Monday, July 31, 2006

புத்தம் புதிய புத்தகமே...(தலைப்பு:காப்பி ஓனர்:கோவி.கண்ணன்)

பிடித்த புத்தகப்பட்டியலை வெளியிடச்சொல்லி பின்னூட்ட நாயகர் சொல்லிட்டாரு...அதுக்கப்புறமும் சும்மா இருந்தா நல்லா இருக்குமா?

எனக்கு பிடிச்சதெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் தானுங்க...எஸ்.விஜயன் நடத்தும் சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ்க்கு மனியார்டர் அனுப்பி அள்ளிருவேன்...

பிறகு நேரம் கிடைக்கும்போது படிக்கிறது.....

சென்ற மாதம் சென்னைக்கு போனபோது சில புத்தகங்கள் வாங்கினேன்..

1. மது மங்கை மேதை - குஷவந்த் சிங்

சூப்பரான புத்தகம்...மெய்யாலுமே நல்ல எழுத்தாளர்தான்...சாம்பிள்..நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்த காலத்தில் நடந்ததை எழுதி இருக்கார்...காற்று பிரிவதை பற்றி...உறுப்பினர்கள் அவர்கள் திருப்தியை இரு விதங்களில் வெளிப்படுத்துவார்கள் - ஒன்று ஏப்பம் - மற்றது - காற்று பிரிவது என்று சொல்கிறார்...:))

ஒருமுறை சத்தமாக காற்று பிரிந்ததை - இது சபை அவமதிப்பா இல்லையா என்று ஒரு உறுப்பினர் கேட்டாராம்...:))

2. புத்தர் ஜாதகக் கதைகள்

அருமையான கதைகளை கொண்டது...யார் வெளியீடு என்பதை நான் நாளை வெளியிடு(!!!)கிறேன்..

3.மைக்ரோவேவ் குக்கிங்

இதைபடித்து செய்த சிக்கன் தீய்ந்துவிட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...மற்றபடி தரமான படங்களுடன் அருமையாக இருக்கிறது...

மேற்க்கண்ட மூன்று புத்தகங்களும் - தி.நகர் போத்தீஸ் எதிரே கொஞ்சம் இடப்புறம் உள்ள ஒரு கடையில் - பதிப்பகத்தார் கடை என்று நினைக்கிறேன்.. - வாங்கினேன்...

4. இரத்த படலம் - லயன் காமிக்ஸ் வெளியீடு

மொத்தம் 13 பாகமுங்க..இது வரை பத்து பாகம் கையில் இருக்கு...1986 ல் இருந்து வருது..93ல் இருந்து வாங்குறேன்..தன்னையே தேடும் ஒருவனின் கதை..மைக்கல் வான்ஸ் ஓவியங்கள் படு ஜோர்....ஒரு சின்ன - டயலாக் இல்லாத ஒரு காட்சிக்கு கூட - அருமையாக ஓவியம் தீட்டும் வான்ஸ் உழைப்பு - ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையாகாதுங்க...

அதை தரமாக தமிழ்கூறும் நல்லுலகிற்க்கு தந்த எஸ்.விஜயனை - எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

மற்றபடி - இரவுக்கழுகு - ரேஞ்சர் டெக்ஸ் வில்லர், லக்கி லூக் (வலையுலக லக்கி லூக் அல்ல - நிஜ லக்கி லூக், பரலோகத்துக்கு ஒரு பாலம் / ஜேன் இருக்க பயமேன் என்ற கதைகள் எல்லாம் படு ஜோரா இருக்கும்), சிக்-பில் ( அருமையான காமெடி கதைகள் உண்டு ) - இதனுடன் இலவச இணைப்பாக வந்த மதியில்லா மந்திரி - தலைகீழாய் ஒரு தினம் - சூப்பர்...

ஏதோ எழுதியாச்சு - நம்ம பங்குக்கு...

நான் அழைக்கும் நண்பர்கள்..

1. லக்கி லூக்
2. அனுசுயா
3. கவிதா
4. இளமாறன்
5. மங்கை

மறக்காதீங்க...நீங்க எழுதி முடிக்கும் வரை விடமாடேன் ஆமாம்...:))

அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ

போனவருடம் நடந்த நிகழ்ச்சிங்க...

போஸ்ட் பெய்டில் இருந்த என்னோட மொபைலை பிரி பெய்டாக மாற்றினேன்...ஏர் டெல் (Airtel) கம்பேனி கார்டு போட்டேன்...காரணம் நம்ம ஈட்டி வாய் கொஞ்சம் ஓவரா பேசிக்கிட்டே இருக்கறதால - பாதி சம்பளம் போனுக்கே போறது பொறுக்காம இந்த முடிவு எடுத்தேன்...

அதுலயும் ஒரே வாரத்துல பேலன்ஸ் தீந்து போச்சு...

சரின்னு ஒரு 250 RS ரீசார்ஜ் கூப்பன் வாங்கினேன்..

ரீசார்ஜ் செய்து முடிஞ்ச பிறகு பேலன்ஸ் செக் செய்தேன்...

உங்கள் கையிருப்பு 178 ரூபாய் ஐம்பது காசு அப்படீன்னு சொன்னது...

டென்சனான டென்ஷன்...

உடனே கஸ்டமர் கேருக்கு கால் போட்டேன்...

வாய்ஸ் மெனுவுல போயிக்கிட்டு இருந்தபோது கால் கட்டாகிருச்சி...

சர்ர்ர்ருனு இரண்டு ரூபாய் காணாமே போனதா மெசேஜ் வந்தது....

கோபம் இன்னும் அதிகமாச்சு...

என்னடா இது பகல் கொள்ளையா இருக்கு...250 ரூவா ரீசார்ஜ் கூப்பனுக்கு 178.50 தான் பேலன்ஸ், அதுலயும் இல்லாம கஸ்டமர் கேருக்கு போன் செய்தா 2 ரூவாய வழிச்சிக்கறானுங்க...இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணிரனும் என்று மீண்டும் கஸ்டமர் கேருக்கு ரீ டயல் செய்தேன்..

ஆங்..ரிங் போகுது ரிங் போகுது...

ஒரு வழியா ஒரு பெண் போனை எடுக்கறாங்க...

கய்யா முய்யா என்று சத்தம் போடுகிறேன் ஒரு இரண்டு நிமிடம்...

என்னா கம்பேனி நடத்துறீங்க...ஒரே பகல் கொள்ளையா இருக்கே...அநியாயம்..அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ ( யப்பா..தலைப்பு உள்ளே வந்திடுச்சி) - 250 ரூவா ரீசார்ஜுக்கு 178.50 ஆ, அத்தோட கஸ்டமர் கேருக்கு போன் செய்தா 2 ரூவாயா ? இது என்ன கஸ்டமர் கேரா இல்லை கஷ்டமர் கேரா ? என்று....

சார் ஒரு நிமிடம்...250 ரூபாய்க்கு 178 எடுக்கறதில்லை - 225 ரூபாய் கொடுக்கிறோமே ? அதுவும் இல்லாம கஸ்டமர் கேருக்கு போன் செய்தா காசு போகாதுங்க...என்றார்...

இல்லை...நான் சொல்வது தான் சரி...என்று மேலும் சில நிமிடம் ஏர்டெல் கம்பெனி முதலாளி - ஷேர் ஹோல்டர் - மானேஜர் என்று அர்ச்சனை செய்தேன்...

சரி சார் - உங்க மொபைல் நம்பரை சொல்லுங்க..

நான் சொன்னேன்...

அவர் ஒரு உண்மையை சொன்னார்...

அவர் என்னை திட்ட ஆரம்பிப்பதற்க்குள் - போனை கட் செய்து எஸ்கேப் ஆனேன்...எங்கே மறுபடி திட்டுவதற்க்கு கூப்பிடுவாங்களோ என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன்...

அப்படி என்ன உண்மை என்கிறீங்களா...

என் போன் நம்பரை சொன்னேன்...98805 என்று ஆரம்பித்து முழுவதும் சொல்லுவதற்க்குள்...

சார் - இது ஏர்டெல் நம்பர்...நீங்க போன் செய்திருப்பது ஹட்ச் (HUTCH) ஆபீஸ்...ஏர் டெல்லுக்கு 121 போடனும், ஹட்சுக்கு 111 போடனும்...பின்னே - ஹட்சுக்கு ஏர்டெல் மொபைலில் இருந்து போன் செய்தா 2 ரூபாய் போகத்தான் செய்யும்...

அய்யய்யோ அய்யோ அய்யய்யய்யோ

Friday, July 28, 2006

கூட்டி கழிச்சி பாருங்க...

கணக்கு சூப்பரா இருக்கு - கீழே பாருங்க...



1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

இதையும் பாருங்க


1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111

அட இதையும் தானுங்க


9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888



அருமை..இல்லையா...



கடைசியா இதையும் பார்த்திடுங்க...



1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321


நம்ம பசங்க போடுற கணக்கு எல்லாம் மூனு எழுத்துல அடங்கிருது...1X3...X=என்ன கண்டுபிடிங்க..

விடாது கருப்பு பார்வைக்கு.....(சில கேள்விகள்)

சதீஷ்...நீண்ட நாளாக எனக்கு ஒரு சந்தேகம்....உங்க கொள்கை என்ன ?

சூஸ் த பெஸ்ட் ஆன்ஸர்..உங்கள் சொந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றாக விளக்கவும் அனுமதி உண்டு..

1. பார்ப்பணீயத்தை எதிர்ப்பது..
2. எல்லா பார்ப்பனரையும் எதிர்ப்பது..
3. சாதி உயர்வு சொல்லும் பார்ப்பனரை எதிர்ப்பது..
4. பார்ப்பணர் சாதியில் நன்பர்களை கொண்டுள்ளவர் எல்லாரையும் எதிர்ப்பது...
5. எல்லாம் சரி...

பதிலளிக்க உங்கள் சொந்த அவகாசம் எடுத்துக்கொண்டு பதிலளிக்கவும்...

இன்றைக்கு பதிவு போட வேற மேட்டர் கிடைக்காததால் - இதையே ஒரு பதிவாக்கிடலாமுன்னு பாக்குறேன்...

மேலும் எனக்கு இன்னைக்கு நிறைய வேலை ( சத்தியமா உண்மை :) ) - அதனால் பதிலளித்தவுடன் மடலில் தெரியப்படுத்துங்க....

ஏன் இந்த கேள்வி என்று நீங்கள் பதில் அளித்தவுடன் தெரிவிக்கிறேன்..

அன்புடன்,
செந்தழல் ரவி

Wednesday, July 26, 2006

ஆயாவை கொல்வது எப்படி ?

மறுபடியும் பெரியம்மா பைய்யன் விஷயத்தையே சொல்லப்போறேன் என்றாலும் - சொல்லவில்லை என்றால் மேட்டர் வெளிவராதே !!!!

மேட்டர் பெருசா ஒன்னுமில்லைங்க...எங்க பெரியம்மா மகன் கோபு அவங்க பெருசை - அதாவது அவங்க கிழவியை போட்டுத்தள்ள முடிவுசெய்தான்...

அதிர்ச்சி அடையாதீங்க...கள்ளிப்பாலுக்கு தப்பிவந்த அந்த கிழவி செய்த அழிச்சாட்டியம் கொஞ்ச நஞ்சமா ? சொல்லிமாளாது...( நான் சொல்லலீங்க - கோபு சொல்லுறான்)

எல்லா வீட்டிலயும் நடக்கறது தான்...ஆனாலும் இந்த கிழவி செய்தது ரொம்ப ஓவர், அதனால கோபுவும், அவனோட தம்பியும் சேர்ந்து கிழவிக்கு ஆப்பு வைக்கிறது அப்படீன்னு முடிவு செய்தாங்க..

கிழவி வழக்கமா போடுற பொடிடப்பாவில மேலாக்க பொடித்தூளு கொஞ்சம் தெரிகிறமாதிரி கொட்டி - கீழால மொளகாத்தூளை போட்டுட்டானாம்...

அன்னைக்குன்னு பார்த்து - ரொம்ப ஜலதோஷமாயிருக்கு - கொஞ்சம் கொடும்மா உன்னோட பொடியை என்று எங்க பெரியம்மா வாங்கி கொஞ்சம் உள்ளே இழுக்க - அய்யய்யோ எரியுதே - என்று அவங்க அலற - கிழவி உஷாராகிட்டது...அத்தோட பயலுகளை போட்டுக்குடுத்து - ஏற்க்கனவே எரிச்சலில் இருந்த பெரியம்மா - அடி பிச்சிட்டாங்க...

அதனால அடுத்த முயற்ச்சியை எடுக்க கொஞ்ச நாள் ஆனாலும் - பாத்ரூமில் கரண்ட் ஷாக் அடித்து கிழவி அகால மரணம் என்று - தினத்தந்தியில் வந்த செய்தியை பார்த்து உஷாரானான் நம்ம கோபு..

அப்புறம் என்ன - எலக்ட்ரீஷியன் மகனுடன் கொஞ்சம் அளவளாவி - கொஞ்சம் வயர் கூட தேற்றிவிட்டான்..கனெக்ஷனும் இரவே கொடுத்தாகிவிட்டது - காலையில் கிழவி தட்டு தடுமாறி - தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது அலறல் சத்தம் மட்டும்தான் கேட்கவேண்டும் என்று பாத்ரூம் பின்னால் காத்திருந்தால் - பெரியப்பா தொட்டியை நோக்கி போகிறார் - அலறக்கூட முடியாமல் - திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் விழித்த கோபு - பெரியப்பா - இது என்னாடா ஒயர் என்று கையில் - எடுத்து போட்டுவிட்டதால் - தப்பினார்...விதியில் இருந்து...பிறகு கனெக்ஷனை கண்டு பிடித்து - சாத்தினார் - கதவை அல்ல - நம்ம பயல் கோபுவை...

என்னடா இது - என்று ஒரு ஆறு மாதம் காத்திருந்த பூதம் மீண்டும் விழித்துக்கொண்டது...புட் பாய்சன் - புட் பாய்சன் என்று பேசிக்கறானுங்களே....என்று அதுபற்றி பக்கத்து தெரு டாக்டரிடம் விசாரித்து தெரிந்து கொண்ட கோபு - சிக்கனை - இரண்டு நாள் கழித்து கிழவிக்கு கொடுத்து -புட் பாய்சனை வேண்டி விரும்பி வரும்படி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டான்...

புட் பாய்சனாகிய சிக்கனோடு - கொஞ்சம் தூக்க மாத்திரையும் கலந்து ஆயாவை மேலுலகத்திற்க்கு பார்சல் செய்வது என முடிவு செய்தான்..

ஞாயிறு செய்த சிக்கனை பாத்தித்தில் மூடி - கட்டிலுக்கடியில் வைத்தான், புதன்கிழமை ஆனது...

கொஞ்சம் வீச்சம் அடித்தது...மறுபடி வாணலியில் சிறிது வறுவல் செய்து, கிராமத்துக்கு சென்றிருந்த பாட்டிக்காக வெயிட்டிங்..

ஆறு மணிக்கு தான் வந்தது கிழவி...வீட்டு ஹாலில் காலை நீட்டி போட்டு உட்கார்ந்திருந்தது...

பெரியம்மாவின் தூக்க மாத்திரை டப்பாவில் மீதம் இருந்த நாலு தூக்க மாத்திரையும் பொடி செய்து - தண்ணீரில் கலந்து அப்படியே மேலாக்க தெளித்து - ரெடியானது மயக்க + உணவு விஷ (அதாங்க புட் பாய்சன்) சிக்கன்...

ஆயா - இந்தா சிக்கன்..உனக்காகவே வச்சிருந்தேன் என்று நீட்ட...

கண்ணூ...சிக்கனாடீ..ஆயாவுக்காகவே வச்சிருந்தியா...இந்தாடி செல்லம்...நீ ஒரு துண்டு சாப்பிடு என்றது கிழவி..

வேணாம் ஆயா...நீ சாப்பிடு...( இது நம்ம கோபு...)

இல்லை..நீ ஒரு துண்டு சாப்பிடு...மீதியை நான் சாப்பிடுறேன்...என்றது எமகாதகி..

ஒரு துண்டு சாப்பிட்டா ஒன்னும் ஆகிடாது என்று மனதுக்குள் நினைத்தபடி - ஒரு சிக்கன் துண்டை வாயில் திணித்த ஆயா பாசத்துக்கு கட்டுப்பட்டான் கோபு...

சில நிமிடத்தில் - தலை கிறு கிறு என்று வந்தது நம்ம கோபுவுக்கு....

மயங்கினான்...

ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிக்கொண்டு ஓடினார் - பணிமுடித்து வந்த பெரியப்பா...

புட் பாய்சன் ஆகி இருக்கு சார் - அவில் எடுத்திருப்பான் போல - ரெண்டு நாள் பெட்ல இருக்கனும்...என்று டாக்டர் சொன்னது சன்னமாக கேட்டது நம்ம கோபுவுக்கு...

இரண்டு நாள் பெட் வாசம்...

சனிக்கிழமை டிஸ்சார்ஜ்...கால்வாசி சாப்பிட்ட ஹார்லிக்ஸ் பாட்டில் - மீதிவைத்த பழங்கள் எல்லாத்தையும் பொறுப்பா எடுத்துக்கிட்டி - பெரியப்பாவோட வீட்டுக்கு வந்து பாக்குறான்...

எங்க பெரியம்மா வாங்கிக்கிட்டு வந்த அல்வாவை நடு வீட்டில காலை நீட்டி போட்டுக்கிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கு..

ஆயா...

Friday, July 21, 2006

பச்சை - பாவாடை - எச்சில் - பளார்

தலைப்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும் - மேட்டர் அதுதான்...எங்க பெரியம்மா மகன் - கோபுன்னு பேரு..

ஒருதலையா காதலிச்சான் பய...

மேட்டர் அது இல்லைங்க...காதலி கொஞ்சம் கிராமத்து பொண்ணு...மூஞ்சியில் புளிச்சின்னு எச்சிலை துப்பியதோடு அனைவரும் பார்க்கும்படி பளார் என்று அறைந்ததாக கேள்விப்பட்டேன்...

சரி - என்ன மேட்டர் என்று விசாரிக்கலாமேன்னு கூப்பிட்டனுப்பினேன்...

ரெண்டு நாள் சோக தாடியோடு வந்தான்...

என்னடா ஆச்சு...கையை புடிச்சி இழுக்கலாமோ ஒரு பொண்ணை - அதுவும் பஸ்ஸில...அதான் அடிச்சிட்டா...என்றேன்...

அட என்னை லவ் பன்றதா சிக்னல் குடுத்தா...அதுக்கப்புறம்தான் நான் கையைப்புடிச்சி இழுத்தேன்...

அப்படியா...எப்படி சிக்னல் குடுத்தா - இது நான்...

லட்டர் கொடுத்தேன்...வாங்கிக்கிட்டா...

லட்டர்ல என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கறதுக்காக வாங்கி இருப்பா...அதுக்கு பதில் லெட்டர் குடுத்தாளா - மீண்டும் கேட்டேன் நான்...

இல்லை...லட்டர்ல சொல்லி இருந்த மாதிரி நடந்துக்கிட்டா...

என்ன சொல்லி இருந்தே ?

திங்கள் கிழமை - ஸ்கூலுக்கு - பச்சை பாவாடையில் வர சொல்லி இருந்தேன்...அவ வந்தா..அதான் நான் அவ என்னை லவ் பன்றதா நினைச்சிட்டேன்..

ஓ..பச்சை பாவாடையில் தானே வந்தா ? அதுக்கு அப்புறமும் அவ ஏன் உன்னை அடிச்சா ?

கோபு என்னிடம் பதில் சொல்லிட்டான்...அவன் அறியாமையை நினைச்சி கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு...

உனக்கு வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...

அட என்ன பிரச்சினை என்று கேட்கிறீங்களா ?

பச்சை பாவாடை எங்க ஊர் கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் யூனிபார்ம்...

Thursday, July 20, 2006

வந்துருச்சிய்யா....வந்திருச்சுய்யாயா...

சில நாட்களாக தெரியாமல் இருந்த வலைப்பதிவுகள் - இன்றுமுதல் தெரிய ஆரம்பித்துவிட்டன..இந்த கொஞ்ச காலத்துக்கு - தலை சுற்றல் - வாந்தி - மயக்கத்துக்கு உள்ளானவர்கள் - இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு தயாராகுங்கள்...

அன்னியன் ரமணிக்கு நன்றி - இந்த இடைவெளியை அவர் மென்பொருளை கொண்டு நிரப்பிவிட்டார்...புதிய பி.கே லிங்க் என் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை...என்ன கொடுமை என்று எண்ணிக்கொண்டே பதிவின்மீது எலிக்குட்டியை வைத்து கடித்தால்....

அட்ரா சக்கை...வேலை செய்யுதே அப்பு...

நன்றிகள் பல...(யாருக்கு ?? )

அன்புடன்,
செந்தழல் ரவி

Monday, July 17, 2006

புஷ் தமிழில் பேட்டி ( என்னிடம் தாங்க)

செந்தழல் ரவி: வணக்கம் பேரிக்கா அதிபர் புஷ் அதிபர் அவர்களே...

சார்ஜ் W புஷ்: வணக்கம் ரவி..ஒரு திருத்தம்..நான் பேரிக்கா அதிபர் அல்ல...அமேரிக்க அதிபர்.

செந்தழல் ரவி: சாரி புஷ்..நல்லாருக்கீங்களா ? வேலை எல்லாம் எப்படி போகுது ? உங்க வீட்டுல எல்லாரும் சவுக்கியமா ? பூனைகுட்டி எல்லாம் நல்லா தீனி சாப்பிடுதா ?

சார்ஜ் W புஷ்: ரொம்ப சவுக்கியம்..போன வாரம் தான் பண்ணை வீட்டுல போய் நல்லா ஓய்வெடுத்துட்டு வந்தேன்..வேலை...அப்படி எதுவும் எனக்கு கிடையாது தம்பி..என் பொண்ணுங்க தன்னியடிச்சிட்டு எங்கியோ கவுந்து கிடக்கிறதா ஒரு நூஸ்...எப்.பி.ஐ ஆளுங்களை அனுப்பி இருக்கேன்..அது தவிர வீட்டில எல்லாரும் சவுக்கியம்...பூனைக்கு இந்தியான்னு ஆசையா பேரு வச்சேன்..அது பெரிய பிரச்சினைன்னு ரொம்ப டென்ஷனாக்கிட்டானுங்க...அதனால இப்போ இஸ்ரேல் அப்படின்னூ மாத்தினதை மட்டும் உனக்கு ரகசியமா சொல்லுறேன்..யாருக்கும் சொல்லிடாதே..

செந்தழல் ரவி: புஷ்...நான் ஒரு சில முக்கியமான விஷயம் பற்றி உங்ககிட்ட பேசலாம் என்று வந்திருக்கேன்...

சார்ஜ் W புஷ்: சொல்லுங்க ரவி...(எங்கடா போனானுங்க இந்த அஸிஸ்டெண்டுங்க...)

செந்தழல் ரவி: சார்..இந்த இஸ்ரேல் - யாரோ தீவிரவாதிங்க - ராணுவ வீரர்களை கடத்தினாங்கன்னு - இப்படி லெபனான் - காசான்னு கண்டமேனிக்கு - சிவிலியன்ஸ் மேல - குண்டு போடறானுங்களே...கொஞ்சம் கண்டிக்க கூடாதா...

சார்ஜ் W புஷ்: இப்போல்லாம் காது சரியா கேக்குறதில்லை ரவி..கொஞ்சம் சத்தமா சொல்லுங்க..

செந்தழல் ரவி(சத்தமாக): சார்..இந்த இஸ்ரேல் - யாரோ தீவிரவாதிங்க - ராணுவ வீரர்களை கடத்தினாங்கன்னு - இப்படி லெபனான் - காசான்னு கண்டமேனிக்கு - சிவிலியன்ஸ் மேல - குண்டு போடறானுங்களே...கொஞ்சம் கண்டிக்க கூடாதா...

சார்ஜ் W புஷ்: இல்லையேப்பா - ஒன்னும் கேட்க வில்லையேப்பா..

செந்தழல் ரவி(மெதுவாக): சரி - விடுங்க..வட கொரியா ஏவுகனை சோதனை நடத்துதே ? அதுபற்றி

சார்ஜ் W புஷ்: (செந்தழல் ரவி பேசி முடிப்பதற்க்குள்) : தெற்க்காசிய நாடுகளின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் - சர்வதேச சமுதாயத்தால் - தடுத்து நிறுத்தப்படும்..

செந்தழல் ரவி ( ஹுக்கும்) : சரி, ஈராக்ல இருந்து எப்போ படைகளை வாபஸ் வாங்கப்போறீங்க ? ஏற்க்கனவே ஜப்பான் கிளம்பி போய்ட்டாங்க...நீங்களும் கிளம்பிறலாமே ?

சார்ஜ் W புஷ் : எண்ணையா போகச்சொல்லறீங்க ஈராக்கில் இருந்து ? நாங்கள் எண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம்..ஆனால் அந்த மக்களின் எண்ணப்படி அங்கு நாங்கள் இருந்துதான் ஆகவேண்டும். தீவிரவாத சக்திகளின் எண்ணம் ஈடேறாது....அவர்கள் எண்ண எண்ணினாலும் நாங்கள் அந்த - முழுவதும் ஜனநாயக வகையில் செயல்படும் - அரசுக்கு பாதுகாப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்...எண்ணம்மோ போங்க...இதுவரை நாங்கள் செலவு தான் செய்து இருக்கிறோம்..போதுமான வரவு வந்தவுடன் பரிசீலிப்போம்..

செந்தழல் ரவி: இந்தியாவின் ஏவுகணை - செயற்க்கைக்கோள் பரிசோதனைகள் தோல்வி அடைந்தது குறித்து..

சார்ஜ் W புஷ்: ஹாங்...அவனுங்களுக்கு நல்லா வேணும்..எங்க நாட்டு ஐ.டி ஜாப்ஸ் எல்லாம் கொத்திக்கிட்டு போனாங்க இல்லையா...

செந்தழல் ரவி: ஹெல்லோ புஷ்..நான் இந்தியாவை சேர்ந்தவன்...

சார்ஜ் W புஷ்: ஓ..அப்படியா...இந்தியா உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது...அவர்கள் ராக்கெட் புஸ் போனது - எங்கள் இதயத்தை இஸ்ரேல் - லெபனானை தாக்குவதுபோல் - தாக்குகிறது..இந்திய ஐ.டி எஞ்சினீயர்கள் அமெரிக்காவின் தூண்கள் என்று ஒரு நாலாவது கிளாஸ் படிக்கும் பொண்ணோட புக்ல - தலைகீழா பார்த்தபோது தெரிந்தது...இந்தியா வாழ்க...

செந்தழல் ரவி: சரி தலைவரே..கடைசியா ஒரு கேள்வி..பில் கேட்ஸ் / பின்லாடன் பற்றி என்ன சொல்லறீங்க

சார்ஜ் W புஷ்: என்னாது - நான் வளர்க்கும் கேட்டுக்கு (CAT) பில்லு (BILL) போட்டுட்டானா பின்லேடன் - அவன் ஒரு சர்வதேச தீவிரவாதி - உலக போலிஸ்காரன் என்று நினைப்பு - அவன் விடும் வாய்சவடால் - கேசட்டுகளை அல்-ஜசீரா டி.வியில் பார்த்தேன்...ஆனால் அப்போது புட்பால் மேட்ச் இருந்ததால் - மாற்றிவிட்டேன்..அதனால் பிறகு கருத்து சொல்கிறேன்..

செந்தழல் ரவி தலையில் அடித்தபடி எஸ்கேப்...

Friday, July 14, 2006

பன்மோகன் - புஸ் டெலிபோன் பேச்சு

நம்ம பிந்திய பிரதமர் பன்மோகன் - பேரிக்கா அதிபர் புஸ்சுகிட்ட போன் போட்டு பேசுனதுல ஒரு வெளிவராத மேட்டர் சொல்லவா ?

மேடம் சோனியா சொல்லி இருக்காங்க - புஸ்ஸு கிட்ட இத பத்தி போன் போட்டு சொல்லு பன்மோகன், அவர் தாக்கி அறிக்கை குடுப்பாரு என்று..

நம்ம பன்மோகன் ஒரு நாலு மிஸ்ஸுடு காலு குடுத்திருக்கார்...

அப்புறம் சோனியாகிட்ட போயி, நான் கால் பண்ணி பார்த்தேன், ஆனால் புஸ்ஸு எடுக்கமாட்டீங்கறாரு என்று சொன்னாரு பன்மோகன்..

அவங்க கேட்டாங்க...நீ, கஞ்சப்பயலாச்சே..நீ போனா செய்திருப்ப..மிஸ்ஸுடு காலு தானே கொடுத்திருப்ப என்று...

பன்மோகன் ஹி ஹி என்று வழிஞ்சிக்கிட்டே, ஆமாம் மேடம் மிஸ்ஸுடு காலு தான் கொடுத்தேன்..ஆனாலும் திரும்ப கூப்பிட மாட்டேங்கிறாரு என்றார்..

அதானே பார்த்தேன்...எங்க எந்த நம்பருக்கு கொடுத்தே என்று போனை வாங்கி பார்க்கிறார்...

அது புஸ் அலுவலக லேண்ட் லைன்...

பனியன் போட்ட சனியனே என்று - தலையில் அடித்துக்கொண்டே சோனியா அவரது மொபைலில் இருந்து கூப்பிட்டு பன்மோகனிடம் கொடுக்கிறார்..

செய்தி : பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் புஷ் தொலைபேசியில் பேச்சு..தீவிரவாத தாக்குதலுக்கு கன்டணம்..

( காமெடிக்காக மட்டும் எழுதியது...சந்தோஷ் பதிவில் பின்னூட்டம் போடப்போக அது பெருசாயிட்டது...அதான் ஒரு தனிப்பதிவாக்கிட்டேன்)

Tuesday, July 11, 2006

மரணம் - சிறுகதை

மரணம்......

எல்லோருக்கும் ஒரு நாள் வருவதுதான்...எல்லாரும் வாழ்க்கையில் சந்திப்பது தான்...மறதி என்ற ஒன்று இல்லை என்றால் மரணம் எப்போதும் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்குமன்றோ...நானும் சந்தித்தேன்...அப்பாவின் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மரணம் இதயத்தை மாபெரும் துயரில் வீழ்த்தி
யது..

கல்லூரியில் படித்த காலத்தில் விடுமுறைக்கு வரும்போது - காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிய சித்தப்பாவுடன் - அவரது அலுவலக
த்துக்கு செல்வது வழக்கம்..கேஸ் கட்டு எழுதும் பணியில் என்னையும் ஈடுபடுத்துவார்...

அடிக்கடி கேஸ் கட்டு எழுதி எழுதி எனக்கே சட்டத்தில் உள்ள செக்ஷன்கள் எல்லாம் அத்துபடியானது...அடிக்கடி பாக்கெட் மணி வேறு கொடுப்பார்..

அப்பாவிடம் வாங்கிய பாக்கெட் மணியை விட அவரிடம் வாங்கியது அதிகம்...

அவரிடம் பொது இடங்களுக்கு போகும்போது அங்கு உள்ள பிகர்களை சின்ன பைய்யன் மாதிரி என்னோட சேந்துக்கிட்டு கலாய்ச்சது எல்லாம் இன்றும் மனதில் நிற்க்கிறது...

சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்போது - தொலைபேசியில் அழைப்பு...காவல் நிலையத்தில் இரவு பாணியில் இருந்தபோது மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார் என்றது செய்தி...

அலறி அடித்து ஓடிவந்தேன் சொந்த ஊருக்கு....நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள்...சற்று நேரம் அமைதியாக இருந்தது மனம்..எந்த சிந்தனையும் இல்லை..

அவர் முகத்தை ஏறிட்டு பார்த்தேன்...அவ்வளவுதான்...உடைந்து அழத்தொடங்கினேன்...என் கதறல் அழுது அழுது ஓய்ந்திருந்த அனைவரையும் மீண்டும் அழவைத்தது....

காலில் விழுந்து பிரண்டேன்...சித்தப்பா - எழுந்திருங்க - எழுந்திருங்க - என்று அவர் மேல் இருந்த மாலையை எல்லாம் எடுத்து எறியத்தொடங்கினேன்..

பைத்தியம் மாதிரி...

ஒருவழியாக அங்கிருந்து அடுத்த வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்...

என் அப்பாவின் தம்பி - இவரும் சித்தப்பாதான் - 40 வயதுக்காரர்...பல
விஷயங்களில் எனக்கும் இந்த சித்தப்பாவுக்கும் கூட மிக நெருக்கம்...எனக்கு நீச்சல் பழக்கியது இவர்தான்...

சைக்கிள் பழக்கிவிட்டதும் இவர்தான்..
இவரும் காவல்துறையில் தான் இருப்பவர்..என்னை தேற்ற முயற்ச்சி செய்கிறார்...

ஆனால் என் கண்ணில் ஆறாக பெருகும் கண்ணீரை யாராலும் கட்
டுப்படுத்த முடியவில்லை....

அத்தை மகனை கூப்பிடுகிறார்...டேய் இவனை கூப்பிட்டுகிட்டு போய் பியர் வாங்கி குடிக்க வைடா...என்கிறார்...

வேண்டாம் என்று குப்புற படுக்கிறேன்...

டேய் எத்தனை வேளை சாப்பிடாமல் இருப்பே...உடம்பு என்னத்துக்கு ஆகும்...

நானும் எங்க சித்தப்பாவோடே போறேன்...இது நான்...

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுக்கிறார்...அதன் வெள்ளை பகுதியில், சட்டை பையில் இருந்து பேனா எடுத்து எழுதுகிறார் ஏதோ....

பிரபா...இவனை சாப்பிட வெளிய கூட்டிக்கிட்டு போ...அப்போ இந்த நோட்டை அவன்கிட்ட காட்டு.....வலுக்கட்டாயமாக வண்டியில் உட்காரவைத்து
அனுப்புகிறார்...

பிரபா...எனக்கு சாப்பாடு வேண்டாம்...ஒரு சிகரெட் மட்டும் வாங்கு..பாறை முருகன் கோயிலுக்கு போலாம்...என்றேன்...

சித்தப்பா கொடுத்த ரூபாய் நோட்டை எடுத்தான் பிரபா...

காட்டு அதில் என்ன எழுதினார் என்று பார்க்கலாம்...என்றேன்...

கொடுத்தான்...

"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ" என்று எழுதி இருந்தார்...

மீளாத்துயிலில் ஆழ்ந்த சித்தப்பாவை நினைத்து மீண்டும் கண்ணீர் வந்தது....இதை செலவு பண்ண வேண்டாம் என்று பர்ஸில் பத்திரப்படுத்தினேன்...

மூன்று ஆண்டுகள் கழிந்தது...சென்ற வாரம் அதிகாலை மூன்று மணிக்கு வீட்டு தொலைபேசி ஒலித்தது......பிரபாதான் பேசினான்...

மீண்டும் துக்க செய்தியா வரவேண்டும்...சின்ன சித்தப்பா...அப்பாவின் தம்பி...சித்தப்பா என்று அழைக்கக்கூடிய கடைசி மனிதர்...உளுந்தூர்பேட்டையில் சாலை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தபோது வேகமாக வந்த பர்வீண் டிராவல்ஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்ற செய்திதான் அது...

கார் வைத்துக்கொண்டு ஓடினோம்....

வழியெங்கும் அம்மா அவ்வப்போது அழுதுகொண்டே வந்தாள்...எனக்கு என்னமோ கண்ணீர் வரவில்லை...ஏ.டி.எம்.சென்று பணம் எடுத்தபோதும் எந்த உணர்ச்சியும் இல்லை...கார் ஏற்ப்பாடு செய்ய போனபோதும் எந்த சிந்தனையும் மனதில் எழவில்லை...

மீண்டும் அதே காட்சி...நடுவீட்டில் இந்த சித்தப்பாவும்....சித்தி தலைவிரி கோலமாக...கதறுகிறார்...சித்தப்பாவின் மூன்று பெண் பிள்ளைகள் கையை பிடித்துக்கொண்டு அழும் காட்சி கல்லையும் கரைய வைத்துவிடும் போல இருக்கிறது...

தேடுனாலும் கிடைக்கமாட்டாரேடா....என்று சித்தி அழும் காட்சியை காண சகியாமல் வெளியே வருகிறேன்...

மெல்ல ஒரு சிகரெட் பற்றவைத்து இழுக்கிறேன்...

என்னமோ அழுகை வரவில்லை...

படபடவென ஷாமியானா, சேர் ஏற்ப்பாடு செய்ய ஆள் அனுப்பு
கிறேன்...மேளக்காரர் வந்துவிட்டனர்...கல்லறை தோட்டத்தில் குழி தோண்ட ஆள் அனுப்புகிறேன்...சர்ச்சில் பிராத்தனைக்கு ஏற்ப்பாடு செய்யவும்,
குருவுக்கு சொல்லிவிடவும் ஆள் அனுப்பு வைக்கிறேன்...பெட்டி செய்ய அட்வான்ஸ் கொடுத்துவிட்டு - மாலை - ஊதுபத்தி - வாங்கி வருகிறேன்...

கிராமத்திலிருந்து வந்து சும்மா கட்டி அழுபவர்களின் குறிப்பறிந்து நுறு ரூபாய்களை கொடுக்கிறேன்...இது சாராயக்கணக்கு...

பாடியை எடுத்துப்போக கார் சொல்லிவிடுகிறேன்...மினி பஸ் ஒன்றை ஏற்ப்பாடு செய்து - வீட்டிலிருந்து கல்லறைக்கு போகிறவர்களின் பயணத்துக்கு வழி செய்கிறேன்...

ஆக்சிடென்ட் - பாடி - சீக்கிறம் எடுத்திடனும் - இல்லைன்னா வீச்சம் வந்திடும் என்று நான் பேசுவதை அதிர்ச்சியோடு கலங்கிய கண்களோடு பார்
த்துக்கொண்டிருக்கிறான் பிரபா...

ஆயிற்று...

சர்ச்சில் கொண்டுபோய் சிறிது நேரம் வைத்திருந்து - பிறகு மீண்டும் பெட்டியில் வைத்து - குழியில் இறக்கும் வரை எந்த சிந்தனையும் எழவில்லை...மீண்டும் அனைவரைடும் வீடு சேர்க்க வண்டிகளை ஏற்ப்பாடு செய்கிறேன்...

சர்ச் உதவியாளர் - மேளகாரர் - பஸ் - சாரயம் கேட்பவர்கள் - என ஒவ்வொருவராக செட்டில் செய்கிறேன்...

எல்லாரும் கிளம்பிப்போய்விட்டனர்...

நானும் பிரபா - கல்லறை வெட்டியான் மட்டும்...மம்பட்டி வைத்து அழுத்தம் கொடுக்கிறான்...

நல்லா அழுத்துங்க - கொஞ்சம் பார் மண் இருந்தா கொண்டுவந்து போடுங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்...

பிரபா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க்கிறான்...

தலைமாட்டில் இருக்க - அந்த சிலுவையை கொஞ்சம் அழுத்திவிடுங்க...என்றேன்...

வாடா பிரபா - ஒரு தம் போடலாம்...ரோட்டில் ஏறி - மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் சிகரெட் எடுத்து பற்றவைக்கிறேன்...

வெட்டியான் ஓடி வருகிறார்...தம்பி என்னை ஏதாவது கவனிச்சிட்டு போங்க....
பர்சை நோண்டுகிறேன்....

சில்லறை எல்லாம் கொடுத்திட்டேன் பெருசு...ஐனூறா இருக்கு......

இருங்க இருங்க...ஓரத்தில் போட்டோ வைக்கும் இடத்தில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்ததா நியாபகம்..பாக்குறேன்...

கசங்கிய ஐம்பது ரூபாய் விரல்களில் தட்டுப்படுகிறது...

இரண்டு விரல்களால் எடுத்தேன்..

வெள்ளைப்பகுதியில் ஏதோ எழுதி இருக்குது - ஆங்...இதை சித்தப்பா தானே கொடுத்தார்...

குறைந்த வெளிச்சத்தில் - கண்களை சுருக்கி - வாய்விட்டு படிக்கிறேன்...

"அழுதாலும் புரண்டாலும் மாண்டார் மீள்வதுண்டோ" ................................

ஒரு நிமிடம் மவுனம்...

அப்படியே மண்டியிட்டு உடைந்து அழத்தொடங்குகிறேன்....மீளாத்துயில் கொண்ட என் சித்தப்பா முகம் கண்களில் தோன்றுகிறது...

Friday, July 07, 2006

கைக்கடிகாரத்துக்கு என் அஞ்சலி....

கைக்கடிகாரத்துக்கும் எனக்கு ஏழாம் பொருத்தம்.....கிட்டத்தட்ட ஏழு வாட்சுகளை தொலைத்த அனுபவம்...அதை அப்படியே ஒரு பதிவாக்கினால் இன்னும் சில வாட்சு கதைகளை கேட்கலாமே...

வாட்சுகளை தொலைத்த கதை மட்டுமல்ல...முதல் வாட்சு வாங்கவே மிக கஷ்டப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்...வாட்சுடன் அவருக்கிருந்த உறவை ஏதோ பெரிய செண்டிமெண்ட் காட்சி மாதிரி விவரித்தார்...

என் தாத்தா வைத்திருந்த - கையை ஆட்டினால் சார்ஜு ஆகக்கூடிய வாட்ச் கூட என்னை பிரமிப்பூட்டியது ஒரு சமயம்.....இப்போது என் வாட்ச் கதை கேளுங்க..

என் முதல் வாட்சை 1992 வாக்கில் நெய்வேலியில் ஏழாம் வகுப்பு படித்தபோது வாங்கி கொடுத்த எங்க அப்பா அதை சுவாரசியமாக விளக்கினார்..டேய் இதுல எப்.எம் (FM) - ஏ.எம் (AM), எல்லாம் வரும் என்று..அப்போது திரு திரு என்று விழித்து அவரிடம் ஒரு கொட்டு வாங்கி - அது ரேடியோ அலைவரிசை என்று அறிந்து கொண்டேன்..என் சிறிய கைக்கு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் அதில் வரும் இனிமையான கொரகொர இசை மனதை மயக்கும்...மனதை மயக்கும் பணியை அது சிலசமயம் சரியாக செய்யவில்லை என்றாலும் ஸ்கூலில் இருந்த பலபேரை மயக்கியது...

முழு ஆண்டு விடுமுறைக்கு திருக்கோவிலூர் அத்தை வீட்டுக்கு வந்தபோது மாடிக்கு தலையணைகளை கொண்டுசென்று ஒரு வித்தியாசமான விளையாட்டு விளையாடுவோம்...ஏது ஏடகூடம்இல்லைங்க...தலையனையால அடிச்சிக்கறது...தலையனையிலேயும் / தலையிலையும் பஞ்சு பறக்கும்...அவ்வாறு விளையாடிய ஒரு வேளையில் ஆட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்கே என்று பக்கத்தில் இருந்த கொடியில் கட்டிவிட்டேன்...

அவ்வளவுதான்...மறந்து போய் மாடியிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டேன்...அடுத்தநாள் போய் தேடி பார்த்தால் போயிந்தெ...போயே போச்சு....

அதன் பிறகு கடலூர் புனித வளனார் உள்விடுதி (Boarding House) - மாணவனாக எட்டாம் வகுப்பு சேர்ந்ததால் அப்பா மறந்து போனார் என் ரேடியோ வாட்சு என்ன ஆனது என்று...

அடுத்த ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, சித்தப்பா ஒரு சீ.துரூ (see - threw ) வாட்ச் பரிசாக கொடுத்தார்...அதாவது உள்ளே இருக்கும் அனைத்து பார்ட்ஸ்ஸும் தெளிவாக தெரியும்..அதன் இயக்கத்தை பார்க்க முடியும்...எப்படி தொலைஞ்சது என்றே தெரியாம தொலைஞ்சு போயே போச்சு...

அதற்கடுத்த ஆண்டு சித்தப்பா குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றபோது அவர் ஒரு வாட்சு வாங்கி கொடுத்தார்..இதில் என்ன சிறப்பு என்றால், கோழி கூவுவது போல் அடிக்கடி கத்தும்...திரும்ப ஊருக்கு வந்தவுடன், மழையில் ஒருநாள் வெளியே கட்டிக்கொண்டு போனேன்....கோழி சீக்கு வந்து செத்துப்போச்சு..அட அதாங்க...வாட்சில் தண்ணீர் புகுந்து காலியாயிடுச்சி...

அப்புறம் சிலபல வாட்சுகள் தொலைத்தேன்...மொத்தம் ஏழு என்று நினைக்கிறேன்....

மற்றபடி வாட்சு இல்லையே என்று கவலைப்படுவதை நிறுத்திக்கொண்டேன்...அதுதான் நம்மிடம் நிற்பதில்லையே என்று...கல்லூரி காலத்தில் சில பெண்களிடம் டைம் கேட்டுவிட்டு கொஞ்சம் வழிய வாட்ச் இல்லாதது கொஞ்சம் உபயோகமாகத்தான் இருந்தது...

மொபைல் வந்தபிறகு வாட்ச் இல்லாதது ஒரு குறையா தோன்றவில்லை...ஆனாலும் நாம் ஒரு வாட்ச் வாங்கினால் என்ன என்று அவ்வப்போது தோன்றும்...

நேரத்தை தெரிந்துகொள்ள பல ஊடகங்கள் வந்துவிட்டதால் - இன்னும் சில ஆண்டுகளில் வாட்சை அருங்காட்சியகங்களில் தான் பார்க்க முடியும் போலிருக்கு...

அன்பு வாட்சுக்கு ( அல்லது கைக்கடிகாரத்துக்கு ) என் அஞ்சலி....

Wednesday, July 05, 2006

ஒரு விளக்கம்..

தமிழ்மணம் நிர்வாகிக்கு...

என் மறுமொழி நிலவர சேவை நீக்கி உள்ளீர்கள் - என்னை கலந்து ஆலோசிக்காமல். ஆகவே எனது விளக்க கடிதம் இதனுடன் அனுப்புகிறேன்.
அன்னை தெரசா பற்றி ஒரு தூஷன பின்னூட்டம் வந்தது எனது இந்த பதிவில்.

போலி பின்னூட்டத்தை நான் அனுமதித்ததால் என் மறுமொழி சேவை நீக்கியதாக தெரிவித்தது இந்த பதிவு

ஆரம்பத்தில் இருந்து வஜ்ரா மீது ஒரு சந்தேகம் எனக்கு...காரணம் அவர் பின்னூட்டம் இட்டு சில வினாடிகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டம் வந்தது...
பிறகு அவர் தனிமடலில் கூறினார்..குமரன் மடல் செய்தார்..அது அவராக இருக்க முடியாது, அப்படிப்பட்ட ஆள் அல்ல என்று...ஆகவே சந்தேகம் தீர்ந்தது..

இது நடந்தது வெள்ளி அன்று..

அடுத்த இரு நாட்களும் விடுமுறை எனக்கு...

நான் அந்த பின்னூட்டத்தை அப்படியே வைத்திருக்க வேறொரு காரணமும் உண்டு..வெளியிடத்தேவை இல்லை என்று நினைத்தேன்..இப்போது வெளியிடுகிறேன்...

ஒரு போலியாரின் போர்வையில் ஒளிந்துகொண்டு பல போலிகள் இங்கே...அனைத்து பதிவுகளிலும் கைவரிசையை காட்டிக்கொண்டு இருக்கின்றனர்...காலையிலும் போலி பின்னூட்டம், இரவிலும் போலி பின்னூட்டம், அதிகாலையிலும் போலி பின்னூட்டம்...

போலியாருக்கு வேறு வேலையே கிடையாதா...போலி பின்னூட்டமிடுவதை தவிர..ஆக பலர் போலியின் போர்வையில் போலி பின்னூட்ட கைவரிசை காட்டுகின்றனர் என்று தெரிந்தது...

ஆகவே,போலி போலிகளை கண்டறிந்து - தோலுரிப்பது தான் நோக்கம்..

கணிணி நெட்வொட்க் ஆராய்ச்சி மற்றும் பணி துறையில் கால் பதித்து வெற்றி நடைபோடும் என் கல்லூரி நண்பர்கள் உதவியுடன் வஜ்ரா பெயரில் / அல்லது வஜ்ராவே போட்ட சர்ச்சைக்குரிய பின்னூட்டத்தை வைத்து - கண்டுபிடிக்க முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்...

என் கல்லூரி நன்பர் ஒருவர் கூகுள் நிறுவனத்திலும் பணிபுரிவதாக கேள்வி.

நன்பர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்..

அவர்களுக்கும் விடுமுறை..எனக்கும் விடுமுறை..வெள்ளியன்றே தொலைபேசினேன்..அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் வெள்ளி மாலை இந்திய நேரத்திற்க்கு அவர்கள் பணி முடித்து சென்றுவிட்டனர்...

ஆகவே, திங்கள் அன்று அவர்களிடம் உள்ள மென்பொருள் உதவியுடன் முயற்ச்சி செய்யலாம் என்பதே திட்டம்.

ஆனால் நீங்கள் - அவசரப்பட்டுவிட்டீர்..என்னிடம் ஒரு மடல் அனுப்பி கேட்டிருந்தால் நான் தகுந்த தன்னிலை விளக்கம் கொடுத்திருப்பேன்..

இனிவரும் காலங்களிலாவது என் போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க யாராவது புகார் கொடுத்தால் - இருதரப்பு வாதங்களையும் கேட்டு பிறகு முடிவெடுக்கவும்...

மேலும் மறுமொழி நிலவரச் சேவை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்..

இதன் நகல்:

காசி
லக்கிலூக்
விடாது கருப்பு
குமரன்
வெற்றி
முத்து தமிழினி
டோண்டு
ஜெயராமன்
வஜ்ரா
கானா பிரபா
கொங்கு ராசா
துளசி கோபால்
இளவஞ்சி
அனுசுயா
கவிதா
நாமக்கல் சிபி
பின்னூட்ட நாயகர் கோவி.கண்ணன்
பாஸ்டன் பாலா
குழலி
ரோசா வசந்த்

( ரவி மனதுக்குள் சொல்லிக்கொள்வது : (மனம் 1) டேய் டேய்..இப்படி பதிவு போட்டதால தமிழ்மனத்தின் இறையான்மைக்கு பங்கம் வந்திடுத்து என்று தமிழ்மணத்தில் இருந்தே தூக்கிவிடுவாங்க... ( மனது 2 சொல்கிறது) அடப்போடா..தமிழ்மணம் இல்லைன்னா தேன்கூடு...அது இல்லைன்னா ஒரு குருவிக்கூடு...எதுவுமே இல்லைன்னா ??)


விடை கிடக்கிறது : மனம் 1 சொல்கிறது : ஆபீஸ் வேலையை கவனிக்க வேண்டியதுதான் ஹி ஹி ஹி

Tuesday, July 04, 2006

எதுல போய் முடியுமோ தெரியவில்லை

திருமணத்தில் இன்றைய இளைஞர்கள் / இளைஞிகள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பது உண்மை..

அதுவும் அதிவிரைவான இயந்திர வாழ்க்கையில் கூடுதல் சுமையாகவே தெரிகிறது சிலருக்கு...கல்யாணமா...எனக்கா..ஹா ஹா ஹா என்று சிரிக்கும் அளவுக்கு வந்திட்டனர்.


சமுதாயத்துக்காகத்தான் திருமணம் செய்ய ஒத்துக்கொள்கின்றனர்...
பரஸ்பர அன்பு இல்லாமல் திருமணம் முடிந்துவிடுகிறது...


சிறிய விஷயத்துக்கு கூட விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அருகி வருகிறது....நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்..என்ற கேள்வியை தாங்களாகவே எழுப்பி அதில் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவையும் எடுத்துகொள்கின்றனர் பெரும்பாலானவர்கள்...

சலிப்பு மனப்பாங்கு, ஆழமான பிடிப்பு இல்லாத வாழ்க்கை முறை, எனக்கென்ன என்ற போக்கு பெருகி வருகிறது...

இந்த நிலை தொடரும் என்று தான் நினைக்கிறேன்...பரிணாம வளர்ச்சியின் அங்கமாகவே பார்க்கிறேன்...

I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...

பிறருக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றனர்..

பொருளாதார சுகந்திரம் இதற்க்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது...

என்னமோ போங்க...எதுல போய் முடியுமோ தெரியவில்லை

இது எப்பிடி இருக்கு....

தமிழ்மண தளத்தில் வெற்றி ஆள்மாறாட்ட பின்னூட்டம் குறித்து எழுதினார்..அதற்க்கு என் பின்னூட்டம் இது...வெற்றி புரிந்துணர்வோடு ஒரு பின்னூட்டம் கூட வைத்து இருக்கிறார்..

ஆள்மாறாட்டப்பின்னூட்டம் சரி தலைவரே...சிலர் சொந்த பெயரிலேயே ரொம்ம்ப கேவலமாக பின்னூட்டமிடுகிறார்களே என்ன செய்யப்போறீங்க அதற்க்கு...

http://vaithikasri.blogspot.com/2006/06/blog-post.html

இதில் அன்பர் மியூஸ் அன்னை தெரசாவின் மீது தான் சேற்றை வாரி இறைக்கிறார் என்று பச்சை குழந்தைக்கு கூட தெரியும்...அதை நீக்கும்படி கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

மேலும் சில கேள்விகள்..

நீங்கள் இந்த முடிவு எடுக்கும்முன் என்னை ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை...ஒரு மடல் அனுப்பி இருக்கலாமே...

அந்த போலி பின்னூட்டத்தை வஜ்ரா போடவில்லை என்று நீங்கள் நம்புவதற்க்கு அழுத்தமான காரணம் உள்ளதா ? தயவுசெய்து தெரியப்படுத்தவும்..

அதேபோல் அதை அவர்தான் போட்டார் என்று நான் ஏன் நம்பக்கூடாது...
நீதிபதி என்பவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும்..அப்போதுதான் உண்மை விளங்கும்...

******************************************************************************
அலுவலகத்துக்கு வந்திட்டபின் தமிழ்மணத்தை ஓப்பன் செய்யவில்லை என்றால் கை-எல்லாம் நடுங்குது...உடம்பு உதறுது...அடிக்கடி ரெப்ரஷ் செய்து பார்க்கவில்லை என்றால் கனகனன்னு கொதிக்குது...தலை சுத்துது.....முட்டிக்கு முட்டி வலிக்குது..அதோட முதுகும் வலிக்குது...இந்தமாதிரி எபெக்ட் ஆன பிறகு நம்மை தூக்கினா எப்படி..அதான்...ஒரு பதிவு போட்டு அது வருதான்னு பார்க்க ஒரு மொக்கை..
*******************************************************************************

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....