறதால நான் நெக்ஸ்ட் வீக் போயிருவேன் குமார்...

அப்படியே கண்கள் கலங்க ஆரம்பித்தது எனக்கு...

சீ..என்ன சின்ன குழந்தை மாதிரி அழற குமார்...நான் ஒன்னும் ரிஜக்ட் பண்ணல்லியே உன்னோட ப்ரபோஸலை...ஒரு ஒன் இயர் போகட்டும்...பிறகு சொல்றேன்...

என்னாது ஒன் இயரா ?

என்ன திவ்யா சொல்ற ?

எஸ் குமார்...நான் புது கம்பெனியில ஜாயின் பன்றேன்..நீயும் வேற நல்ல கம்பெனி ட்ரை பண்ணு...வீட்டுக்கு எப்போதும் போல வா...போன் பண்னு...நெக்ஸ்ட் இயர் கேளு...சப்போஸ் எனக்கு ஓக்கேன்னா சரி...இல்லைன்னா நம்ம எப்போதும்போல ப்ரன்ஸாவே இருக்கலாம்...

சரி திவ்யா...இருந்தாலும் நான் இவ்ளோ நாள் வெயிட் பண்ணனுமா ?

ப்ளீஸ் குமார்..இந்த விஷயம் இதோட விடுவோமே...ஹாரி பாட்டர் புக் வாங்கித்தரச்சொன்னனே என்ன ஆச்சு...

நேத்தே வாங்கிட்டேன்பா...உன்னோட ட்ராயர்ல வெச்சிருக்கேன்...எடுத்துக்கோ...

தேங்ஸ் குமார்....நான் கிளம்பறேன்...டைம் ஆச்சு...

இவ்ளோதான் எங்களோட உரையாடல் நடந்தது...அதுக்கப்புறம் எப்போ போன்பண்ணாலும் நான் பிஸி...அப்புறம் பேசறேன்...அப்படீனே சொல்றா...நானும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்புறம் போன் பன்றதையும் விட்டுட்டேன்...அவங்க வீட்டுக்கு மட்டும் சண்டேஸ்ல போவேன்...ஆனா அவ பெரும்பாலும் வீட்டுக்கே வரதில்லயாம்...புதுக்கம்பெனியில அக்காமடேஷன் இருக்காம்...நிறைய வேலைன்னு அங்கயே தங்கிடறாளாம்...யூ.எஸ். ஹெச் ஒன் பி வேற ப்ரபோஸ் பண்றாங்களாம் கம்பெனியில.....என்று அவங்க அம்மா ஒரு முறை போன்ல சொன்னப்ப கொஞ்சம் சுர்ர்ருனு இருந்தது...

இன்னையோட எங்களோட (என்னோட) ப்ரபோஸலுக்கு ஒரு வயசாச்சு...

சரி இன்னைக்கு எப்படியும் அவளோட பேசிடலாம் என்று அவள் அலுவலக நெம்பருக்கு போன் அடித்தேன்...

ரிங் ரிங்...!!

நாலு ரிங்குக்கு பிறகு வாய்ஸ் மெயில் போனது.....

மக்களே...இந்த கதையில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட்...முடிவை நீங்களே கணியுங்களேன்...சரியான முடிவை எடுத்து பதிவில் சேர்த்து கதையை கம்ப்ளீட் செய்கிறேன்...முடிவு ரெண்டு லைனிலும் இருக்கலாம்...ரெண்டு பாராவிலும் இருக்கலாம்...சரியான முடிவு எதுவும் வரலைன்னா நானே எழுதிடுறேன்...

Wednesday, April 11, 2007

சுடர் : கைசேர்ந்தது....

சுடர் ஏற்றும்படி பணித்த அனுவுக்கு நன்றி...அய்யா ஞானவெட்டியான் கேள்விகளுக்கு எப்படியோ வெற்றிகரமாக பதிலளித்துவிட்டு, என்னை தாளித்துவிட்டார்...

கண்டிப்பாக நேரத்தை செலவிட்டு எழுதவேண்டிய சீரியஸ் மேட்டர்களை கேள்விகளாக தந்துவிட்டார்...இருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே வேலைவாய்ப்பு கல்வி மலர்ல போட்டிடலாம் போல இருக்கு கேள்விகள்...நல்ல கேள்விகளை கேட்டதுக்கு முதலில் நன்றி....

1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?

புதிய பணி வாய்ப்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றன...2007 ஆம் ஆண்டுக்கான IT மற்றும் ITES (IT Enabled Services) - தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறையின் வளர்ச்சி 31 சதவீதமாக இருக்கும் என்று நாஸ்காம் சர்வே தெரிவிக்கிறது...

ஆனால் இவை பரந்துபட்ட அளவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அதிக அளவில் இருக்கிறது...அதாவது பி.பி.ஓ அல்லது கால்செண்டர் ஆகிய இரண்டையும் சேர்த்துத்தான் மொத்த வளர்ச்சியை கணக்கில் கொள்கிறார்கள்...

இளம்பொறியாளர்களை விட அனுபவம் வாய்ந்தவர்களின் தேவைப்பாடு அதிகம் இருப்பதை காண்கிறேன்...

சேவைத்துறையில் (Software Service Industry) உள்ள நிறுவனங்களான டி.சி.எஸ் / இன்போஸிஸ் / விப்ரோ / சத்யம் / ஹெச்.சி.எல் / காக்னிஸண்ட் போன்றவையின் அனுபவம் வாய்ந்த பணியாளர் தேவை அதிகமாக உள்ளது...மேலும் இவர்கள் சேவைத்துறையிலும் கால்வைத்துள்ளதால் கடந்த மூன்றாண்டுகளில் Campus / Offcampus போன்றவற்றில் தேர்வாகாதவர்கள் ஏதாவது (BPO / CC போன்றவையாக இருந்தாலும் )ஒரு பணியில் உள்ளே நுழையும் நிகழ்வு மிக அதிகமாக உள்ளது...

மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட Attrition கணக்கீடுகள், அனுபவம் வாய்ந்தவர்களை விட புதிதாக பணியில் சேர்ந்த இளம்பொறியாளர்களின் விலகல் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது...இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்..

மேலும் TCS / WIPRO போன்ற நிறுவனங்கள் B.Sc / BCA முடித்தவர்களை பணிக்கு சேர்ப்பதில் பல காரணங்களுக்காக ஆர்வம் காட்டுகின்றன...அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...

இப்படி பல இருக்கலாம்களை சொல்லி வரலாம் தான்...இருப்பினும் நிறுவனங்கள் இளம்பொறியாளர் தேர்வுகளை Off Campus ஆக நடத்துவதில் பல நிர்வாக சிக்கல்கள் குறைவதை காண்கின்றன, அதனால் Off Campus இல் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று மனிதவள துறையில் பணிபுரியும் ஒரு தோழி கூறுகிறார்...

2. E-lanes வகை வேலைகள் தமிழர்கள் எந்த அளவு பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். நடைமுறையில் இந்த வகை வேலைகளின் எதிர்காலம் மற்றும் வெற்றி சாத்தியகூறுகள் என்ன?

முதலில் இந்த கேள்வி ஒரு சிலருக்கு புரியாமல் போய்விடக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு...அதனை முதலில் தடுப்போம்...ELance / GetaFreelancer.com போன்றவை இணையத்தில் சிறிய / நடுத்தர ப்ராஜக்டுகளை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்புடைய தளங்கள்..

இதன்மூலம் 30 $ முதல் 5000 டாலர் வரையான ப்ராஜக்டுகளை பெறலாம்...

இந்த வகையிலான ப்ராஜக்டுகளை வெற்றி பெறுவதிலும் அவற்றை சிறப்பாக செய்து முடிப்பதிலும் இந்தியர்கள் இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள்...

உதாரணமாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்மணி, கொல்கத்தாவில் இருந்து ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து லோகோ டிசைன் ப்ராஜக்டுகளை முடிக்கிறார்...அவர் பெறும் வருமானம் ஒரு நாளைக்கு 500 அமெரிக்க டாலர்களுக்கு மேல்...நம்ப கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை...

2003 - 2004 ஆண்டு பல ப்ராஜக்டுகள் செய்துள்ளேன்...கடந்த ஆண்டு சில ப்ராஜக்டுகள் எடுத்தேன்...பணிச்சுமை காரணமாக ப்ராஜக்டுகள் எடுப்பதில்லை என்று கடந்த ஆண்டு மத்தியில் முடிவு செய்தேன்...

எனக்கு தெரிந்து அமெரிக்க / ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் இதில் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள்...நம்மவர்கள் அதிகம் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணம் விழிப்புணர்ச்சி இன்மையே...

மேலும் பண பரிமாற்றத்தில் உள்ள சில பிரச்சினைகளும் நம்மவர்கள் இது போன்ற ப்ராஜக்டுகளில் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருந்தும் ஈடுபடுவதில்லை...

விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும், மா.சிவக்குமார் மூலமாக தமிழ் கம்பியூட்டர் போன்ற வெகுஜன ஊடகங்களுக்கு கட்டுரைகள் அனுப்பவேண்டும் என்று நினைத்திருக்கிறேன், செயல்படத்தான் நேரமின்மை தடைக்கல்லாக இருக்கிறது...

3. நாஸ்காம் போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் குடுத்துள்ள அறிக்கையில் 25% மாணவர்கள் கூட வேலைக்கு தகுதியற்றவர்கள் என கூறியுள்ளது. இது குறித்து தங்களின் சொந்த கருத்து மற்றும் சொந்த அனுபவம் என்ன?

நாஸ்காம் கூறியது ஒரு வகையில் சரிதான்...இதற்கு காரணம் நமது கல்வி முறை...நான் எட்டு முறை தவறிய டிஸ்க்ரிட் மேத்ஸ் என்ற கல்லூரிப்பாடத்தை இந்த 7 ஆண்டு கணிணி துறை பணியில் ஒரு முறை கூட நான் பயன்படுத்தியதில்லை...

அந்த பாடத்தை வடிவமைத்தவர் மீது ஆசிட் ஊற்ற வேண்டும் போல் கொலைவெறி உள்ளது...(கிலியாக வேண்டாம், ப்ரீயா விடுங்க, அட்லீஸ்ட் பினாயில் ஊத்திடலாம்)

ஆனால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நமக்கே உரிய கடின உழைப்பின் மூலம் நம் மாணவர்கள் சாதிப்பதை கண் கூடாக அதே நாஸ்காம் கண்டுள்ளது...அதன் தலைவர் இந்த கருத்தை ஒரு முறை தெரிவித்தார்...

என்னுடைய நன்பர்கள் சிலர் முன் அனுபவம் இல்லாமல் நிறுவனங்களில் என்னுடைய முயற்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் ( சிறு கயமை - கண்டுக்காதீங்க), ஆனால் பணியில் இணைந்த பிறகு IIT / REC போன்ற நிறுவனங்களில் படித்து, மெரிட்டில் கேம்ப்ஸ் தேர்வாகி பணியில் இணைந்துள்ள சக ஊழியருக்கு சற்றும் சளைக்காமல் அனாயாசமாக பணியில் சிறந்து விளங்குவதை காணும்போது "தமிழன் சளைத்தவன் இல்லையடா" என்று தோன்றும்...

4. இந்த கால இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்த பின்பு பொருளாதாரத்தை எதிர்காலத்திற்காக சேர்ப்பவர்கள் அதிகமா? அல்லது ஆடம்பரத்தில் மூழ்கி விடுகிறார்களா?

பெரும்பான்மை இளைஞர்கள் ஆடம்பரத்தில் மூழ்கிவிடுகிறார்கள் என்பது உண்மை...இந்த ஆடம்பரம் "தேவை" என்ற விதத்தில் வந்து சொல்லாமல் கொள்ளாமல் பாக்கெட்டை கரைத்துவிடும்...

பெரும்பாலானவர்கள் சேமிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்...

ஆடம்பரம் என்று சொன்னால், அடுத்தவன் ஒரு Hi-End மொமைல் வைத்துள்ளான்..இருபதாயிரம் ரூபாய்...மல்ட்டிமீடியா உள்ளது...ஆக அது போன்ற ஒரு போன் வாங்கவில்லை என்றால் Out Of Date ஆகி விடுவோம் என்ற எண்ணம் EMI கட்டியாவது அப்படி ஒரு போன் வாங்கிவிடலாம் என்று கிளம்பிவிடுகிறார்கள்...

க்ரெடிட் கார்டுக்கு தேவையில்லாத வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்...

எனக்கு கிடைத்த தகவல்படி கொரியாவில் இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி, க்ரெடிட் கார்டுகளுக்கு அதிக செலவு செய்து 35 வயதில் தான் திருமணம் செய்ய பெண்ணை ப்ரொபோஸ் செய்கிறார்களாம்...

ஒரு எளிமையான உதாரணம் சொன்னால், Enigma என்று ஒரு பப் (பார்) உண்டு இங்கே...அந்த பப்பில் ஒரு பியர் 300 ருபாய்...ஆனால் அதே பியர் வேறு சில பாரில் 100 ரூபாய்...அதே பியர் கடையில் 60 ரூபாய்...குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் எனிக்மாவில் தான் குடிக்க வேண்டுமா ? ஏன் சாதாரண கடையில் குடித்தால் ஆகாதா ? இது போன்ற ஆடம்பரத்தை நானும் விரும்பவில்லை என்றாலும் சில சமயம் குழுவாக செல்வதற்கும் பார்க்கிங் வசதிக்கும் இது போன்ற கடைகளுக்கு செல்வது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்...(அப்போ பில்லை எவன் தலையிலயாவது கட்டிட வேண்டியது தான் :))

ஆடம்பரத்தை நான் வெறுக்கிறேன்....


5. இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் வேலையின் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்மற்ற துறையினரின் வாழ்க்கை தரமும், பொருளாதாரமும் பாதிக்கப் படுகிறது. இந்த அதீத ஊதியம் பற்றிய தங்களின் கருத்து...இது தேவைதானா?

பன்னாட்டு நிறுவனங்களில் உழைப்பை விட அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நான் மறுக்கிறேன்.....(சில சமயம் உழைக்காமல் பிலாக் எழுதி / பின்னூட்டம் போட்டாலும் ஊதியம் வழங்கப்படுகிறது ஹி ஹி)

அப்படி வாங்கும் சம்பளத்தை அந்த ஊழியர்கள் என்ன அண்டார்ட்டிக்காவிலா செலவு செய்யப்போகிறார்கள் ? இங்கே தானே...

மற்ற துறைகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்து உண்மையில்லை...பன்னாட்டு நிறுவனங்களினால் Infrastructure / Real Estate / Communication போன்றவை வளர்ந்துள்ளன அனுசுயா...

ஆனால் இது போன்றதொரு வளர்ச்சி மற்ற துறையினருக்கு பொறாமை ஏற்ப்படுத்தும் அளவில் உள்ளது என்பது உண்மை...


அப்பாடா...எப்படியோ ஒப்பேத்தியாச்சு...இனிமேல் இந்த சுடரை யார் கையிலயாவது பிடிச்சு கொடுக்கனும்...பட்டுனு நியாபகம் வருவது வலைப்பூ சின்னக்குத்தூசி / வலைப்பூ சுனாமி லக்கி லூக் அவர்கள்...


இனிமேல் கேள்விகள்...

1. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உண்டா ? கலைஞரை ஏன் பிடிக்கும் ? கலைஞர் புகழ் பாடுவதால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா ?

2. பத்திரிக்கை துறை ஏன் இப்படி போட்டி பொறாமையில் தவிக்கும் துறையாக, வருமானம் அற்ற துறையாக உள்ளது ? இந்த நிலை மாற வழியுண்டா ? வலையுலகால் எடிட்டர் என்ற பதவியே அழிந்துவிட்டது போனது போல் உள்ளதே, அது பற்றி உங்கள் கருத்தென்ன ?

3. பள்ளி காலத்தில் அய்யர் / அய்யங்கார் சாதியில் உங்களுக்கு ஏதேனும் நன்பர்கள் உண்டா ? அவர்களுடனான உங்கள் இனிமையான அனுபவத்தை (எச்சி வெக்கறது இல்லை) எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...

4. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை தி.மு.க நிறுத்திக்கொண்டதா ? வெறும் 60 ஆயிரம் மக்களை மாக்கள் போல் அடைத்துவைத்துள்ள முகாம்களின் நிலை மாறுமா ? க்வாரண்டைண் என்று சிறைகளில் அடைத்து வைக்கும் கொடுமை மாறுமா ? அவர்களின் சுகாதாரம் / கல்விக்காக ஏன அரசு (கண் துடைப்பின்றி ) நடவடிக்கை எடுக்க கூடாது ?

5. கீழ்வரும் வார்த்தைகளுக்கு ஒத்தை லைனில் குறிப்பு சொல்லவும்..

திராவிட தமிழர்கள் குழுமம்
தடாலடியார் கவுதம்
பின்னூட்ட கயமை
அதர் அனானி ஆப்ஷன்
கொலைவெறி படை
பா.க.ச
பொன்ஸ்
அய்யங்கார்
ஓசை செல்லா
தகவல் தொழில்நுட்பம்
பைக் குதிரை
மடிப்பாக்கம்
இந்துத்துவம்
ஜல்லிகள்
மொக்கை பதிவு
வெளிப்படையாக பேசுதல்
ஜெர்மன் மொழி

Monday, April 09, 2007

ஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

TANKER (Tamilnadu kidney Research
Foundation) இதுதாங்க இந்த அமைப்பின் பெயர்..கிட்னி சம்பந்தமான நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளை வழங்குகிறார்கள்...முற்றிலும் இலவசமாக.... டயாலிஸிஸ் எனப்படும் ட்ரீட்மெண்ட் கூட இலவசமாக வழங்கும் இவர்களின் சேவையை என்னவென்று பாராட்டுவது...

உங்களுக்கு தெரிந்தவர்கள் - நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - மருத்துவ வசதி செய்துகொள்ள பணம் இல்லாதவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக சுட்டிக்காட்டவேண்டியது இந்த TANKER அமைப்பு..

மேல்விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் : 044 - 28273407 and 28241635 ;

இணைய தளம் : http://www.tankerfoundation.com



இந்த தகவல் கிடைக்கப்பெற்றது sactamil யாகூ குழுமம் வழியாக...நன்றி...!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இங்கே க்ளிக் http://priyan4u.blogspot.com/2007/03/2.html


"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"

எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://priyan4u.blogspot.com/2007/03/2.html


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Thursday, April 05, 2007

உயரெல்லை தேவையா : சர்வேசனின் சர்வே

http://surveysan.blogspot.com/2007/04/2.html


உயரெல்லை போன்ற விஷயங்கள் திரட்டியில் தேவையா என்ற விஷயத்துக்கு சர்வேசன் சர்வே போட்டிருக்கார்..

உங்கள் பின்னூட்டத்தை ஊட்டமாக தரவேண்டாம்...உங்கள் வாக்கை மொத்தமாக தாருங்கள்...அங்கே...

http://surveysan.blogspot.com/2007/04/2.html


கைகொடுங்கள் !!! தடை தகர்ப்போம்...!!!



#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Wednesday, April 04, 2007

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

வீ த பீப்புள் பதிவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html


வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

<a href="http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html"> இங்கே</a>

வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html


வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இட ஒதுக்கீடு என்ன விலை ?

இது வீத பீப்பிளின் இந்த பதிவுக்கு ஒரு பதில் பதிவு...

http://wethepeopleindia.blogspot.com/2007/04/blog-post.html


வீ த பீப்புள் சொல்வது போல ஒரு கருத்தை நான் வலியுறுத்தவில்லை என்றாலும் பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் பங்கிட்டு தரவேண்டும் என்றேன்...

இட ஒதுக்கீடு வாங்கி IIT / IMM இல் படிப்பது...பின்பு கோர்ஸ் முடியும் முன் வெளிநாட்டு ஆபர் ஒன்றை வாங்கிக்கொண்டு பாரினுக்கு பறந்துவிடுவது...இவனால் இந்தியாவுக்கு அன்னிய செலாவனியும் குவிவதில்லை, ஒன்றும் இல்லை...அவன் பாரினில் இருந்து வரும்போது வாங்கி வரும் சாக்கிலேட்டு குப்பைதான் மிச்சம்...

ஏன் இந்தியாவில் / இந்திய அரசின் நிதி உதவியுடன் படித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனத்துக்கு சேவை செய்யவேண்டும் ? இந்திய தேசியத்துக்கு சேவை செய்யவேண்டியது தானே..( உடனே நீ ஏன் பன்னாட்டு நிறுவனத்தில் குப்பை கொட்டுகிறாய் என்று நொள்ளையாக ஒரு கேள்வி கேட்கவேண்டாம் ) இங்கே IIT / IIM பற்றித்தான் பேச்சு...

என்னிடம் என் பதிவில் செந்தில் கேட்டார்...நான் 10 லட்சம் கொடுக்கிறேன்...எனக்கு IIM இல் ஒரு சீட்டு வாங்கித்தரமுடியுமா என்று...

பத்துலட்சம் பணம் உள்ளவன் ஏழையா ? அவனுக்கு கவருமெண்டு கோட்டாவில் IIT / IIM வேண்டுமா ? அவன் சோத்துக்கு சிங்கி அடிக்கிறானா ? பத்து லட்சத்தை வைத்து கவுரவமான சுய தொழில் ஆரம்பித்து அம்பானி / டாட்டா / பிர்லா ரேஞ்சுக்கு முன்னேறலாமே...அம்பானியும் என்ன IIM இலா மேனேஜ்மெண்ட் படித்தார் ?

தன்னை ஒரு கூலித்தொழிலாளி என்று கூறி மெடிக்கல் காலேஜ் சீட்டை மகளுக்கு வாங்கிய மாணிக்கவாசகம் IG ஆப் போலீஸைத்தான் நான் கிருமி லேயர் என்கிறேன்...D பிரிவு ஊழியரை அல்ல...

பார்ப்பானர் வீட்டில் அம்மா அக்கா அத்திம்பேர் எல்லாம் படித்திருப்பார்கள், அவர்கள் சொல்லிக்கொடுக்கும் குடும்ப சூழல் இருப்பதால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் படிக்கிறார்கள்...ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிள்ளைகள் படிக்கும் சூழ்நிலை இல்லை...சதா சர்வகாலமும் குடித்துவிட்டு வரும் அப்பா எங்கே படிக்க விடுகிறார் என்று கேட்கிறார்கள் மதிப்புக்குரிய பதிவர்களும் என்னுடைய நன்பர்களும்...

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

இட ஒதுக்கீடு என்ன விலை ?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்...இது "FIT for Survival" வேர்ல்டு...நீ முன்னேறும் காரணிகளை கொண்டிருந்தால் முன்னேறு...இல்லையென்றால் செத்து சுண்ணாம்பா போ...இது தான் பரிணாம கொள்கை..."தகுதியுள்ளவை தப்பி பிழைக்கும்"...

திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள சித்திலிங்க மடம் என்ற கிராமத்தில் (வெட்டிப்பயலுக்கு தெரியும் கேட்டுப்பாருங்க), உள்ள ஒரு விவசாயியின் மகன், ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவதாக வந்தார்...இரண்டு வருடம் முன்பு...2005ல்..அவர் எந்த இட ஒதுக்கீட்டீல் வந்தார்...எந்த இட ஒதுக்கீடு அவரது கமிட்மெண்டையும், அறிவையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியையும் வளர்த்தது ?

இட ஒதுக்கீடு என்பது பிச்சை போல் தோன்றுகிறது...அருவருப்பாயிருக்கிறது...சாதி ரீதியாக மக்களை இன்னும் முன்னேறவிடாமல் தடுக்கும் கீரிப்பட்டிகளையும், பாப்பாப்பட்டிகளையும் ( இது மட்டுமா - இது சும்மா உதாரணத்துக்கு) எந்த சாதியினர் முன்னேற விடாமல் தடுக்கின்றனர் ? பார்ப்பணீயம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு காண்ஸப்ட்...துரத்தி துரத்தி அடிக்கப்படுகிறது எங்கும்...ஆங்காங்கே சில இடங்களில் உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது (உதாரணம் : பாலபாரதி ராமேஸ்வரத்தில் எடுத்த படம் ) இன்னும் சில ஆண்டுகளில் சுத்தமாக செத்து ஒழியும்...அதனால் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நலம் என்னைப்பொறுத்தவரை...

வீ த பீப்புள் சொல்லி இருப்பது போல குறிப்பிட்ட சமுதாயத்தினரின் ஆதிக்க சக்திகள் (இந்த நாளிள் பார்ப்பணர்களின் % இந்த இடத்தில் குறைவுதான்) தங்களை Empower செய்துகொள்ள இந்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகின்றன பாருங்க...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Tuesday, April 03, 2007

திரட்டியின் நிர்வாகத்துக்கு

வேளை வந்துவிட்டது...ஆம்...பின்னூட்ட உயரெல்லையை அதிகரிக்கவோ / அல்லது இந்த கட்டுப்பாட்டை நீக்கவோ நேரம் வந்துவிட்டதென்று நான் நினைக்கிறேன்...

ஒரு பதிவர் வந்து கொடுத்த பல ஐடியாக்களை பதிவர்களின் எந்த கருத்தையும் கேட்காமல் - ஜனநாயக முறைப்படி ஒரு சர்வே கூட வைக்காமல் இம்ளிமெண்ட் செய்தது நிர்வாகம்...

இப்போது நான் சொல்லும் இந்த யோசனையையும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்...

பின்னூட்ட உயரெல்லை கட்டுப்பாடு பல வலைப்பதிவர்களுக்கு ஏற்பில்லை என்று தெரிந்தும் சில பல கும்மிகளுக்காக அதனை வைத்துள்ளீர்கள்...இருப்பினும் எல்லாமே கலையாமல் அடுக்கப்பட்டிருந்தால் அது வீடு அல்ல...ஷாப்...வீடு என்றால் அப்படித்தான் கலைந்து கிடக்கும்...எங்களிடம் போய் பர்பெக்ஷன் எதிர்பார்த்தால் எப்படி...

இருந்தாலும் சில பல கும்மிகளை குறைத்துக்கொள்வோம் என்று கூறி, பின்னூட்ட உயரெல்லையை உடனே நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

மற்ற பதிவர்கள் தங்களது ஆதரவை பின்னூட்டத்தில் பதிக்குமாறு கேட்கிறேன்...சர்வேசனை ஒரு சர்வே போடுமாறு இந்த பதிவின் மூலம் கேட்கிறேன்...

ச்ச்சும்மா : (அவருக்கு யாரும் பின்னூட்டம் போடலைன்னா அதுக்கு நான் என்ன செய்வது...சரி இனிமேல் அவரது பதிவையும் அ.மு.க கவனிக்கும்)

மேல்விவரம் : இது ஒரு பக்கா டீசண்ட் பதிவு...கும்மி அல்ல...அ.மு.க மன்னிக்கவும்...பதிவர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்கிறேன்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

கிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரும்

எங்க ஊருல எனக்கு ஒரு அய்யர் பையன் பிரண்டு. அவன் பேமிலி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது 100 சதவீதம் உண்மை...கஷ்ட ஜீவனம்...பையனை +2 படிக்கவைக்கவே கஷ்டப்பட்டார் அவங்க அப்பா...நாங்க தான் உதவி செஞ்சோம் அதுக்கு...என்ன கொடுமைன்னா என் பிரண்டோட தம்பிக்கு பி.இ சீட் கிடைக்கல..காரணம் அவன் அதிக மார்க் வாங்கி இருந்தாலும் அவன் OC கேட்டகிரியில் வர்ரது தான்...

எங்க ஊரு தாசில்தார் மகனும் எங்களோடவே சுத்துறவன்..அவனுக்கும் ஒரு தம்பி...சுமாரா படிப்பான்...ஆனா அவனுக்கு அரசு கோட்டாவிலேயே சீட் கிடைச்சிருச்சி..காரணம் அவன் தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பது தான்....அவங்க அப்பாவிடம் இரண்டு காரு இருக்கு...அதுக்கும் மேல நாலு காரு வாடைகைக்கு ஓடுது..ஊருக்குள்ள நாலு வீடு...ஒரு கல்யாண மண்டபம் கூட போன வருஷம் கட்டினார்...அலுவலகத்தில முன்புறம் பின்புறம் டேபிளுக்கு மேலே டேபுளுக்கு அடியிலே என்று நன்றாக வாங்கி பிழைக்கிறார்...ஆக பொருளாத்தில் நல்ல உயர்ந்த நிலை...என்ன வேற வார்த்தையில் கிருமி லேயர்னு சொல்லலாம்...

இப்போ சொல்லுங்க...இட ஒதுக்கீட்டுக்கான கணக்கெடுப்பு மீண்டும் நடக்கனும், பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கனும் என்பது எந்த விதத்தில் தப்பு ? மாவட்ட செயலாளர் வன்னியர் என்பதால் அவர் மகனுக்கு பி.இ சீட்டு ஓஜியில கிடைக்கும்...ஆனா கோயில்ல மணியாட்டுறவர் என்ன கோடீஸ்வரனாவா இருக்க போறார் ? ஒரு சனிக்கிழமையோ, ஞாயித்துக்கிழமையோ பந்து நடத்தினா சரியா போச்சா ? மத்திய அரசை மிரட்டி மந்திரி பதவி வாங்குன மாதிரி இதையும் (விரைவான பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு) செஞ்சு முடிக்கலாமே முதலமைச்சர் ? குழலி / ஓசை செல்லாவுக்கான பதில் இது...அதே சமயம் திராவிட தமிழர்களின் கருத்து என்ன ? ( ஹிஹி மாட்னீங்களா !!!!)

தாழ்ந்த சாதி எல்லாருமே வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்கன்னா அவங்க எல்லாருக்கும் பெனிபிட் கிடைக்கப்போகுது...ஏன் நாம டெங்ஷன் ஆகனும் ? இதனால் பாதிக்கப்படப்போறது யாரு ? லஞ்சத்தில் வயிறு வளர்த்துள்ள கிருமி லேயர் தானே ? அவனுங்களை இந்த சமயத்தில் ஐடெண்டிபை செய்யாமே வேற எப்போ செய்ய முடியும் ? பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள மக்களை பில்டர் செய்து, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களை ( அவங்க எந்த சாதியா இருந்தாலும்) - தூக்கி விடுவது தானே முறையான அரசு ? அதற்குத்தானே இந்த தீர்ப்பு ? ஏன் இதனை நாம் எதிர்க்கிறோம் ? யாராவது என் சிற்றறிவுக்கு எட்டும்படி விளக்குவார்களா ?

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Monday, April 02, 2007

பூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை !!!!

சும்மாங்காட்டியும் ஒருத்தர் போட்ட மொக்கைக்கு தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட இன்னோரு மூஞ்சுமூடி, மொக்கைப்பதிவுல தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட ஒரு மொக்கையான பின்னூட்டம் இன்னும் மொக்கையாவே இருக்கு...அதனால அந்த மொக்கையை காம்பண்ஸேட் பண்ண இன்னோரு மொக்கை பதிவை போடலாம்னா இன்னைக்கு நாள் பூரா மொக்கையாவே ஓடிப்போச்சு....

இதற்க்கு திராவிட தமிழர்கள் பதில் சொல்வார்களா ? (இப்படித்தான் $$$$$ நாங்க கேட்போம்...) பக்கத்து வீட்டு "டாக்" ஏன் நைட்டு புல்லா கொலைச்சுது, எருமை மேல காக்கா உக்காந்தா எருமை ஏன் அதுபாட்டுக்கு மேயுது, என்று ஏதாவது திராவிட தமிழகளை கேள்வி கேட்டு பதில் வாங்குறது ஒரு அடிக்ஷன் நேக்கு...

வியர்டுக்கு வரேன்..நேத்து ஒருத்தன் என்னை பார்த்து "வந்தேறி" அப்படீன்னுட்டான்...நான் டென்ஷன் ஆகிட்டேன்...டேய் என்னடான்னு கேட்டா...ஆமாம்..சில பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால இந்தியா ஆப்ரிக்காவோட இருந்ததாம்...அப்பாலிக்கா அது அப்படியே ரவா தோசை மாதிரி பிச்சிக்கினு வந்து ஆசியா கண்டத்தோட ஒட்டிக்கிச்சாம்...அப்படி ஒட்டுனதுல வந்த விஷயம் தான் நம்ம இமய மலையாம்....அப்போ நான் " ஆப்ரிக்க நாட்டு வந்தேறியா ? " நீங்க ஆசியா கண்டத்திலேயே மூவிங்ல கீறீங்களா ? இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டனேப்பா...அடப்பாவிங்களா...சொல்லவே இல்லையே....ஆமாம் அப்புறம் நீங்க ஏன் வெள்ளையா இருக்கீங்க, நாங்கல்லாம் கருப்பா கீறோமே அப்படீன்னதுக்கு...உங்க ஏரியாவில பாய் வீடு இருக்கில்லா...ஆமாம்...மிலாது நபியில இருந்து ரம்ஜான் வரைக்கும் பிரியானிக்கு நாக்க தட்டிக்கினு வெயிட் பன்றோம் இல்லா..ஆமா இருக்குது அதுக்கு இன்னா ? பாய் வீட்டம்மா இன்னா கலர்ல இருக்காங்க...அவங்கள ஏண்டா நீ கேக்கல ? அவங்க அரேபிய வந்தேறியா ? ங்கோ...இதுல நான் எதுக்கு வம்பு பண்ணப்போறேன்...அப்புறம் பிரியானிக்கு உங்க வீட்டுலயா வந்து நிக்க முடியும் ? நீ மரக்கறி துன்றவன் ஆச்சே....அத்த உடு...நீ ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...உன்னுடைய வயிறு இருக்குல்லா...அதுல ஒரு அயிட்டம் போனா செரிக்க எவ்ளோ நேரம் ஆகுது ? என்ன ஒரு நாலு ஆறு மணி நேரம் ஆகும்...அட லூசே...மனிதனோட வயுறு சிஸ்டம் நாலு மணி நேரத்துல செமிக்கறமாதிரி தாண்டா இருக்கு...ஆனா ஆட்டுக்கறி மாட்டுக்கறி நாப்பத்தெட்டு மணி நேரம் வயித்துல குந்திக்கினு இருக்கும் இது நேக்கு தெரியுமா ? மனிதன் வயிறு மரக்கறி உண்ணத்தான் அமைப்பா இருக்கு...ங்ஏ ங்ஏ ங்ஏ...

என்னை ஆப்ரிக்க நாட்டு வந்தேறின்னு கூப்பிடாதடா செல்லம்...
நான் நேத்து ஒக்கேனக்கல்ல "போய் எறங்கி" டா..(நன்றி வ.வா.சங்கம்)...அங்க போய் நல்லா ஒரு மாலிஷ் / அருவிக்குளியல் / வறுத்த மீன் / ரசம் / பரிசல் / தூக்கம்....ஆனா பொன்னாங்கன்னி தைலம் போட்டு மசாஜிங் பண்ணும்போது பெர்முடாசு எல்லாம் பச்சையா மாறிடுச்சு...எண்ணை பிசுக்கு வாசிங் மெசின்ல போகுமா தெரியல...

டேய் நீ பெண்களுக்கு எதிரா இருக்கே...ஆமாம் நேத்து டிவி சீரியல் பாக்க விடாம மேட்ச் பார்த்தேன்...அது இல்லை...நீ பெண்களுக்கு எதிரா எழுதுறே...அடப்பாவீங்களா நான் போட்டுக்கிட்டிருக்க மொக்கையில பெண்களுக்கு எதிரான மொக்கை / அக்காவுக்கு எதிரான மொக்கை / தங்கச்சிங்களுக்கு எதிரான மொக்கைன்னு ஏதாவது இருக்கா ?

அதர் அனானி ஆப்சன் இல்லாத ஆளுகளுக்கு பின்னூட்டம் போடுறது முடியாது...தோனித்தொலங்கி ஏதாவது பின்னூட்டம் போடுறதுன்னு போனாலும் அதர் ஆப்சன் இல்லாம எரிச்சலா ஆகும்...அடுத்த முறை அவங்க பதிவுகளுக்கு போலாம்னு க்ளிக்க போனா கை ஆட்டோமேட்டிக்கா வேற எத்தையாவது கிளிக்கிரும்...ஏண்டாப்பா சாமிகளா comment Settings ல போயி Who Can Comment அப்படீங்கற கேள்விக்கு Anyone அப்படீன்னு மாத்துறது என்ன கம்ப சூத்திரமா ? என்னாத்தை சொல்வேனுங்கோ, வ்டுமாங்கா ஊறலைங்கோ..

இந்த முதல்வர் ஏன் இப்படி இருக்கார்...மத்திய அரசை மிரட்டி இலங்கையை உண்டு இல்லைன்னு பண்ணலாமே..இலங்கையை மிரட்டு, இல்லைன்னா ஆதரவு வாபஸ் அப்படீன்னு சொல்லலாமே...இதை ஏன் இதுவரை திராவிட தமிழர்கள் கவனிக்கவில்லை $$$$$ (கொஸ்டின் மார்க் தான் இப்படி வருது என்னோட லேப்பியில்...என்னான்னே தெரியல )

யாருக்கும் புரியாத மாதிரி எழுதலாம், அட்லீட்ஸ் ஒரு அம்பது பின்னூட்டம் கிடைக்கும்னு பார்த்தா முடியலையே...ச்சே...பேசாம பேரை பதிரா அல்லது குதிரான்னு வெச்சிக்கிட்டா கிறுக்க முடியுமோ ? அந்த அண்ணன் ஏன் இன்னும் வியர்டு பதிவு போடலை...ஒரு வேளை ஆளே வியர்டுங்கறதாலயா...ஏண்டாப்பா ஊர்வம்பு நமக்கு...நல்லா எழுதனா ஒடம்புகிடம்பு சரியில்லையான்ன்னு விசாரிப்பானுங்க..

இந்த பாரா கொஞ்சம் புரியாத ஸ்டைல்ல டிரை பண்ணியிருக்கேன்...கவனியூங்க...

கந்தன் கள்வன், கருமம் பிடிச்சவன் காய்ச்சுவான். நேத்தைக்கு நூடுல்ஸ் சூப்பர் அப்படீன்னு டீவியில் காட்டுக்கு மாடு. அந்த லாங்குவேஜுல லாக்குக்கு லட்சம்னு பேசு. பாருங்க அதுக்காக எனக்கு சொ.செ.சூ. நீ நல்லவனா இல்லையான்னா அது எனக்கே தெரியாது.சாப்டா செரிக்கும். அரிச்ச சொறியனும். வந்தா போகனும்.ஆனா போனா வரத்தேவலை.அதுக்கு பேரு என்ன. யாருக்கு தெரியும்.இந்திரா நகர்ல ட்ராவிட் வீடு.கும்ளே நேத்து ரிட்டேடு.நெல்லையில் அல்வா.அது நல்லா இருக்கும்...நான் சொல்றது நூடுல்ஸ. கோயம்புத்தூருக்கு ட்ரெயினே இல்லையாமே.நான் நாளைக்கு அங்க ட்ரெயின்ல தான் போறேன். நீங்க சாப்டீங்களா?நானும் சாப்பிடலை.

அய்யோ முடியலையே, இப்பவே கண்ணக்கட்டுதே.....என்னால முடிஞ்சது இது...நான் கிளம்பறேன்...ஆட்டோவை 22 ஏப்ரல் நடேசன் பார்க்குக்கே அனுப்புங்க.


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

ஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....

நம்ம பால பாரதி அங்கிள் வலைப்பதிவர் சந்திப்பை மீண்டும் நடத்துகிறார்...வழக்கம்போல பதிவர்களும் அனானிகளும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது...

மேலும் சில பெரிய தலைகளும் கலந்துகொள்வார்கள் போல தெரிகிறது...நாம் கண்டிப்பாக அங்கே சென்று மொக்கை போட வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது...

டிக்கெட்டை இப்போதே போட்டால் காசு குறைவாக இருக்கும் என்று மனம் எண்ணுகிறது...இருந்தாலும் அந்த நாளில் ஒரு அனானியின் மேரேஜ் வருகிறது...பரவாயில்லை...மேரேஜை தள்ளி வைக்க சொல்லுறேன் :))

ச்ச்ச...சும்மா வெட்டியா எழுதனும்னா எதை வேனாலும் எழுதலாமா...நிறுத்து நிறுத்து...உனக்கெல்லாம் கல்யாணம் ஆகி....

http://balabharathi.blogspot.com/2007/04/22.html


இந்தாங்க லிங்க்....மொக்கையை ஆரம்பிக்கலாமா ? இது ஒரு மொக்கைப்பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....